Showing posts with label இறப்பதற்காகவே வாழ்கிறேன். Show all posts
Showing posts with label இறப்பதற்காகவே வாழ்கிறேன். Show all posts

Sunday, September 16, 2012

இறப்பதற்காகவே வாழ்கிறேன்~கவிதை

அடம் பிடித்து அழுத
குழந்தைக்கு
மிட்டாய் கிடைத்த சந்தோசம்
எனக்கு இப்போது
உன் அழைப்பை கண்டு..!
 
 
அற்புதமான காதலை
மட்டும் அல்ல
அதி அற்புதமான
வேதனைகளும்
உன்
மௌனம்தான் தருகிறது..!
 
 
உன் கோவம் ஒவ்வொன்றிலும்
நான்
இறப்பதற்காகவே வாழ்கிறேன்
என்பதை
உணர்கிறேன்..!
 
 
உன்
செவ்விதழ் முத்ததிற்காக
பித்து பிடித்தவன் போல
ஆகி விட்டேன்..!
இதுதான் செவ்வாய் தோசமா..!
 
 
திட்டும் அம்மா ,
முறைக்கும் அப்பா ,
உன் பார்வை
நியாபகம் படுத்துகிறது...
வீட்டை மறந்து
உன்னோடு பேச நினைக்கிறன்
அது பிடிக்கலையா
உன்
பார்வையை மாற்று..!
 
 
உன்னையே
சுற்றிவந்த நான்
அவளை சுற்றவைததும்
நீ தான் இறைவா
கோவத்தில்
என்னை கைவிட்டுவிடாதே..♥

 
 
என்
புன்னகை பூவே...
உன்
புன்னகையில்
தெய்வீக அன்பு தவழ்கிறது...
பூவே
நீ
புன்னகைத்துக்கொண்டே
இரு...
நான்
வழிபடும் தெய்வம் நீ..!