Sunday, January 05, 2014

எனக்கென்ன வந்தது என்று இல்லை விழிகாவலன் முருகேசன் ~ஈரநெஞ்சம்

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. என்ற வள்ளுவரின் வாக்கை இன்று நிரூபித்தவர் திரு. முருகேசன் அவர்கள்.

ஈரநெஞ்சம் அமைப்பின் உறுப்பினரும் கோவை ஆம்புலன்ஸ் நிறுவனத்தின்  ஓட்டுனரான முருகேசனின் வயது 28.
கடந்த 31/12/2013  அன்று கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த R.ஆனந்த் என்பவர் தனது தாயார்   சாந்தகுமாரி வயது  70  உடல்நிலை சரியில்லை, மருத்துவமனைக்கு அழைத்து  வேண்டும் என திரு. முருகேசன் அவர்களை அழைத்தார் .
உடனடியாக முருகேசன் ஆம்புலஸ் எடுத்துவந்து நெஞ்சுவலியால் துடித்துக்கொண்டு இருந்த 
சாந்தகுமாரி   அம்மாவை  சிகிச்சைக்காக அவரது உறவினர்களுடன்  KG மருத்துவமனை  அழைத்து செல்ல   சாந்த குமாரி  அம்மா துரதிர்ஷ்டவசமாக வழியிலேயே இறந்து விட்டார்.மருத்துவமனையில்  மருத்துவர்கள் மாரடைப்பால்  சாந்தகுமாரி  இறந்ததை உறுதி செய்ததை தொடர்ந்து  உறவினர்கள் மீண்டும் அம்மாவின்  உடலை எடுத்துக் கொண்டு கோவை ஆம்புலன்ஸ்  முருகேசன் வாகனத்திலேயே  வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அந்தசமையம்
சாந்தகுமாரி அம்மாவின்  உறவினர்களிடையே   திரு. முருகேசன், கண்தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். இறந்தவரின்  கண்களை தானம் செய்வதால்  இருவருக்கு பார்வை கிடைக்கும் எனவும், சாந்தகுமாரி அம்மாள் எதோ ஒரு ரூபத்தில் மீண்டும் உயிருடன் வாழ்வார் என்றும் எடுத்துரைத்துள்ளார். இதனால் கண் தானம் பற்றிய உண்மைகளை புரிந்து கொண்டு  இறந்த சாந்தகுமாரி அம்மாவின் கணவர் திரு. ரங்கநாதன் , மகன் ஆனந்த் மருமகள்  லக்ஸ்மி ப்ரியா அவர்கள் அம்மாவின்   கண்களை தானம் செய்ய   மனப்பூர்வமாக  சம்மதித்து அதற்க்கான வழிமுறைகளை செய்து தருமாறு திரு. முருகேசனிடம் வேண்டிக்கொண்டனர் . உடனடியாக முருகேசன்  அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தகவல்  கொடுத்து இறந்த   சாந்தகுமாரி அம்மாவின் கண்களை தானம் செய்ய ஏற்பாடு செய்தார் . உடனடியாக அங்கு வந்த அரவிந்த் கண்மருத்துவமனை மருத்துவர்கள்   சாந்தகுமாரி அம்மாவின் கண்களை பத்திரமாக எடுத்து சென்றனர் . கண்தானம் போன்ற நல்ல விசயத்துக்கு தங்களை வழி நடத்தியதோடு சாந்தகுமாரி அம்மாவின் கண்களுக்கு உயிர் தந்த முருகேசன் அவர்களுக்கு சாந்தகுமாரி அம்மாவின் உறவினர்கள்  நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


 
சாந்தகுமாரி அம்மாவின்  மகன் ஆனந்த் அம்மாவின் கண்கள் தானம் செய்ததை பற்றி கூறும் போது "அம்மா  இறந்த துயரம் ஒரு புறம்  இருந்தாலும் அம்மா கண்களால் இன்னொரு உயிருக்கு வாழ்க்கை கொடுத்து பார்வையால் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார் என்பதை நினைக்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது . கண்தானம் செய்வதன் மூலம் பலருக்கு பார்வை கிடைக்கும் எல்லோரும் கண்தானம் செய்யவேண்டும் என்றும் நாங்களும் எங்களது கண்களை தானம் செய்வோம் என்றும் கூறினார்".

 
  உறவினர்கள் இறந்த துக்கம் ஒருபுறம் இருந்தாலும் இருவருக்கு நல்ல வாழ்கையை ஏற்ப்படுதிதரும் சந்தர்ப்பத்தை தவறவிடாமல்  சாந்தகுமாரி அம்மாவின் கணவர் ரங்கநாதன் , மகன் ஆனந்த் மருமகள்  லக்ஸ்மி ப்ரியா அவர்கள் இறந்தவரின் கண்களை தானம் செய்துக்  கொடுத்ததற்கு  அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் அது மிகையாகாது. . 

சாந்தகுமாரி அம்மாவின் கண்களை மூடி மரணம் இருளை தந்தாலும் சாந்தகுமாரி அம்மா இரண்டு பேருக்கு வாழ்வில் வெளிச்சம் ஏற்படுத்தி தந்துள்ளார். அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம். இறந்தும் உயிர் வாழ கண்தானம் செய்வோம். இந்த இளம் வயதிலேயே கண்தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த நற்செயலை செய்த முருகேசன் அவர்களை நாம் மனதார பாராட்டியே ஆக வேண்டும். தனது கடமையை மட்டும் செய்வோம் என்று எண்ணாமல் கண்தானம் குறித்து சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு , இரண்டு பேருக்கு வாழ்வில் வெளிச்சம் தந்த முருகேசன் நலம் பல பெற்று நீடூழி வாழ வேண்டுவோம்.

~ஈரநெஞ்சம்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment