Tuesday, July 03, 2012

ஆதரவற்ற பத்தாம்வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு சிறந்த மாணவர்களுக்கு ஊக்கதொகை,

"ஈர நெஞ்சம் பணிகள்"
******
ஆதரவற்றவர்களின் நலனுக்காக உருவானது  "ஈர நெஞ்சம்" என்ற அமைப்பு என்பதை  நிரூபிக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள சுமார் 1400 ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் வளரும் பெற்றோர்கள் அற்ற மாணவர்கள் கடந்த கல்வி ஆண்டில்  பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கதொகை மற்றும் ஈரநெஞ்சம் அமைப்பின் ஊக்க சான்றிதல் வழங்க முடிவு செய்ததை 04 .06 .2012  அன்று ' ஈர நெஞ்சம்' அறிவித்திருந்தது. அதன்படி இதுவரை  150  ஆதரவற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதல்கள் கிடைக்கப் பெற்றன. இன்னும் வந்து கொண்டு இருக்கிறது. இதன், முதல் கட்டமாக  ஊக்கதொகை மற்றும் ஊக்க சான்றும் கொடுக்க கோவையை சுற்றி உள்ள ஆதரவற்ற காப்பகத்தில் உள்ள அதிக மதிப்பெண் எடுத்துள்ள 12  ஆதரவற்ற  மாணவர்களை நேரில் அழைக்கப்பட்டு அவர்களுக்கு ஊக்கதொகை மற்றும் ஊக்க சான்றிதல்களும் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி,  கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள பிரபஞ்ச அமைதி சேவா ஆசரமத்தில் 30 .06 .2012 அன்று நடந்தது. இதனுடன், அந்த காப்பகத்தை சேர்ந்த  185 ஆதரவற்ற குழந்தைகளை மையமாக கொண்டு சுமார் 200 க்கும் மேற்ப்பட்ட குழந்தைகளுக்கு "ஈர நெஞ்சம்", கோவை பார்வை இழப்பு தடுப்பு சங்கம், அரவிந்த் கண்மருத்துவமனை  இணைந்து கண்பரிசோதனை  முகாம் நடத்தப்பட்டது.  மேலும், இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும்  மதிய உணவும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு நேற்று 30 /06 /12 அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 வரையிலும் நடந்தது. இந்த விழாவில் திருப்பத்தூரில்  சாலையில் மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில்  இருந்த ஒருவரை திருப்பத்தூரில் உள்ள அன்பு இல்லம் என்னும்  காப்பகத்தில் சேர்த்து அவருக்கு குணமாகி அவரது  உறவினர்களோடு இணைய காரணமாக இருந்த கோவையை சேர்ந்த சுதர்சனன், கோவையில் 90 வயதான ஒரு மூதாட்டி மூன்று நாளாக சாலையில் மயங்கி விழுந்த அவரை அவருக்கு மருத்துவ உதவி கொடுத்து அவரை அவரது வீட்டாருடன் சேர்த்துவைத்த மோகன சுந்தரம் இருவரையும் பாராட்டி  பொன்னாடை போர்த்தப்பட்டது. மற்றும், " ஈர நெஞ்சம்' அமைப்பின் சார்பில், 12 மரக்கன்றுகளும் நடப்பட்டது   என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த "ஈர நெஞ்சம்" தொண்டூழியர்களுக்கும் அனைவருக்கும் '"ஈர நெஞ்சம்" நினைவு படம் வழங்கப்பட்டது.இந்த  நிகழ்விற்க்காக உடல் உழைப்பையும், பொருள் உதவியும் நல்கிய அனைத்து உள்ளங்களையும் "ஈர நெஞ்சம்" இரு கரம் கூப்பி வணங்குகிறது. ******
நன்றி (31 /2012 )
ஈர நெஞ்சம்
......
“EERA NENJAM”  Activities
******
“EERA NRNJAM” had announced, educational sponsorship to the pupils, who have excelled in their 10th standard and +2 board examinations, from orphanages and homes of Tamil Nadu state on 04.06.2012. We have received about 150 requests from various homes of Tamil Nadu and still on going. In conjunction with that for a first phase, we have organized a function to give away the certificates and money to twelve children, hailed from Coimbatore vicinity. This function has been conducted along with the Free eye camp on 30.06.2012 from 09.00 a,m. to 05.00 p.m. at Universal Peace Foundation (UPF), Karumaththampatti, Coimbatore. There were about 200 children from various homes, in and around Coimbatore have been benefitted in this free eye camp, co-organized by EERA NENJAM, Coimbatore District Blindenss Control Society, Arvind eye hospital, Coimbatore and UPF,Coimbatore. Lunch was provided to all participants. On this occasion, Mr Sudarsan was honoured for reuniting a mentally–ill health person to his family with the help of Anbu Illam at Tirupattur. Mr Mohana Sundaram was honoured for reuniting an elder lady (90) who was unattended for three days at road-side. We have also planted 12 trees at UPF on this occasion. All the ‘EERA NENJAM volunteers have been honoured by memento of EERA NENJAM photos. Finally, Mrs Mani Megalai have given a vote of thanks.
“EERA NENJAM” Trust hereby salute all the persons who have given their time and services and the sponsors on this occasion.
~Thanks (31/2012)
EERA NENJAM

இலவச கண்பரிசோதனை முகாம் / Free Eye Camp Function

கல்வி ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழை திரு தபசுராஜ், "ஈர நெஞ்சம்" பொருளாளர் வழங்குகிறார். /"EERA NENJAM" Treasurer Mr Thabasuraj gave away the certificate and cheque to a student.

"ஈர நெஞ்சம்" பொறுப்பேற்ற இரு மாணவர்களுக்கு தலா, ரூபாய் 5 ,000 வழங்கப்பட்டது. /Two students were given Rs. 5,000 each for their educational expenses

திருமதி. மணிமேகலை அவர்கள் நன்றியுரை நவில்ந்தார்./Mrs Mani Megalai gave a vote of thanks.

மாணவ மாணவியர்கள், வரிசையில் நின்று கண் பரிசோதனை செய்து கொள்கிறார்கள். /Pupils were standing on a queue for their turn-Eye check up

கண் பரிசோதனை /Eye check up

கண் பரிசோதனை /Eye check up

கண் பரிசோதனை /Eye check up

மரக்கன்றுகள் நடுதல்/Tree plantation

"ஈர நெஞ்சம்" தொண்டூழியர்களுக்கு நினைவு பரிசு வழங்குதல் / Memento

மதிய உணவு வழங்குதல்/Lunch to all participants


திரு. சுதர்சனின் சேவை / Mr Sudarsan's service


திரு.மோகன சுந்தரத்தின் சேவை / Mr Mohan Sundaram's service
thanks to DC 
~மகேந்திரன் 
ஈரநெஞ்சம் 
9843344991 

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

sakthi said...

அன்புள்ள " ஈர நெஞ்சம் " மகி சார் ,

தங்கள் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் .நீங்கள் வாழ்க பல்லாண்டு ! வளர்க உங்கள் சமூக சேவை !

நட்புடன் ,
கோவை சக்தி

Post a Comment