Saturday, August 13, 2011

கனடாவில் வாழும் FACEBOOK நல் இதயம் செல்வி மாறன்...

நம்பிக்கை வேணும்க அதற்கும் மேல மனசும் வரணும்க...
கோவையில் (ஸ்ரீ அன்பாலயம் மற்றும் கார்னர் ஸ்டோன்) ஆதரவற்றோர் இல்லம் பிறகு என்னுடைய சமூக சேவைகளை  பற்றி 
FACEBOOK ல் உள்ள எனது profil ல்

முழுமையாக ஆராய்ந்து, தெருக்கள் இல்லைங்க , ஊர்கள் இல்லைங்க , மாநிலம் இல்லைங்க , நாடுகளும் இல்லைங்க
கண்டங்கள் தாண்டி இருக்கும் கனடாவில் உள்ள நம்ம 
FACEBOOK தோழி செல்வி மாறன் என்பவர்,
06 ஆகஸ்டு
அன்று காலை எனக்கு ஒரு செய்தி அனுப்பி இருந்தார் அதில் அவர் ...

"இனிய காலை வணக்கம். மகேந்திரன்  நான் உங்கள் பெயரில் பணம் அனுப்பியுள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்திற்கருகாமையில் இருக்கும் ஏதாவது ஒரு western union இல் போய் பெற்றுக் கொள்ளுங்கள்.. அனுப்பியவரின் பெயர் கேட்டால் செல்வி மாறன் . கனடாவிலிருந்து... எல்லாமாக உங்களூக்கு 4, 528.29 ரூபாக்கள் கிடைக்கும்..இதைப் பெறுவதற்கு நீங்கள் அவர்களிட காட்ட வேண்டிய control number 700-311-1570. எனக்கு நீங்கள் செய்ய வேண்டிய உதவி என்னவென்றால்..இந்த பணம் அனுப்பிய விசயத்தை அன்பாலயத்திற்கு அறிவித்து...அங்குள்ள உதவி பெறும் மக்களின் மனமார்ந்த ஆசீர்வாதத்தை எனக்குப் பெற்றுத் தாருங்கள்...அவர்களுக்கு பணம் அனுப்பிய விசயம் தெரியட்டும் ஆனால் நீங்கள் என்ன தேவைக்கு முக்கியமோ அதற்கு பாவியுங்கள்"
இதை தொடர்ந்து நான் அந்த western union சென்று தொகையான  4, 528.29 பெற்றுக்கொண்டு ஸ்ரீ அன்பழயத்தில் இருக்கும் குழந்தைகளை சர்க்கஸ்

அழைத்து சென்றேன், பிறகு கார்னர் ஸ்டோன் ஆதரவற்ற குழந்தைகளுக்கு school bag செல்வி மாறன் அவர்களின் சார்பாக அழைத்து சென்றேன்...

இதற்க்கான ஆதாரத்தையும் செல்வி மாறன் அவர்டளிடம் பகிர்ந்து கொண்டேன்.
ஸ்ரீ அன்பாலயம் மறுவாழ்வு இல்லம் மற்றும் கார்னர் ஸ்டோன் ஆதரவற்ற குழந்தைகளின் சார்பாக 
செல்வி மாறன் அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தாரும் நலமுடன் வாழ ஆண்டவனிடம் வேண்டுகிறேன்...
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment