Showing posts with label அன்னக்கொடை. Show all posts
Showing posts with label அன்னக்கொடை. Show all posts

Wednesday, April 18, 2012

facebook நண்பர்கள் அரவிந்த் கண்மருத்துவமனை இணைந்து ஆதரவற்றவர்களுக்கான கண் பரிசோதனை முகாம்


18/04/12 அன்று  முகநூல்  அன்னக்கொடை ,புன்னகை தோட்டம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து , கோவை அன்னை தெரேசா காப்பகத்தில் இருக்கும் சுமார் நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை,மற்றும் கண் அறுவை சிகிச்சைக்கு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன் படி அங்குள்ளவர்களுக்கு  18/04/12 காலை அரவிந்த் மருத்துவமனை மருத்துவர் dr. வித்யா தேவி தலைமையில் 11 பேர் கொண்ட குழு காப்பகத்திற்கு நேரில் வந்து அங்கு இருக்கும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஆதரவற்றவர்களுக்கு கண் பரிசோதனை நடத்தினர் பலருக்கு கண் கண்ணாடி பொருத்தப்பட்டு  , அறுவை சிகிச்சைக்கு   தகுதியான கண்களில் குறையுள்ளவர்களை 7 பேரை தேர்வு செய்து மருத்துவமனைக்கு அறுவைசிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டு .  அவர்களுக்கு  அறுவை சிகிச்சை 20/04/2012 அன்று அவர்களை நல்லபடியாக அன்னை தெரேசா காப்பகத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர் .
இந்த முகாமிற்கு முகநூல் அன்னக்கொடை ,புன்னகை தோட்டம் நண்பர்கள் ஏற்பாடு செய்ய நண்பர்கள் ஆடி தபசு, Yamidhasha Nisha , Madhu Alex. மற்றும் magi mahendran  கலந்துகொண்டு முகாம் சிறப்பாக நடக்க உதவினர்.
மேலும் இந்த முகாமிற்கு ஆதரவளித்த முகநூல் அன்னக்கொடை, புன்னகை தோட்டம் நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
நாம  எல்லோரும்  இருக்கும்  வரை யாரும் அநாதை என்பது இல்லைங்க .... 

Monday, April 02, 2012

உண்மையான இன்பசுற்றுலா~மகேந்திரன்,

யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சந்தோசப்படுத்தலாம் அதுவும் ஆதரவற்றவர்களை  மனதார மகிழ்விப்பது என்பது கடவுளுக்கு செய்யும்  தொண்டாகும் , முக நூலில் அன்னக்கொடை மற்றும்   புன்னகைதோட்டம் என்னும் குழு  இதில் உள்ள நண்பர்கள் கோவையில் உள்ள பிரபஞ்ச அமைதி ஆஷரமத்தை  சேர்ந்த நூறு குழந்தைகளை மகிழ்விக்க முடிவு செய்து  அதன்படி முகநூளின் உறுப்பினர் உமா தேவி அவர்கள் உதவியுடன் அந்த ஆஷரமத்தின்  குழந்தைகளை கோவை அருகே உள்ள திரு மூர்த்தி மலை , அமராவதி ஆணை இங்கு அழைத்து செல்ல முடிவெடுத்தது ,  இந்த குழு 30/03/12 அன்று ஆஷரமத்து  நிர்வாகி சிவா ஆதமா அவர்களின் அனுமதி பெற்று 31/03/12  இன்ப சுற்றுலா பயணம் முடிவானது.
31/03/12 அன்று விடியற் காலை 5 மணிக்கு பிரபஞ்ச அமைதி ஆஷரமத்தில் இருந்து இரண்டு பேருந்தில் 35 சிறுமி 50 சிறுவர்கள் ஆசரமத்தை சேர்ந்த நிர்வாகிகள் 8 பேர் மற்றும் முக நூலில் அன்னக்கொடை மற்றும்   புன்னகைதோட்டம் குழு நண்பர்கள் ஸ்ரீ வசந்தா, சுதர்சன் , மது, நிஷா , மகேஷ் குமார் ,ஈஸ்வரி  மற்றும் உமா தேவி அவருடைய மகன் பிரவீன் , உட்பட  இன்ப சுற்றுலாவிற்கு பயணம் துவங்கியது  .
பேருந்தில் குழந்தைகளும் குழு நண்பர்களுக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை பேருந்து அமராவதி அணைக்கு சென்றது. ஆனால் அங்கு சின்ன ஏமாற்றம். என்னவெனில், அணையில் தண்ணீர் மிகவும் குறைவாகவே இருந்தது. அதனால், குழந்தைகள் சிறிய ஏக்கத்துடன் காணப்பட்டார்கள். அங்கு சிறுவர் விளையாட்டு பூங்கா இருந்தது அதில் காப்பக நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள் காலை உணவு அருந்தி விட்டு பூங்காவில் உள்ள சறுக்கு விளையாட்டு ,ஊஞ்சல் விளையாட்டு ஓடி விளையாட்டு என குழந்தைகள் விளையாட அணையில் குளிக்க முடிய வில்லை என்ற கவலை மறந்தது . மதியம் 2 மணிக்கு  திரு மூர்த்தி மலைக்கு பயணம் செய்தனர் ,
அங்கு திரு மூர்த்தி  அணையில் தண்ணீர் இருப்பதை கண்டதும் குழந்தைகள் வண்டியை இங்கேயே நிறுத்த சொல்லி தண்ணீரில் ஆட அடம்பிடித்தனர் , ஆனால் மலை அடிவாரத்தில் சிவன் கோவில் இருப்பதால் கோவிலில் சாமி தரிசனம் முடித்து மதிய உணவு அருந்தி விட்டு குளிக்க உறுதி அளித்ததால் குழந்தைகள் சமாதானம் ஆனார்கள் ,
கோவிலில் குழந்தைகளுக்காக அர்ச்சனை தரிசனம்  நடந்தது , அதனை தொடர்ந்து குழந்தைகளுக்கு உணவு அளிக்கப்பட்டது . உணவு உண்டதும் குழந்தைகளின் முகத்தில் அளவில்லா புன்னகை மகிழ்ச்சி தண்ணீரில் ஆடபோகிறோம் என்று .
குழந்தைகள்  குளிப்பதற்காக தண்ணீரில் பகுதிக்கு அழைத்து வரப்பட்டது , நிர்வாகிகள் மற்றும் குழு நண்பர்கள் மேற்ப்பார்வையில் குழந்தைகள் தண்ணீரில்  விளையாட ஆரம்பித்தனர் , ஆஹா அவர்களின் மகிழ்ச்சியை காண்பதே மிக மகிழ்ச்சியாக இருந்தது , தண்ணீரில் ஓடி விளையாடுவது ஒருவரின் மேல் ஒருவர் ஏறி குதிப்பதும் நீச்சல் அடிப்பதும் ,அதுமட்டும் அல்லாது நண்பர்களோடு ஒன்றாய் இணைந்து  சகஜ மாய் விளையாட நாமும் குழந்தைகளாகி போனோம்.அந்த குழந்தைகள் தாம் ஆதரவற்றவர்கள் என்ற நிலை மறந்து , அதை மறக்க வைக்க செய்த நமது முக நூலில் அன்னக்கொடை மற்றும்   புன்னகைதோட்டம் குழு நண்பர்களுக்கு எப்படி நன்றி சொன்னாலும் அது மிகையாகாது.
குழந்தைகள் மாலை 5 மணி அளவில் எல்லோரும் குளித்து விட்டு தேநீர் குடிப்பதற்காக ஒரு பக்கம் ஒதுங்கி அங்கு  இனிப்பும் காரமும் தேநீரும் வழங்கப்பட்டு இன்பச்சுற்றுல  நிறைவு கூட்டம் நடந்தது .
அதில் கலந்துக்கொண்ட முக நூலில் அன்னக்கொடை மற்றும்   புன்னகைதோட்டம் ஸ்ரீ வசந்தா, சுதர்சன் , மது, நிஷா , மகேஷ் குமார், உமா தேவி அவருடைய மகன் பிரவீன் பிரபஞ்ச அமைதி ஆஷரமத்தை சேர்ந்த அனைவருக்கும் நன்றி கூறப்பட்டது.
அதனை தொடர்ந்து


1 . பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில், சிறந்த மாணவர் மாஸ்டர் மணிகண்டன், மற்றும் சிறந்த மாணவி குமாரி. தாரணி அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது, 2 . இந்த மகிழ்ச்சியான பயணத்திற்கு உதவி செய்த திருமதி. உமா தேவிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
3 . இந்த பயணத்திற்கு, அன்னக்கொடை மற்றும் புன்னகைதோட்டம் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்த திருமதி. ஸ்ரீவசந்தாவிற்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது
4 . இந்த சுற்றுலாவிற்கு வந்த அனைவருக்கும் இனிப்புகளை தயாரித்து கொண்டு வந்த திருமதி. நிஷாவிற்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
5 . குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொண்ட, திரு. சுதர்சன், திரு. மது, மற்றும் மாஸ்டர் பிரவீண் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
6 . இந்த சுற்றுலா விசியத்தை கேள்விப்பட்டு, உடனே நமக்கு உதவிக்கு வந்த திருமதி. ஈஸ்வரி அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
7 . சாலையோரம், பத்துவருடமாக ஆதரவை தொலைத்து பரிதாபமாக இருந்த பழனி என்பவரை அவரது குடும்பத்தை தேடி, சேர்க்க உதவிய திரு, மகேந்திரனுடைய நண்பர் ,திரு. மகேஷ் குமாருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

அதோடு பயணப்  பேருந்தில் ஆடல் பாடலுடன்  கோவைக்கு திரும்பினோம் .
வழக்கமாக சொல்வது தாங்க ஆனாலும் அது தான் உண்மையானதும் கூட மகிழ்ச்சி என்பது மற்றவர்களை மகிழ்விப்பதில் தாங்க இருக்கிறது,
ஆதரவற்றவர்கள் என்று யாரும் இல்லை முக நூலில் அன்னக்கொடை மற்றும்   புன்னகைதோட்டம் என்னும் குழு  இதில் உள்ள நண்பர்கள் இருக்கும் வரை அதற்க்கு எடுத்துக்காட்டு இந்த இன்ப சுற்றுலாவாகும்.
நன்றி
~அன்னக்கொடை மற்றும்   புன்னகைதோட்டம்
 ~மகேந்திரன்,

Sunday, September 11, 2011

அன்னக்கொடை...

அன்னக்கொடை
அன்னதானம் ( மகேந்திரன் )  என்னுடைய நீண்டநாள் கனவு...
கோவில் விழா, திருமண விழா, பிறந்தநாள் விழா, போன்ற விழாக்களில் எல்லோரும் அன்னதானம் செய்கிறார்கள்...
இன்னும் சிலபேர் உணவு மீதமானதால் அதை அன்னதானமாக செய்கிறார்கள், இதில் சாப்பிட வருகிறவர்கள்  வசதியானவர்கள்,
வசதியற்றவர்கள், வழிப்போக்கர்கள் என வருகிறார்கள் சிலபேர் போதையிலும் வருகிறார்கள்...
இதில் எனக்கு உடன்பாடில்லை,
எத்தனையோ பேர் உறவுகள் அறியாமல் தாய் தந்தை இழந்து எங்கு இருக்கிறோம் எப்படி இருக்கிறோம் என்று கூடதெரியாமல் உடுத்த உடை இல்லாமல் உன்ன உணவு இல்லாமல், படிக்கவும் வழி இல்லாமல் இருந்து வருகிறார்கள்,
அவர்களுக்கு வயிறார உணவு வழங்குவதே அன்னதானம் என மனதில் பட்டது...


அதை செயல்படுத்த நானும் எனது நண்பர்களும் (தபசுராஜ் , கண்ணன் , மகேஷ் , அருள்ராஜ்) முடிவு செய்து பொதுமக்களுடன் இணைந்து வாரம் ஒருநாள் ஞாயிறு மதிய வேளையில் 100 ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகிறோம்,
இன்றோடு (11/09/2011) 25 வது வாரம் ஆகிறது...
இந்த சேவையில் தாங்களும் பங்குகொள்ள விரும்புகிறோம்...
முடிந்தவரை செய்கிறோம்...!
முடிந்தால் எல்லாநாளும் எல்லாவேளையிலும் செய்வோம்...!
வாருங்கள்...!
தொடர்புக்கு 9843344991 


இன்றைய அன்னக்கொடை 25/09/11 G .கந்தசாமி


நமது நண்பர் கோவையை சேர்ந்த  G .கந்தசாமி, (9443911381) என்பவர் தனது 40 வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார் , நாம் அன்னக்கொடையுடன் இணைந்து இந்த மதியவேளை ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி அவர்களை மகிழ்வித்தார் ,

இன்றைய அன்னக்கொடை 02/10/11
Uma Ganesh Iyer
கார்னர் ஸ்டோன்
அன்னக்கொடை ஆதரவற்ற குழைதைகளுக்கு மதிய உணவு வழங்கிட நமது facebook தோழி
Uma Ganesh Iyer அவர்கள் இரண்டாயிரம் ருபாய் அனுப்பி வைத்திருந்தார் , அதனை கொண்டு இன்று 02/10/2011 கார்னர் ஸ்டோன் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது, 

இன்றைய அன்னக்கொடை 09/10/11  பொன்னையா கண்ணன் facebook நண்பர் 

கோவை மணியகாரன் பாளையத்தில் இமயம்  பெண்கள் இல்லம்  ,இங்கு கணவனாலும் ,குடும்பத்தராலும் கைவிடப்பட்ட அபலை பெண்களுக்கு இன்று ஞாயிற்று கிழமை மதியம் பசிக்கு உணவு வழங்கப்பட்டது இதில் நமது face book நண்பர்
Ponnaiah kannan நேரில் கலந்துக்கொண்டார்...
~மகேந்திரன்