Friday, August 24, 2012

பூங்காவில்...

பூங்காவில்
ஒரு பூ என்னிடம்
உன்னை காட்டி இந்த
பூவிற்கு மட்டும்
எப்படி கால் முளைத்தது

என்று கேட்டது...
அந்த
பூவிற்கு
நீ கால் முளைத்த
பூ என்று சொல்லி
புரியவைப்பதற்குள்
எனக்கு போதும் என்றாகி விட்டது..♥
மழையில் நனைய கூடாது
என்று
குடைபிடித்து போகிறாய்...
உன்னை நனைக்க
முடியாத வேதனையில்
வானம் அழுது
கொண்டிருக்கிறது..♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment