Showing posts with label பூக்கள். Show all posts
Showing posts with label பூக்கள். Show all posts

Monday, October 31, 2011

பூக்களின் ரத்தம்..!

பால் என்பது
ரத்தம்...
அது போல
தேன் என்பது
பூக்களின் ரத்தம்..!

Friday, October 28, 2011

"பூக்கள்"

"பூக்கள்"
இறைவன்
எழுதிய
புன்னகை கவிதை..!

Tuesday, October 18, 2011

நிரந்தரம் இல்லையா ?

புன்னகை நிரந்தரம் இல்லையா ?
பூக்கள்
உதிர்ந்து விடுகிறது...
முட்கள்
மட்டும் நிரந்தரமாய் இருக்கின்றதே..?

Tuesday, October 11, 2011

என்ன வித்யாசம்..?

உன்
புன்னகைக்கும்,
பூவுக்கும்
என்ன வித்யாசம் இருக்கிறது...
என்
தோட்டத்தில் 
உன்
புன்னகைதான் பூத்திருப்பதை
கண்டு இருக்கிறேன்...
சுதாகரித்த பிறகுதான்
தெரியும்
அவையெல்லாம் பூக்கள் என்று..♥

Tuesday, October 04, 2011

பூக்கள் கூட கனமாக இருக்கிறது...

பூக்கள் கூட  கனமாக இருக்கிறது...
என் வேதனை எல்லாம்...
உலக அளவு உள்ள
உன்
ஞாபகம் அவ்வளவு லேசா..?
சுமக்கையில்
சுமையே இல்லையே ..♥