சமீபத்தில் நடந்த கோவைச் சம்பவம் ஒரு பெண்ணின் உயிரைக் குலைத்தது மட்டுமல்ல, சமூகத்தின் சிந்தனையையும் குலைத்திருக்கிறது.
அவள் எதற்காக அந்த இடத்திற்குச் சென்றாள்? அந்த நேரத்தில் ஏன் ஒரு ஆணுடன் இருந்தாள்? — என்று கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இந்த கேள்விகள், உண்மையில் குற்றவாளியை நோக்காமல் பாதிக்கப்பட்டவளையே மீண்டும் தண்டிக்கும் வழியாக மாறியிருக்கின்றன.
பெண்ணின் சுதந்திரம் பற்றி பேசும் சிலர் “ஒரு பெண் எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் செல்லலாம்” என்று வலியுறுத்துகிறார்கள்.
அது தவறல்ல — ஏனென்றால் பெண்ணுக்கு முழு சுதந்திரம் இருக்க வேண்டும்.
ஆனால் அந்த சுதந்திரம் விவேகம் இன்றி பயன்படுத்தப்பட்டால் அது ஆபத்தாக மாறும் என்பதையும் மறக்கக் கூடாது.
சுதந்திரம் என்பது “என்ன வேண்டுமானாலும் செய்வது” அல்ல;
அது “சரியானதைச் செய்வதற்கான உரிமை”.
இரவு நேரத்தில், ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் தனியாகச் செல்வது யாருக்கும் — ஆண், பெண் — அபாயகரமானதே.
ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருப்பது தவறில்லை; ஆனால் அவர்கள் சந்திக்கும் இடம், நேரம், சூழல் — அவை பாதுகாப்பிற்கும் மரியாதைக்கும் முக்கியமானவை.
சமூகவிரோதிகள் நடமாடும் இடத்திற்கெல்லாம் செல்வது, “சுதந்திரம்” என்ற பெயரில் நியாயப்படுத்த முடியாது.
அப்படி செய்வது நம் சுதந்திரத்தின் அர்த்தத்தையே மாசாக்குகிறது.
நமது சுதந்திரம் மரியாதையுடன் இணைந்திருக்க வேண்டுமேயன்றி, ஆபத்துக்கு அழைக்கும் ஒரு சாதனமாக மாறக்கூடாது.
ஒரு பெண் எங்கு சென்றாலும் அவள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவளது அடிப்படை உரிமை.
ஆனால் அவள் எங்கு, எப்போது, யாருடன் செல்வது என்ற தீர்மானத்தில் அவளது விவேகமும் பாதுகாப்பு உணர்வும் அவசியம்.
அதனால் நாம் புரிந்துகொள்ள வேண்டியது தெளிவானது —
«சுதந்திரம் இருக்கட்டும்… ஆனால் விவேகம் வழிகாட்டட்டும்.
சுதந்திரம் மரியாதையுடன் கலந்தால் சமூகம் உயர்ந்திடும்;
விவேகம் இன்றி கலந்தால் சமூகவிரோதிகள் வளர்ந்திடுவார்கள்.
~ மகேந்திரன்
| Tweet | ||||
No comments:
Post a Comment