Showing posts with label தாஜ்மஹால். Show all posts
Showing posts with label தாஜ்மஹால். Show all posts

Thursday, June 15, 2023

ஆயிரம் தாஜ்மஹாலுக்கு சமம்

பிரேக் அப்புக்கு ஒரு பார்ட்டி... விவாகரத்துக்கும் கூட போட்டோ ஷுட் என்று இருக்கும் இந்தக் காலத்திலும்... தம்பதிகள் ஒருவரை ஒருவர் கொலை செய்யும் அளவிற்கு மனதில் குரோதம் வளர்த்துக் கொண்டிருக்கும் இந்த கலியுகத்திலும் அத்திப்பூத்தார் போல் ஆங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்க்கைத் துணையை உயிராய் நேசிக்கும் ஒரு சிலரை காண முடிவது ஆறுதலான விஷயம் தான்...


கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுப்பிரமணியம் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்த அவரது மனைவி சரோஜினியின் சமாதியில் தினம் தோறும் காலை மாலை இருவேளையும் விளக்கேற்றி, ஊதுபத்தி சூடம் கொளுத்தி வணங்குவதை பார்த்து ஆச்சரியப்பட்டு அவரிடம் பேச்சு கொடுத்தோம்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு அவரது மனைவி இறந்த பிறகு மகனுடன் வசித்து வரும் இவர் மனைவி மீது கொண்ட காதலால் மட்டும் இதை செய்யவில்லை என்றும் ..., 
உயிருடன் இருக்கும் போது மனைவி தன் மீது உயிராய் இருந்தார் என்றும் தனக்கு ஏதாவது ஒன்று என்றால் துடித்துவிடுவார் என்றும் கூறினார். தனக்கு ஹார்ட் அட்டாக் வந்தபோது மனைவி தன்னை மிகவும் அக்கறையுடன் கவனமாக பார்த்துக் கொண்டதாகவும் கூறினார்.
தன் மனைவி சரோஜினி தன் மீது வைத்திருந்த காதல், பாசம், அக்கறை ஆகியவற்றுக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக நாள்தோறும் தவறாமல் தன் மனைவியின் சமாதியை விளக்கேற்றி வணங்குவதாக தெரிவித்தார். தினமும் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும் கூட கண்டிப்பாக வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை இங்கு வருவதாகவும் கூறினார்.

இன்னமும் கூட தன் மனைவி தன்னுடனேயே இருப்பதாக உணர்ந்து வாழ்வதாக வார்த்தையிலே அம்புட்டு காதலை வைத்து நெகிழ்ந்து போகிறார் சுப்ரமணி...

வெறுமனே காரையும் சுண்ணாம்பும் பூசிய இந்த சமாதி ஆயிரம் தாஜ்மஹால்களுக்கு சமம் இல்லைங்களா..!!!

~ ஈரநெஞ்சம் மகேந்திரன்

Wednesday, September 28, 2011

தாஜ்மஹால் காதலிக்காக கட்டப்படவில்லை , காதலர்களுக்காக கட்டப்பட்டது, எத்தனை பேருக்கு தெரியும் ...

ஒரு உண்மை தாஜ்மஹால் காதலிக்காக கட்டப்படவில்லை , காதலர்களுக்காக கட்டப்பட்டது, இது யாருக்கு, எத்தனை பேருக்கு தெரியும் ..
மும்தாஜ் மரணம் ,சாஜகான் துயரத்தில்...
மும்தாஜ் கல்லறை அருகே மன்னர் சாஜகான் கல்லாய்...
கல்லறைக்கு தன் உயிரை மாலையாக்கி கொண்டு இருந்தார் ...
சாஜகான் மீண்டும் நடமாடவேண்டுமானால் மும்தாஜ் நேரில் வரவேண்டும்,
மும்தாஜ் இல்லை அவளை போன்ற அழகின் உருவம் வேண்டும் ஒரு மாளிகை வேண்டும் , இதனால் மட்டுமே மன்னர் நடமாட முடியும் ,

