Showing posts with label mahendiran. Show all posts
Showing posts with label mahendiran. Show all posts

Sunday, October 27, 2013

இரண்டும் சேர்ந்த கலைஞன் பொன்ராஜ்.


எத்தனையோ தனித்திறமை வாய்ந்தவர்களை நாம் பார்த்திருப்போம். சிலருக்கு அபூர்வமான திறமைகளும் இருக்கும், ஆனால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட திறமைகளை வெளிப்படுத்தும் அதிசய திறமைசாலிகளை காண்பது அரிது அப்படிப்பட்ட திறமைசாலிகளை காணும்போது நம் மனதில் ஆச்சரியப் பூ பூப்பதில் ஆச்சர்யம் இல்லை. 

நாம் ஒரு செயலை செய்யும்போது கூட சில நேரங்களில் நம் கவனம் திசைமாறும் அல்லது சோம்பல் ஏற்ப்படும் ஆனால் கவனத்தை மாறாமல் ஒன்றுக்கும் மேற்பட்ட செயல்களை மிக நுணுக்கமாக ஒரே நேரத்தில் செய்து நம்மை வியப்பில் ஆல்துபவர்களை திறமைசாலி என்று பாராட்டாமல் இருப்போமா.

அப்படி ஒரு தனித்திறமை வாய்ந்தவர்தான் கோவை காந்திபுரத்தை சேர்ந்த சுப்பரமணி , சுந்தரி தம்பதியருக்கு பிறந்த திரு. பொன்ராஜ் 40 அவர்கள். அவரிடம் அந்த அற்புதமான திறமையை காணும்போது நிச்சயம் உங்களது விழிகளும் விரியும். அப்படி அவரிடம் அப்படிப்பட்ட திறமை என்ன என்று கேட்க்கதொன்றுகிறதா ?

இந்த LINK கை

https://www.youtube.com/watch?v=MMcBUp_5rP8&feature=youtube_gdata_player 





தவறாமல் பாருங்கள் ஆச்சர்யத்தில் மூழ்கி போவீர்கள்.

திரு.பொன்ராஜ் நல்ல பாடகர் இதில் சிறப்பு என்னவென்றால், பாடிக்கொண்டிருக்கும் போதே தன் கண்களால் தான் காணும் ஒன்றை தத்ரூபமாக வரையவும் செய்வார். தன் பாடலிலும் கவனத்தை செலுத்திக் கொண்டே அதே கவனம் மாறாமல் ஓவியமும் வரையும் அற்புதம் நிறைந்த கலைஞர் அவர். திரு. பொன்ராஜ் அவர்கள் தனது திறமைகளில் எந்த ஒன்றையும் அவர் முறையாக கற்று கொள்ளவில்லை என்றும் தனது அனுபவம் மற்றும் பயிற்சியின் மூலமாகவே சிறந்த கலைஞராக உருவாக வைத்தது . 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு மேல் படிப்புக்கு பெற்றோர்கள் கட்டாயப்படுத்த படிப்பில் விருப்பம் இசையின் மீதும் ஓவியத்தின் மீதும் ஆர்வம் கொண்ட்டிருந்ததாலும் தன் நண்பர்களின் ஊக்கம் மற்றும் தனது விடாமுயற்சி மற்றும் விடா பயிற்சியின் மூலமாக தான் இந்த திறனை வளர்த்துக் கொண்டதாக கூறுகிறார். தற்போது கோவையில் நூர்ப்பாலை எந்திரங்களை பழுதுபார்க்கும் பணியை செய்து கொண்டு பல இசை கச்சேரிகளில் இணைந்து இந்த திறமையை மக்கள் முன் காட்டி மக்களை வியப்பில் ஆள்திவருகிறார் . இப்படிப்பட்ட திறமைசாலிகள் காணும் போது நாமும் ஏதேனும் திறமைகளை வளர்த்துக்கொண்டால் என்ன என்று எண்ணம் ஒவ்வொருவருக்கும் உதிக்காலம் இருக்காது. அது மட்டும் அல்லாமல் முயற்சியும் பயிற்சியும் இருந்தால் எந்த ஒன்றையும் சாதிக்க முடியும் என்பதற்கு திரு. பொன்ராஜ் அவர்கள் சிறந்த உதாரணமாக இருக்கிறார். அவரது திறமையை என்னுடைய கானொளியில் (YouTube) கண்டு அவரது அந்த திறமையை பற்று உங்களது கருத்துக்களை கூறுங்கள். ~மகேந்திரன்

Friday, October 18, 2013

மீண்டும் ஒருவரின் உறவினர் கண்டுபிடிக்கப்பட்டார் ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services" 
****** 
[For English version, please scroll down] 
(220/17/10/13)

அரசு மருத்துவமனை வளாகத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்த நிலையில் அனைவரிடமும் தகராறு செய்து கொண்டிருந்த சரவணன் என்பவரை பொதுமக்கள் அடித்திருகின்றனர் . பின்னர் அவர்கள் ஈரநெஞ்சம் அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தது. அவரிடம் விசாரித்த பொது அவர் திண்டுக்கல், தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்தவர் என்று தெரிந்தது. உடனே அவரது குடும்பத்தினருக்கும் ஈரநெஞ்சம் அமைப்பு தகவல் தெரிவித்தது. அவரை அழைத்து செல்ல அவரது மனைவி உட்பட உறவினர்களும் உடனடியாக வந்து விட்டனர். அவரை கண்டதும் அவரது மனைவியும் அவரது உறவினர்களும் கதறி அழுத காட்சி காண்பவர்கள் நெஞ்சை உருக்கியது. அவரது இந்த நிலை எப்படி நேர்ந்தது என்பது குறித்து அவர்களிடம் விசாரிக்கையில் அவர் மன நிலை பாதிக்கப்பட்டவர் அல்ல என்றும் குடிப்பழக்கத்தாலேயே இப்படி அவர் நடந்து கொண்டதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தார். குடிப்பழக்கம் இருக்கிறது என்றாலும் இவர் இவ்வளவு மோசமாகா நடந்து கொள்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என்றும் வருத்தமுடன் கூறினார். என்றாலும் என்ன ஆனதோ என்று மனம் கவலை கொண்ட நிலையில் அவரை பாதுகாப்புடன் மீது நல்ல முறையில் பாதுகாப்பும் மருத்துவ உதவியும், பராமரிப்பும் வழங்கி மீண்டும் அவரை குடும்பத்தினருடன் சேர்த்து வைக்க உதவிய ஈரநெஞ்சம் அமைப்புக்கு அவரது மனைவியும் உறவினர்களும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து கொண்டனர். மீண்டும் உறவுகளை தொலைத்து பரிதவித்த சரவணனையும், அவரை காணமல் தவித்த குடும்பத்தினரையும் ஒன்று சேர்த்த திருப்தியில் ஈரநெஞ்சம் அமைப்பு மகிழ்ச்சி அடைகிறது.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam


A man aged about 38 years was disturbing the public at Kovai Govt Hospital today (17/10/13) He was hurt by public and he had fracture on his right leg. No one knows whether he is mentally ill person or drunker. Eeraneanjam was informed about this, and immediately eeraneanjam visited that place and admitted him in GH. From enquiry Eeraneajam came to know that he is Mr. Saravanan from Thadikoambu, Thindukal region, and his wife was informed about him. Mrs. Selvi, wife of Saravanan and his relations were came to coimbatore yesterday night itself and they were crying when they saw him. Mrs. Selvi told that he is not mentally ill person and only drunken. So only he was behaving like that and they wouldn't expect that he will behave like this. They are very thankful to eeranenjam for its timely help and taken care of Mr. Saravanan. Eeranenjam also feels very happy to join them together.

~Thanks
Eeraneanjam






Tuesday, October 08, 2013

உதவலாம் வங்க ~மகேந்திரன்

தீபாவளி, கிறிதுஸ்மஸ், பொங்கல் என விழாக்காலங்கள் வருகின்றது. எல்லோருக்கும் அந்த சமயங்களில் தான் அவர்களது போனஸ் , மற்றும் சேமிப்பு என பண வரவும் இருக்கும், அதில் பலரும் ஆதரவற்ற காப்பகங்களில் இருப்பவர்களுக்கு உதவிகள் தருவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர் , சிலருக்கு எப்படி செயலாற்றலாம் என்று குழப்பமும் , அறியாமலும், அல்லது சிலருக்கு நாம் செய்வதுதான் சரி என்ற எண்ணமும் இருக்கலாம் . இதனால் உதவி பெறுபவர்கள் அவர்களது அடிப்படைத் தேவைகள் நிறைவடையுமா..?, அது அவர்களுக்கு போதிய மன நிறைவை தந்திடுமா.? "பாத்திரம் அறிந்து உதவிடு" என்பார்கள் அதற்க்கு அர்த்தம், தேவையை அறிந்து உதவிடு என்றும் பொருள் உள்ளது. உதவி செய்யும் நோக்கம் உயர்ந்தது என்றாலும் அதனால் நம் மனம் நிம்மதி அடைந்தால் மட்டும் போதுமா , உதவி பெறுபவர்கள் மனநிறைவடைய வேண்டாமா... ?

அப்படி நீங்கள் செய்யும் உதவிகள் உதவி பெறுபவரை மன நிறைவும் மகிழ்வும் அடையும் படி இருக்க சில வழிகள் இதோ..
1.எந்த காப்பகம் செல்லலாம் என்பதை முடிவு செய்யுங்கள் அந்த காப்பகம் உதவி பெறுவதற்கு தகுதி உடையதா என்பதை உறுதி படுத்திக்கொள்ளுங்கள் .

2.அந்த அமைப்பு நிர்வாகிகளுடன் முதலில் தொடர்பு கொண்டு காப்பகத்தில் இருப்பவர்களுக்கு தேவை என்ன எனத் தெரிந்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு விருப்பமானதைக் கொடுப்பதை விட, அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதாக இருக்கும்.

3 .இனிப்பு, பழவகைகள் அல்லது ஏதேனும் பொருட்களை கொடுக்க ஆதரவற்றவர்களை வரிசையில் நிறுத்தி நீங்களே அதை கொடுக்காதீர்கள். அவ்வமைப்பு நிர்வாகிகளிடம் கொடுத்து அவர்கள் மூலமாகவே பகிர்ந்தளியுங்கள். இது முன்பின் தெரியாத ஒருவரிடம் அவ்வாறு வாங்குவது அவர்களின் தன்மானத்தை காயப்படுத்தாமல் இருக்கலாம்.

4.பழைய ஆடைகள், பழைய நோட்டுகள் போன்றவற்றைத் தரும்போது அவை உபயோகிக்கும் நிலையில் உள்ளதா என ஒன்றுக்கு இரண்டு முறை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். ஆடைகளைத் துவைத்து, கிழிந்து இருந்தால் அவற்றைத் தைத்துக் கொடுங்கள்.பல நோட்டுகளில் இருக்கும் உபயோகப்படுத்தாத பக்கங்களை ஒரே நோட்டாக பைண்ட் செய்தோ அல்லது தைத்தோ கொடுங்கள். இது அவர்களுக்கு முழுமையாக பயன்பட ஏதுவாக இருக்கும்.

5.தீபாவளி, கிறிஸ்மஸ், பொங்கல், புது வருடம் போன்ற பண்டிகை நாட்களில் புதியதாக ஸ்பான்சர் செய்பவர்கள் நிறைய பேர் வருவார்கள். நன்கொடைகளும் கிடைக்கும். அதனால் வழக்கமாக காப்பகங்களுக்கு செல்பவர்கள் அப்படிப்பட்ட விழாக் காலங்களில் செல்வதை தவிர்த்திடுங்கள். .
6.காப்பகத்திற்கு அங்கே செல்லும்போது, பகட்டான உடைகளை அணிந்து செல்வதை தவிர்த்து, முடிந்தவரை எளிமையாய்ச் செல்லுங்கள். இது காப்பகத்தில் உள்ளவர்களின் ஏக்கத்தை தவிர்க்கலாம்.

7.குழந்தைகளின் பிறந்தநாளில், குழந்தைகள் காப்பகத்திற்கு சென்றுதான் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்த்து , முதியோர் காப்பகத்தில் கொண்டாடுவதை மாற்றிக்கொள்ளுங்கள் . ஆதரவற்ற குழந்தைகளின் ஏக்கம் எல்லாம் தாய் தந்தையின் அரவணைப்பு கிடைக்காதா என்றுதான் இருக்கும் . அங்கு உங்களது குழந்தைகளை அழைத்து சென்று பிறந்தநாள் கொண்டாடுவது . ஆதரவற்ற குழந்தைகளின் ஏக்கத்தை இன்னும் அதிகரிக்கும்.

8. சாதாரண நாட்களில் ஆதரவற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தகளை விளையாட அனுமதியுங்கள். இது உங்களது குழந்தைகளுக்கும் பல பக்குவத்தை கொடுக்கும்.

