Tuesday, October 30, 2012

இளைஞர்கள் முன்வரவேண்டும் "ஈர நெஞ்சம் சேவைகள்"

"ஈர நெஞ்சம் சேவைகள்" / EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
கோவை கிராஸ் கட் ரோடு பகுதியில் நடக்க முடியாமல், வாத நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் பெற்ற பின்னர், போவதற்கு உற்றார் உறவினர் இல்லாத
நிலையில், கடந்த 10 நாட்களாக ஆதரவற்று இருந்த திரு.ஹுசைன் என்னும் 65 வயது முதியவரைக் கண்ட மனித நேயம் மிக்க, கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும், திருநெல்வேலியைச் சேர்ந்த திரு.கே.கோவிந்தராஜ் என்னும் இளைஞர் B3 காட்டூர் காவல் நிலையத்திற்கு விபரத்தைத் தெரிவித்தார்.

அதன் பின்னர் நமது ஈர நெஞ்சம் அமைப்பின் மூலம் காட்டூர் காவல் நிலையத்தின் அனுமதியோடு திரு கே. கோவிந்தராஜ் அவர்களின் உதவியோடும் திரு ஹுசைன் அவர்கள், கோவை மாநகராட்சி காப்பகத்தில், 28.10.2012 அன்று சேர்க்கப்பட்டு உள்ளார்.

ஆதரவற்ற ஒரு முதியவருக்கு, தன்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இளைஞர் திரு கே. கோவிந்தராஜ் அவர்களை ஈர நெஞ்சம் மனதாரப் பாராட்டுவதோடு இதுபோல் இன்னும் பல நல்ல செயல்களை தொடர்ந்து செய்ய வேண்டும் என வாழ்த்துகிறது.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி /(97/2012)
ஈர நெஞ்சம்
......
Mr. Hussain, (Age: 65), who was discharged from a hospital after getting the treatment for the paralysis attack, was found unattended near Cross-cut road, Coimbatore for the past ten days. A kind hearted person Mr K. Govindaraj, hailed from Tirunelveli reported this matter to B3 police station.

He came to know about our organization and informed us. Mr. Hussain was then admitted to "Coimbatore Corporation Home" after getting proper permission from the Kattur Police station on 28.10.2012.

We appreciate Mr. K. Govindaraj for his service and wish him.

We continue to seek your help and the almighty to perform such kind of good activities through our "EERA NENJAM" organization.
~Thanks /(97/2012)
EERA NENJAM
Like · ·
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

2 comments:

sakthi said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் திரு .கே.கோவிந்தராஜ் அவர்களே ! ஈர நெஞ்சம் கொண்ட உங்களை போன்ற பலர் சமுதாயத்திற்கு முன்னுதாரனமாக இருக்க வேண்டும் !
வாழ்த்துக்கள் ஈர நெஞ்சம் அமைப்பு,திரு .மகி சார் ,காட்டூர் காவல் நிலைய காவல்துறை சார்ந்த நண்பர்கள் !

Tamil Kalanchiyam said...

தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
http://www.tamilkalanchiyam.com

- தமிழ் களஞ்சியம்

Post a Comment