ஹரின் மன்னர் அவையின் கட்டிட வடிவமைப்பாளர் புதியதாய் திலோதினா வைமனம்முடித்தவர்...
ஹரிணியை அழைக்கப்பட்டு மும்தாஜை போன்று மாளிகை வடிவமைக்க சொன்னார் மன்னர் ,
தொடர்ந்து ஐந்தாறு முறை வடிவமைத்து எல்லாமும் அழகாக் இருந்தது, ஆனால் மும்தாஜின் உருவம் இல்லை எனநிராகரிக்கப்பட்டது,

இறுதியில் ஒரு வடிவம் தரவேண்டும் ,அது மும்தாஜை போன்று இருக்க வேண்டும் ,இல்லையென்றால் ஹரிணியின் தலை துண்டிக்கப்படும் என்று கட்டளை வந்தது...

சிறகடித்து பரந்த இளம் பறவைகள் சிறகொடிக்கப்பட்டது போல இருந்தது...
மன்னரிடம் வந்தால் திலோதி மன்னரிடம் ஒரு மாதம் அவகாசம் கேட்க ஒரு மாதம் கழித்து வரைபடம் வரவில்லை என்றால் ஹரிணியின் தலை துண்டிக்க உத்தரவிட்டார்..
ஆண்பறவை சிறகு ஒடிந்த நிலையில் விறகாய் , புன்னகை முகத்தோடு ஹரிணியை பார்த்து மன்னர் கட்டளையை நிராகரித்து விட்டார் இனி நாம் சுதந்திரமாக பறக்கலாம் என்று இரு பறவைகளும் பறக்க இன்பம் இன்பம் எல்லாம் அவளவும் அன்பின் படையலில் , ஹரிணிக்கு ஓவியம் வரைவதும் கூட மறந்தாய்ற்று ,
மாத இறுதி வந்தது...
ஒருநாள் திலோதினாவை காணாமல் தேடினான் ஹரிணி எங்கு தேடியும் கிடைக்கவில்லை, தன் ஓவிய அறைக்குள் நுழைந்து தேடினான் , தூசி படிந்த ஓவிய பலகையில் படபடத்தது ஒரு காகிதம் அதில் திலோதினா எழுதி இருந்தால் , மன்னர் அழகான ஓவியம் கேட்க்க வில்லை ,சோகமான அழகை கேடிருந்தார், நான் இருந்தால் உங்களுக்கு சோகம் உங்களுக்கு எங்கிருந்து வரும் , கடிதத்தில் நீங்கள் படிக்கும் நேரத்தில் இந்த பூ யமுனையில் உயிர் துறந்து இருக்கும் நீங்க மன்னருக்காக ஓவியம் வரைய வேண்டாம் என்னை நினைத்து என் உருவத்தில் வரையுங்கள் என்று , அதை படித்ததுமே ஹரின் உடைந்தான் தூள் தூளாய் போனான் ,தூரிகையை எடுத்தான் திலோதினாவால்  உருவான பிரம்மாணடமான கண்ணீர் துளியினை வரந்தான் மன்னனிடம் அனுப்பினான் ,ஓவியம் மன்னனிடம் வந்தது.. மன்னம் இதைதான் கேட்டேன் எங்கே அந்த திலோதினா  அழைத்து வாருங்கள் மும்தாஜை என்முன் நிறுத்திய  வரசொல்லுங்கள் சொன்னதை செய்துகாட்டினால் , திலோதினா இப்பொது இல்லை யமுனாவில் வாழ்கிறாள் என்று ,மன்னர் எங்கே அந்த ஓவியன் என்று பூ எங்கு இருக்குமோ அங்குதானே வண்டும் இருக்கும் என்றான்,
  மன்னர் முடிவெடுத்தார்

இந்த பறவைகளுக்காக யமுனை நதி ஓரமாக தாஜ் உருவாக்க படவேண்டும் இது மும்தாஜி மேல் ஆணை
எல்லா நதியும் புன்னகையோடு ஓடுகிறது ...
யமுனை மட்டும் கண்ணீரோடு ஓடுகிறது ...
~மகி