Showing posts with label இறந்தவர். Show all posts
Showing posts with label இறந்தவர். Show all posts

Tuesday, April 29, 2014

இறந்தவரின் அடையாளம் தெரிந்தது


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services

" ******
(299/29-04-2014)



"இறந்தவரின் அடையாளம் தெரிந்தது"


26.4.2014 கோவை செல்வபுரம் பகுதியில் இருந்து அடையாளம் தெரியாத ஒருவர் மயங்கிய நிலையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் அழைத்துச் சென்று அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் . அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார் . அவரை பற்றிய விபரம் அறியாதநிலையில் B10 காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்து ஈரநெஞ்சம் அமைப்புடன் சேர்ந்து அவரது குடும்பத்தினரை தேடும் முயற்சியில் ஈடுபட்டது .
https://www.facebook.com/photo.php?fbid=559879687442785&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater
அதன்பலனாக இன்று இறந்தவரின் மனைவி கீதா லக்ஷ்மி கண்டுபிடிக்கப்பட்டு இறந்தவர் இவரது கணவர் என்பது உறுதிசெய்யப்பட்டது . மேலும் அவரிடம் விசாரித்ததில் இறந்தவரின் பெயர் மணிகண்டன் என்றும் பெயிண்டர் வேலை பார்த்துவந்ததாகவும் , இவர்களுக்கு கீர்த்தனா வயது 15 பிரதீபா வயது 11 என்ற இரு குழந்தைகள் இருப்பதாகவும் கோவை தொண்டாமுத்தூர் அருகில் குளத்துப் பாளையம் பகுதியில் வசித்து வருவதாகவும் , கடந்த ஆறேழு வருடமாக மணிகண்டன் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி சரியாக வீட்டிற்கு வராமல் வெளியே தங்கி இருந்து வந்ததாகவும் . குழந்தைகள் அழைத்தால் அவ்வப்போது வீட்டிற்கு வந்து போனதாகவும் தெரிவித்தார் . வீட்டிற்கு வராமல் இருந்தாலும் எங்களோடு பாசத்தோடு இருப்பார் . இவர் இறந்தது அறியாதநிலையில் தற்போது கீதா லக்ஷ்மி மற்றும் குழந்தைகள் இருவரும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர் .
இதனைதொடர்ந்து இன்று காலை கோவை அரசு மருத்துவமனையில் இருந்து மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு B10 காவல் துறையும் மற்றும் ஈரநெஞ்சம் அமைபினரும் , அவரது உறவினரிடம் ஒப்படைத்தனர் .

பிறகு மாலை 3 மணியளவில் சொக்கம் புதூர் மின் மயானத்தில் உறவினர்கள் மணிகண்டனின் உடலை தகனம் செய்துவிட்டு விடைபெறும்போது B10 காவல் துறையினருக்கும் ஈரநெஞ்சம் அமைப்பிற்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Monday, June 17, 2013

சாலையில் ஆதரவற்று இறந்தவரை நல்லடக்கம் செய்தது ஈரநெஞ்சம்




''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(167/2013)


கோவை செல்வபுரம் அருகில் பிச்சை எடுத்துக்கொண்டு இருந்த சுமார் 75 வயதான ஒருவர் நோய்வாய் பட்டு 10.06.2013 சாலையோரம் இறந்து கிடந்தார். ஒருவர் இறந்து கிடக்கிறார் என்பதை கூட அறியாத நிலையில் பலர் இருக்க இளகிய உள்ளம் கொண்ட ஒருவரால் B10 காவல் துறைக்கு தகவல் கொடுக்க பட்டது .அதனை தொடர்ந்து காவல் துறை விசாரணைக்கு பிறகு அந்த முதியவருக்கு யாரும் இல்லை அவர் ஆதரவற்றவர் என்று நிலையில் ஈரநெஞ்சம் அமைபிற்கு B10 காவல் துறையுனரால் அந்த பெரியவரின் பிரேத உடலை நல்லடக்கம் செய்து தரும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஈர நெஞ்சம் அந்த பெரியவரின் உடலை 11.06.13 அன்று சொக்கம்புத்துர் மயானத்திற்கு எடுத்து சென்று நல்லடக்கம் செய்தது . உடலை நல்லடக்கம் செய்ய துணை இருந்த B10 துணை ஆய்வாளர் திரு. முருகையன் , அமைப்பின் நண்பர் சுப்பு , மயான தொழிலாளி வைரமணி அவர்களுக்கு ஈரநெஞ்சம் மனதார நன்றி தெரிவித்துகொள்கிறது. இறந்த பெரியவருக்கு துணையாக உறவுகள் இல்லாவிட்டாலும், அவரின் இறுதி காலத்தில் ஈர நெஞ்சம் துணையானது. அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் உங்களோடு சேர்ந்து நாங்களும் வேண்டுகிறோம்.

https://www.facebook.com/eeranenjam
ஈர நெஞ்சம்
~ நன்றி

An old man, aged around 75, who had been sick and begging on the streets in Selvapuram, Coimbatore, was found dead on 10.06.2013. When many people ignored his body on the street, a kind person informed the B10 Police Station about it.
After the proper medical processes, the Police Station requested Eera Nenjam to do the last rituals for him. We, along with Mr. Murugaiyan, Sub Inspector, Mr. Subhu, a good friend of Eera Nenjam and Mr. Vairamani, the cemetery worker, helped to bury his body.
Eera Nenjam appreciates their help. Even though the old man had none when he was alive, he had many friends to take care of his final rituals. May his soul rest in peace.

Eera Nenjam
~ Thanks