9.நீங்கள் காப்பகத்திற்கு சென்று உணவோ அல்லது மற்ற பொருட்களையோ கொடுப்பதுடன் திரும்பி விடாதீர்கள் , சிறிது நேரமாவது அவர்கள் மனம் விட்டு பேச நீங்கள் அவர்களுடன் உங்களது நேரத்தையும் கொடுங்கள். இது கொடுக்கும் பொருட்களைவிட உங்களது அன்பான சொற்கள் அவர்களுக்கு மிகுந்த மகிழ்வைத் தரும்.

10.அப்படி பேசும் போது அவர்களின் சிறு,சிறு தேவைகளும் உங்களுக்கு புரியவரும் அதை பூர்த்தி செய்ய முயலுங்கள்.
9.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வேறு வேறு காப்பகங்களுக்கு செல்வதை விட ஒரே இல்லத்திற்கு அடிக்கடி‌ செல்லுங்கள் . இது ஆதரவற்றவர்களுடனான நல்ல நட்புறவை வளர்க்கும்.

11. காப்பகங்களுக்கு செல்ல உணவு அல்லது மற்ற பொருட்களுடன் தான் கொண்டு செல்ல வேண்டும் என்றெல்லாம் இல்லை . நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கு சென்று அவர்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்தல் அல்லது அவர்களுடன் விளையாடுவது நல்லது.


இது போல் வழக்கபடுத்தி கொள்ளும் போது நாம் மகிழ்வதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கும் உண்மையான முழுமையான மகிழ்வை கொடுத்த மன திருப்தியும் இருக்கும். "நாம மகிழ்வதை விட, நாம் மற்றவர்களை மகிழ்வடைய செய்வதில் தானே உண்மையான மகிழ்ச்சி இருக்கும்"

~மகேந்திரன்

Sunday, October 06, 2013

பசியால் தவித்த முதியவரை மீட்பு ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(212/2013)
இன்று 06-10-2013, காலை கோவை காந்திபுரம் பகுதியில் சுமார் 90 வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் கிட்டத்தட்ட மயக்க நிலையில் மிகுந்த பசியுடன் காணப்பட்டார். அவர் போவோர் வருவோரிடன் உணவு கேட்டுக் கொண்டிருந்தார். ஈரநெஞ்சம் அமைப்பினர் அவரை மீட்டு உணவும் முதலுதவியும் வழங்கினர். பின்னர் அவர் கூறும்போது அவர் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள சுண்டாம்பாளையத்தை சேர்ந்தவர் என்று தெரிவித்தார். அவருக்கு உறவிர்களும், மகனும் உள்ளனர். அவரது மகன் கோவை PSG கல்லூரியில் பணி புரிவதாக சொன்னார். ஆனால் அவர் தன் மகன் பெயரை சொல்ல மறுத்து விட்டார். இவரை ஈரநெஞ்சம் அமைப்பினர் கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு 9080131500, 9843344991. என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.
~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam


Today morning 06-10-2013, an old man, aged about 90 years was founed in almost unconscious stage with heavy hungry in Coimbatore Gandhipuram area. He was asking food with pedestrians. Eeranenjam people found him and gave food and first aid treament. He told that he is from Sundambalayam near Thondamuthur area. He has relations and son. His son is working in PSG college and he refused to tell his son's name. Then eeranenjam people admitted him in Coimbatore corporation orphanage home.

If anyone know about him kindly contact us in the numbers 9080131500, , 9843344991.
~Thanks
Eeraneanjam

மேலும் தன்னை பற்றி முத்துக் குமார் ஐயா சில தகவல்கள் கூறினார்.
தான் கோவை வரதராஜ மில்லில் பணியாற்றியதாகவும் . தன் மகன் PSG டெக் கில் வேலை பார்ப்பதாகவும் கூறி உள்ளார்.

Thursday, May 23, 2013

பெற்றவள் தான் அன்னையா அன்னையர் தினம்~ மகேந்திரன்

பெற்றவள் தான் அன்னையா
பிள்ளைகளால் தொலைக்கப்பட்டவர்களும் நமக்கு அன்னைதான்...
அன்னையர்களோடு அன்னையர் தினத்தில்...
விழிப்புணர்வுக்காக
~மகேந்திரன்

நன்றி
லோட்டஸ் தொலைகாட்சி