Showing posts with label அதிசயம். Show all posts
Showing posts with label அதிசயம். Show all posts

Tuesday, September 06, 2011

மனநிலை பாதிக்கப்பட்ட நிர்மலா ஒரேநாளில் குணமடைந்த அதிசயம்




இன்று 29/08/11 மாலை நிர்மலாவீட்டிர்க்கு சென்று இருந்தேன் அபோது நான் பார்த்த நிர்மலா "வாங்க அண்ணா சாப்பிடலாம் "
நல்லா இருக்கிங்களா, சாப்பிடுங்க " இன்னும்பல என்னோடு பரிமாரிக்கொண்டால்...
ஒன்றை ஆண்டுகாலம் மனநிலை பாதிக்கப்பட்டு அன்பாலயத்தில் இருக்கும்போது பேசாத நிர்மலா நேற்று வீடுதிரும்பியது சகஜமாக பேசுவதை கண்டு சிலிர்த்துபோனேன்...

நான்கு வருடத்திற்கு முன் மனநிலை சரியில்லாத நிலையில் காணாமல் போன நிர்மலா வயது 29 இருக்கும்  என்பவரை கோவிந்தராஜ் மனிதநேயமுடயவர் சாலையோரம்  பரிதாபமான நிலையில் இருந்ததாக சொல்லி கோவை ஸ்ரீ அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்து உள்ளார்,இதனை தொடர்ந்து நிர்மலாவை ஸ்ரீ அன்பாலயம் நல்லபடி பராமரித்து வந்தது ,இந்த நிலையில் சமூகநல ஆர்வலர் மகேந்திரன் என்பவரால் ஒருவருடகால பெரும் முயற்சிக்கு பின் நிர்மலாவின் பெற்றோர் வீட்டை கண்டுபிடித்து, நிர்மலாவை அவர்களுடைய பெற்றோர்களுடன் சேர்க்கப்பட்டார், 



அசோகன், சண்முகம், பெத்தாத்தால், இது போன்ற ஆதரவை தொலைத்த  இன்னும் பலரை சமூகநல ஆர்வலர் மகேந்திரன் என்பவரால் அவர்களது சொந்தங்களுடன் சேர்த்துவைத்தது குறிப்பிடத்தக்கது...

ஆதரவற்றோர் இல்லங்களில் இருப்பவர்களுக்கும் வீடு இருக்கும், சொந்தங்கள் இருக்கும் பெத்தவங்க தான் பிள்ளைகளை தொலைத்துவிட்டு  படும் அவஸ்த்தை மிக கொடியதுங்க, நிர்மலா, அசோகன், சண்முகம்  இதுபோன்றவர்கள் மனநிலை சரியில்லா காரணத்தால் தனது சொந்தங்களை  தொலைத்துவிட்டு சாலையிலும், ஆதரவற்ற இல்லங்களிலும் நிறையப்பேர் இருக்கின்றார்கள், அவர்களுடைய பெற்றவங்களும் இவர்களை காணமல் தேடிக்கொண்டுதான் இருக்காங்க கண்ணீருடன்,
அவங்களுக்கும் உண்மையான மறுவாழ்வு கிடைக்கவேண்டும்,