Wednesday, July 04, 2012

இலவசம் வேண்டாம் நண்பா

நானும் மற்றொருவரும் பேசிக்கொண்டு இருந்தோம் ,

அவர் என்னை பார்த்து -
"எதற்க்காக இத்தனை கஷ்டபடுகிறாய் ?"

அதற்க்கு நான் -
"கஷ்டப்படாமல் வாழ்க்கையை எப்படி நடத்த முடியும் "

அதற்க்கு அவர் சிரித்துக்கொண்டே -
"என்னை பார் , இலவச அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கிவிடுவேன் போரடித்தால் இலவசமாக கொடுத்த வண்ண தொலைக்காட்சியை பார்த்து பொழுதை கழிப்பேன், உழைக்காமல் நோய் வந்தால் இலவசமாக அரசு காப்பிடு அதில் உயர் சிகிச்சை பெறுவேன் "

நான் -
"உழைக்காமல் எப்படி இத்தனையும் முடியுமா ?"
அவர் சிரித்துக்கொண்டே -
"நாம் யார் தெரியுமா ?
"தமிழ் நாட்டு குடிமகன்"
நம் நாட்டில் உணவிற்கு அரிசி இலவசமாக தருகிறார்கள்,
சமையல் கேஸ் அடுப்பும் இலவசம்,
பொழுது போக்க வண்ண தொலைகாட்சி இலவசம்,
குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சை இலவசம்,
எதற்கு உழைக்க வேண்டும்?"

நான்-
"உன் எதிர்கால சந்ததியர்களின் நிலை என்ன ?"

நமட்டு சிரிப்பில் அவர்-
"மனைவி பிள்ளை பெற்றால் இலவச சிகிச்சையுடன் ருபாய் 5000 , குழந்தைகளுக்கு இலவச படிப்பு மற்றும் சத்தான உணவு அதுவும் முட்டையுடன், பாட புத்தகங்கள் இலவசம் பள்ளிக்கு செல்ல மிதிவண்டி இலவசம் , பேருந்து கட்டணம் இலவசம்,
பெண் பருவமடைந்தால் திருமண உதவித்தொகை 25000 இலவசம், ஒரு பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம்"
தேவை என்றால் மாப்பிள்ளை பார்க்க பேப்பரில் இலவச விளம்பரம், மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும், இவ்வளவு இலவ்காசம் இருக்க நாம் எதற்கு உழைக்கனும் "

வியப்பில் வியந்து போனேன் நான் -
"என் நண்பனே எவ்வளவு காலம் இந்த நிலை தொடரும்?"
இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உள்ளது...
ஒன்று லஞ்சம்..!
மற்றொன்று பிச்சை..!
இதில் நீ எந்த வகை ? எதை நான் எடுத்துக்கொள்வது ?
உழைக்காமல் உண்டு சோம்பேறி ஆகிறாய் - ஒரு வேலை இலவசம் நின்று போனால் உன் நிலை என்ன ????
கஷ்ட்டப்பட்டு உழைத்தவர்களிடம் களவாட நீ உள்ளாவாய்,
சரி இதே நிலை வளர்ந்தால் - அதாவது இலவசம் வளர்ந்தால்
அமைதி பூங்காவான தமிழகம் கள்வர் பூமியாக மாறும் நிலை
வெகு தொலைவில் இல்லை .
நண்பனே விழித்தெழு - உழைத்திடு
இலவசத்தை வெறுத்திடு - அழித்திடு
தமுலகத்தை தலை நிமிரசெய்திடு
நாளைய தமிழகம் நம் கையில் நண்பனே சிந்திப்பாயா இந்தியாவும் வல்லரசாக வேண்டும் அப்படி ஆகவில்லை என்றாலும் சரி ஒரு சோம்பேறியை பெற்ற தாய் இவள் என்ற உன் அன்னையை இழிவுபடாமல் பார்த்துக்கொள்"
என நான் கத்தி முடிப்பதற்குள் அவன் தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டான் ...!!!
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

3 comments:

கோவி said...

//இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உள்ளது...
ஒன்று லஞ்சம்..!
மற்றொன்று பிச்சை..!//

சரியா சொன்னீங்க..

sakthi said...

இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உள்ளது...
ஒன்று லஞ்சம்..!
மற்றொன்று பிச்சை..!

உண்மை சரியான கேள்வி

என நான் கத்தி முடிப்பதற்குள் அவன் தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டான் ...!!!

இது தான் சார் உண்மை நிலை ! மனிதனை சோம்பேறியாக்கி ( அடிமையாக்கி ) வைத்தால் தான் வாழவேண்டியவன் வாழ்வான் ! இது இன்றைய நியதி !

Unknown said...

இலவசம் என்பதே ஆட்சியாளர்களின் நூதன ஓட்டுப்பிச்சை!

Post a Comment