Showing posts with label சமுதாயம். Show all posts
Showing posts with label சமுதாயம். Show all posts

Monday, November 24, 2014

புனிதம் தொலைத்த கங்கை மாதவி வம்ச நாயகியின் கதை



மாதவி வம்ச நாயகியின் கதை 

பஞ்சனை படுக்கைகளிலும் மலர் தூவிய மஞ்சத்திலும் மட்டுமே புரண்ட விலைமாது இன்று புழுதி புரள மாய்ந்து கிடக்கிறாள் .

பல மூர்க்கர்கள் உறவாடிய உடல் இன்று பல நோய்கள் உறவாடி அவள் மூச்சை மூர்சையாக்கி விட்டது.
அன்று ஆசையாசையாய் ஆபரணங்கள் அலங்கரித்த உடல் இன்று ஈக்களும் , எறும்புகளும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.

வாசனாதி திரவியங்கள் பூசி மணமணத்த உடல் இன்று புழுபுழுத்து துர்நாற்றம் வீசிக்கிடக்கிறது .

உயிரோடு இருந்தபோது பல ஆயிரம் கொடுத்து பல கைகள் தொட்டு அனுபவித்த உடல். இன்று ஆயிரக் கணக்கில் கொடுத்தாலும் தொட்டு தூக்கி குழிக்குள் போட ஒருவரும் முன் வருவதற்கு இல்லை .

விதைத்தவன் தண்ணீர் ஊற்றாமலா போவான் ? படைத்தவன் இந்த உடலையும் சுமக்க ஒரு புண்ணியவானை அனுப்பிவிட்டான் . சுடுகாடு வரை சென்று சேர்ந்தது அவ்வுடல் . அவ்வுடலுக்கு கொள்ளி வைத்து விட்டு அப்புண்ணியவான் திரும்பினான்... அரூப வடிவில் வந்தாள் அவள்...

அப்பெண் அவரிடம்...

ஐயா உங்களுக்கு மிகவும் நன்றி ... என்றாள்.
யாரம்மா நீ உனக்கு ஏன் இந்நிலை ... என்று அவர் கேட்டார் .

ஐயா நான்,
மாதவி வம்ச நாயகி நான் ... அவளைப் போலும் என் அழகிற்கு பஞ்சமில்லை கணவனின் அன்பிற்கும் பஞ்சம் இல்லை.
அன்பின் அடையாளமாய் ஒரு குழந்தை. என்று அழகான குடும்பம் எனது. செய்யாத பிழைக்கு பலியான கணவனை பிரிந்து வாழும் கொடிய நிலை உருவானது. பசித்த பிள்ளைக்கு உணவளிக்க முடியாத தருணத்தில் குழந்தை பசிக்கு உணவு பெற மனித பசிக்கு இரையாக என் உடலை நானே விலைப் பேசி கொடுக்க துவங்கினேன். அதனால் என் பிள்ளைக்கு மூன்று வேளை உணவும் நல்ல கல்வியும் கொடுக்க முடிந்தது .
எந்த சூழலிலும் என் நிலை என் மகளை சூழ்ந்துவிடக் கூடாது என தான் யார் என அவளுக்கு தெரியாமலே வளர்த்தேன். மாதவியின் மகளுக்கு "மணி மேகலை" என்றொரு காப்பியம் இருக்கிறது . ஆனால் என் மகளுக்கு "விபச்சாரி மகள்" என்ற அடைமொழி தான். அவளையும் விலை பேசும் மனித உருவம் கொண்டு அலையும் நரிகள் கூட்டம் ஒன்றா இரண்டா .

பெண்ணின் அடிமைத்தளையை உடைத்தெறிய வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தவனும், என்னை அடிமை நாயைப்போல் பயன் படுத்தியிருக்கிறான் .

கந்து வட்டிக்காரனும், என்னை கசக்கி அனுபவித்து விட்டு கடன் சொல்லி விட்டு போயிருக்கிறான் .

ஜாதி வெறிப் பிடித்த மனிதனும் என்னிடம் வெறிக்கொண்டு பாய்ந்து
அனுபவித்திருக்கிறான்... என்றே அரற்றினாள்.

இதைக் கேட்ட அப்புண்ணியவான் ,
ஒரு நிலைக்கு மேல் நீ திருந்தியிருக்கலாமே ... என்றார்

திருந்துவதா திருந்த நினைத்தாலே இந்த சமுதாயமும் என்னைத் தீண்டி ருசிப்பார்த்த ஓநாய்கள் கூட்டமும் என்னை திரும்ப விடவில்லை.

போலீசாரால் கைது செய்யப் பட்ட போதெல்லாம் பத்திரிக்கைக் காரர்களால் "விபச்சார அழகி" என்னும் அடைமொழியுடன் செய்தியாக்கினால் தான் அவர்களுக்கு வியாபாரம் . பெண்களை தாயாக மதிக்கும் நம் நாட்டில் எங்களுக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை இது தான்.
இப்படி எங்களைப் பற்றி எழுதினால்தான் பத்திரிக்கைக்கு வியாபாரம். என்னிடம் படுத்த ஆண்களை பற்றி ஒன்றும் எழுதியது இல்லை. அவர்களின் பெயர்களை கூட போடுவது இல்லை. எங்களுக்கு ஏன் இந்த நிலை என்று கூட சொன்னது இல்லை.

காட்டிக்குள் இரைத்தேடி அலையும் விலங்குகளைக் காட்டிலும் , நாட்டுக்குள் பெண் தேகம் தேடி அலையும் விலங்குகள் அதிகம்.

எனக்கும் என் குடும்பத்திற்கும் பொருள்கள் வாங்க வேண்டுமென்றால் விற்பதற்கு என்னுடல் இருந்தது. இப்போது நிரந்தரமாக பிணமாக இருக்கும் நான் அன்று இரவு பகலாக கட்டில் மேல் பிணமாகவோ , அல்லது நடிக்கும் கருவியாகவோ இருந்தால் தான் என் பிள்ளைக்கு பால் வாங்க பணம். நிர்வாணம் மட்டுமே ஆடையாக உடுத்தி பழக்கப்படுத்தப் பட்டவள். தேகம் மேயும் மாந்தர் செய்த காயங்களை மறைப்பதற்காக நூலாடை அணியவேண்டும்.

ஆசை பட்டு இந்த தொழிலுக்கு வந்திருந்தால் கூட வேஷம் போட்டு காலம் ஓட்டி இருப்பேன். வேதனையில் வந்தவள் தூறல் சிந்தாத வானம் இருக்கும் என் கண்ணீர் சிந்தாத நாட்கள் இல்லை. என்னை வேசி என்று ஏசும் எவரைப் பற்றியும் கவலைப் பட்டதே இல்லை .என் மீது கல்லெறிய எவருக்கும் தகுதியும் இல்லை.

உலகமே சேர்ந்து பெண்ணின் பெருமையை உயர்த்துவது எவ்வளவு பெரிய நாடக செயல் ? விதவை, விபச்சாரி, முதிர்கன்னி , மலடி ,ஓடுகாலி , ஒழுக்கங்கெட்டவள் இது போன்ற புனைபெயர் எந்த ஆண்களுக்கும் இல்லையே.  அப்படி என்றால் என்னிடம் வந்தவர்கள் எல்லாம் புனித மகான்களோ.? ஒரு பெண் தன் கணவனை மட்டும் எண்ணியும், ஒரு ஆண் தன் மனைவியை மட்டுமே எண்ணியும் உள்ளன்போடு வாழ்ந்தாலே என்னை போன்றவர்கள் தோன்றப் போவது இல்லையே. 

போகட்டும்,
என்னுடைய எதிர்பார்ப்பு எல்லாம் என் சந்ததிகளுக்கும் இந்த சமுதாயம் வேசி வேடம் அணிவித்திடக் கூடாது. நான் என் வேதனையை சொல்லி என்னை உத்தமியாக்கிக் கொள்ளவில்லை என்னால் கூட எத்தனையோ குடும்பம் சீரழிந்து உள்ளது . மனுஷியாக என்னை ஏற்காவிட்டாலும் சரி என்னுள்ளும் மனம் என்ற ஒன்று உள்ளது என்பதை ஏற்ககூடாதா ? செய்த பாவங்களுக்கு பாவமன்னிப்பு கேட்கவில்லை. பாவத்திற்கு தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும் . அதை தான் அனுபவித்தேன்...  என்று வருந்தினாள் அப்பெண்.

அப்போது அந்த புண்ணியவான் :
இல்லை அம்மா உன் பாவங்கள் இன்றோடு தீர்ந்தது அம்மா , ஆமாம் உன் போன்றோர் இல்லையெனில் இந்த சமூகம் இன்னும் இன்னும் சீரழிந்து போயிருக்கும். இப்போதே தாய்க்கும், பெற்றெடுத்த மகளுக்கும், உடன்பிறந்தவளுக்கும் வித்தியாசம் தெரியாத உன்மத்தர்கள் இங்கே அதிகரித்து விட்டனர். தாரத்தை இழந்து, தன்னிச்சையைத் தீர்க்க முடியா ஆண்களுக்கு  நீதான் அம்மா ஆறுதல். உன் போன்ற உத்தமிகள் இல்லையென்றால் நிலை என்னவாகும் , நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லையம்மா .

இன்னும் இன்னும் இது போல் உள்ளத்தாலும் உடலாலும் தினம் தினம் செத்து சமூகத்திற்கு நீ ஆற்றிய பணி அளப்பரியது .பாவத்தை சுமப்பவன் கடவுளல்ல பாவத்தை தீர்த்தவர்களே தெய்வமாகிறார்கள். நீ இங்கேயே  நரகத்தை முழுமையாய் அனுபவித்து விட்டாய். இனி உனக்காக சொர்க்கம் அதோ அங்கே திறந்திருக்கிறது என்று தாயே உன்னை வணங்குகிறேன்...என்றார் . 

அவளது ஆத்மா மகிழ்வுடன் காற்றோடு கலந்தே மறைந்தது...!

~மகி

Thursday, April 04, 2013

"மாணவர்கள் நினைத்தால் மாற்றங்கள் உருவாகும்" இந்த மாணவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

ஆதரவற்ற ஒரு பெண்ணும், சுமார் 30 வயதான, மனநலம் பாதிக்கப்பட்ட உடைகூட இல்லாமல் இன்னொரு பெண்ணும் கோவை சுங்கம் பகுதியில் பலமாதங்களாகச் சுற்றித் திரிவதை கோவை கிருஷ்ணா பொறியியல் கல்லூரி பேராசிரியர் பிரின்ஸ் பார்த்து , நமது ஈரநெஞ்சம் அமைப்புக்குத் தகவல் வழங்க, ஈரநெஞ்சம் அமைப்பு கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் பிரசன்னா மற்றும் சமீர் உதவியுடன் அந்த இரண்டு பெண்களையும் 04/04/2013 அன்று கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்தோம்.

மாணவர்களுக்குப் படிப்பு மட்டும் சமுதாயம் மேன்பட போதாது. அதற்கு மேலும் கடமை இருப்பதைக் கல்லூரி பேராசிரியர் பிரின்ஸ் மாணவர்களுக்குப் புரியவைக்க, மாணவர்கள் பிரசனா மற்றும் சமீர் அதைப் புரிந்து கொண்டு ஈரநெஞ்சம் அமைபிற்கும், பாதிக்கப்பட்ட அந்த இருபெண்களின் பாதுகாப்புக்கும் உதவியதை ஈரநெஞ்சம் மனதார பாராட்டுகிறது.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (153/2013)
ஈர நெஞ்சம்
Prof. Prince of Krishna Engineering College, Coimbatore informed Eera Nenjam about two young women, one of them mentally challenged wearing hardly any clothes on her, wanderiing in the area of Sungam, Coimbatore for many months. On hearing this, our volunteers Mr. Prasanna and Sameer from the same college helped them to get admitted in the Coimbatore Corporation Home on 04/04/2013.
Prof. Prince taught them an important lesson that just the college education is not enough and everyone has responsibility in helping the fellow citizens. Eera Nenjam appreciates the timely help of Prof. Prince, Mr. Prasanna and Mr. Sameer for helping those two women.
https://www.facebook.com/eeranenjam
~ Thanks (153/2013)
Eera Nenjam

Wednesday, December 21, 2011

மரங்கள் பூமிக்கு வரங்கள்..!

மரங்கள் பூமிக்கு வரங்கள்..!
மரங்கள் நமக்கு  தராதது என்று என்ன இருக்கிறது..?
மரங்களுக்காக நாம் என்ன குடுத்து இருக்கிறோம்..?
கருவறை முதல் கல்லறை வரை மரங்கள் தான் சுனக்கிறது..?
ஆணி அடித்தாலும் சரி 
தொட்டில் கட்டினாலும் சரி
மரங்கள் தொகையை தான் விரிக்கிறது..!
இடியானாலும், மின்னலானாலும், மழையானாலும், வெய்யில்லானாலும், மனிதனுக்கு  பொறுமையை கற்றுத்தருகிறது..!
மனிதன் கல்லை எறிந்தாலும்
மரங்கள் மனிதனுக்கு  மலர்களையே  உதிர்க்கிறது..!
மாநாட்டுக்குள் எந்த மரங்களும்  மார்தட்டிக்கொள்வது இல்லை தான்தான் உயர்ந்த ஜாதி என்று..!
எந்த மரமும் அடுத்த மரத்துக்கு  எதிரியாய்  இருந்தது இல்லை..!
மனிதனிடம்  எத்தனை  மிருகங்கள்..!
மரங்களிடம்  மரங்கள் மட்டுமே இருக்கின்றது..!
மனிதா... 

கொஞ்சம் கவனித்தாயா  
நீ 
மரங்களை 
வெட்டும் போதுகூட  
கிளைகள் 
உனக்கு சாமரம் வீசுவதை..!

Thursday, November 24, 2011

சாந்தாமணியின் நல்லகாலம் ~மகேந்திரன்










கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் சாந்தாமணி என்னும் பெண் வசித்து வந்துள்ளாள்,சாந்தாம...ணி இவளுக்கு ஆதரவு என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை , கடந்த நான்கு வருடமாக சாந்தாமணி மனநிலை பாதிக்கப்பட்டு இந்த நிலைக்கு விதியால் தள்ளப்பட்டால் , அந்த நஞ்சுண்டபுரம் பொது மக்கள் இவளுக்கு அவ்வப்போது உணவு வழங்கி வந்துள்ளனர் , ஆனால் கடந்த சிலநாட்களாக இவளுக்கு உணவு யாரும் குடுக்க படவில்லை என்று தெரிகிறது , நஞ்சுண்டாபுரம் பகுதியில் எனக்கு தெரிந்த தங்கை நந்தினி இவள் மூலமாக சாந்தாமணியை பற்றி இன்று 24/11/11 எனக்கு தகவல் வந்தது , உடனடியாக நான் அந்தபகுதிக்கு சென்று தங்கை நந்தினி அவளது தோழி சந்தியா அவர்களின் உதவியால் சாந்தாமனிக்கு முன் உதவி செய்து சாந்தாமணியை கோவை அன்னை தெரேசா காப்பகத்தில் சேர்த்துவிட்டு வீடு திரும்பினோம்,
தங்கை நந்தினியை பாராட்ட வார்த்தைகளே இல்லை
நந்தினி மிகவும் ஏழ்மை நிலை உடையவள் அடுத்த வேலைக்கு உணவு என்பது அவளுக்கு கனவு , நான் சமூக சேவகனாக உருவாக அவளும் ஒரு காரணம் என்பதை சொல்ல நான் இங்கு கடமை பட்டுள்ளேன் .
Magi Mahendiran

Saturday, November 12, 2011

நட்பு...

எனக்கு நட்பு
தேவை...
எனக்காக
அல்ல...
சமூதாயத்திர்க்காக...!

Thursday, September 29, 2011

பழனிக்கு உறவு கிடைக்கவேண்டும்... ~மகேந்திரன்

பழனி என்பவர்  ஒரு விபத்தில் கால் முறிந்து நடக்க  முடியாமல் கோவை நவஇந்திய பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகம் முன்பு மூன்று வருடமாக பரிதாபமான நிலையில் இருக்கிறார்  ,
ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் அவ்வப்போது பழனிக்கு உணவு குடுத்து வந்தனர் , இன்று காலை  ஈரம் நிறைத்த ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபரும்,எனது நண்பருமான பழனியப்பன் மூலம்  என்னை (மகேந்திரன்) அழைத்து இவரது நிலையை சொல்லி ஏதாவது ஒரு உதவி கிடைக்க கேட்டுக்கொண்டனர் ,
நான் நேரில் அவரை பார்க்கும் பொழுது அதிக முடியுடனும் பலவருடமாக குளிக்காமலும் மிகுந்த துர்னாற்றதுடன் நடக்க முடியாத நிலையில் பார்க்க பரிதாபமான நிலையுடன் இருந்தார் .
பிறகு ஹிந்துஸ்தான் மாணவர்கள் உதவியுடன் பழனி அவர்களுக்கு அதே இடத்தில் முடிவெட்டி ,குளிக்க வைத்து அங்கோம் அளவிற்கு வளர்ந்து இருந்த கை,கால் நகங்களை வெட்டிவிட்டு , வேறு உடை அணிவிக்கப்பட்டு தற்போது புதிய மனிதராக மாறியுள்ளார் ,


அதன் பிறகுதான் பழனி பேசத்துவங்கினார் அவர் சாலை பராமரிப்பு  பணிசெய்து வந்தவராம் , சத்தியமங்கலம் செலும் வழியில் உள்ள நம்பியூர் என்றும் மனைவி நான்கு வருத்திற்கு முன் இறந்து விட்டதாகவும் ஒரு விபத்தில் நடக்கமுடியாத நிலைக்கு வந்ததாகவும் ,ஒரு மகள் அவள் பெயர் விஜயலக்ஷ்மி திருமணம் ஆகிவிட்டது ,என்றார் , தனது மனைவியின் பெயர், மருமகன் பெயரும்  தெரியவில்லை என்றார், நம்பியூர் ADMK பிரசிடன்ட் ரங்கன் இவருக்கு தெரியும் என்றார் ,

கல்லூரி மாணவர்கள் இவரிடம் உங்களை ஏதாவது ஒரு காப்பகத்தில் சேர்த்து விடுகிறோம் அங்க உங்களை நல்லபடியாக பார்த்துகொல்வார்கள் என்றதற்கு  வரமறுத்துவிட்டார் , மேலும் பழனி கூறும் போது தான் இங்கு இருப்பது மகள் விகயலக்ஷ்மி க்கு தெரிந்தால் நேரில் வந்து தன்னை அழைத்து சென்று விடுவாள் நான் இங்கு இருப்பது அவளுக்கு தெரியாது ,
மாணவர்களுக்கு மட்டும் அல்ல நமக்கும் பழனியின் மகள் விஜயலக்ஷ்மிக்கு விபரம் தெரிந்து வந்து அழைத்து போக மாட்டாளா என்ற எண்ணமே தூக்கத்தை கெடுக்கிறது...

ஹிந்துஸ்தான்  மாணவர்கள் மூலம் உருவாக்கிய இந்த புதிய மனிதருக்கு உறவு கிடைக்குமா...
~மகேந்திரன்

Saturday, September 17, 2011

எங்க போனாங்களோ பழனியம்மாள்

நாளைய பொழுது பழனியம்மளுக்காக விடியுமா?
இன்று மாலை கோவை ஆவரம்பாளயம் சோபா நகரில் உள்ள எனக்கு தெரிந்த ஒரு நிறுவனத்தில் இருந்து ஒரு அழைப்பு வந்தது,
அதில் அவர்களுடைய அலுவலக வாசலில் சாலையோரமாக
ஒரு பெண் உடல் நலம் சரியில்லாமல் படுத்திருக்கிறாள் மகேந்திரன் சார் நீங்கள் வந்து அந்த பெண்ணிற்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்று,
உடனே நான் அந்த பகுதிக்கு சென்று அந்த பெண் இருந்த நிலையை பார்த்தேன் ஏதோ பழைய துணிகளை சுருட்டி ஓரத்தில் போட்டது போன்று இருந்தார் , மேலும் அந்த பெண் சற்று மயங்கிய நிலையில் இருந்தார் , அதுமட்டும் அல்லாது அவருடைய வலது கழுத்து பகுதியில் ஒரு பெரிய கட்டி உடைத்து அதில் இருந்து சீல் (ஜாலம்) வந்து அவருடைய உடையெல்லாம் நனைந்து பெரும் துர்நாற்றம் அடித்துக்கொண்டு இருந்தது ,
அதை பொறுத்துக்கொண்டு அந்த பெண்ணை தொட்டு நீ யார் , எங்கிருந்து வருகிறாய் என்றதற்கு சிரம்மப்பட்டு பழனியம்மாள் என்று மட்டும் சொல்லி மயங்கிவிட்டாள்,  பிறகு 108 ஆம்பலான்ஸ் வரவழைத்து அந்த பழனியம்மாளை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல எனக்கு மிகவும் உறுதுணையாக நண்பர் கென்னடி துணைக்கு வந்தார்.
GH அழைத்து சென்றோம் அங்கு அந்த பழனியம்மாள் யார் என்றார்கள் நடந்ததை சொன்னேன் , ஆனால்  GH ல் இவருக்கு துணைக்கி யாரேனும்  இருந்தால் தான் பழனியம்மாளுக்கு வைத்தியம் செய்வோம் என்றார்கள் அதற்க்கு நான்  அவர்களிடம்
மிகவும் போராடி  இன்று இரவு உங்கள் பாதுகாப்பில் வைத்துக்கொள்ளுங்கள் எனக்கு கொஞ்சம் வேலை உள்ளது உங்கள் வைத்தியம் முடிந்ததும் நான் நாளை வந்தது ஏதாவது ஒரு காப்பகத்தில் சேர்த்து விடுகிறேன் அதற்க்கு அரை மனதுடன் சம்மதித்தனர் ஆனால் அதன் உள்ளருத்தம் எனக்கு புரியவில்லை கடவுள் மீது பாரத்தை போட்டுவிட்டு வெளியே வந்து , எனக்கு தெரிந்த இரண்டு காப்பகத்தில் பழனியம்மாளுக்காக இடம் கேட்க ஒரு காப்பகத்தில் நிர்வாகி  ஊரில் இல்லை என்றும் மற்றொன்றில் மாதம் மாதம் பணம் வேண்டும் என்று கேட்க எனக்கும் நண்பர் கென்னடிக்கும் பழனியம்மாளை பற்றி கவலை அதிகமானது , என்ன செய்யபோகிறோம் என்று யோசிக்கும் போது நினைவுக்கு வந்தது பாரத அன்னை இல்லை ஒன்று அவர்களை தொடர்பு கொண்டு பழநியம்மாவை பற்றி சொல்ல அதற்க்கு பாரத அன்னை நிர்வாகி நாளை காவல் துறை அனுமதியோடு அழைத்து வாருங்கள் என்றார்கள்.
பெரும் நிம்மதியோடு காப்பக நிர்வாகிக்கு நன்றி சொல்லிவிட்டு நம்பிக்கையோடு வீடு திரும்பினோம் நானும் எனது நண்பர் கென்னடியும்.
நாளைய பொழுது பழனியம்மளுக்காக விடியுமா?
~மகேந்திரன்
 இன்று  என்னுடைய இன்னொரு நண்பர் கண்ணன்  அவரை தொடர்புகொண்டு மருத்துவமனைக்கு சென்று பலனியம்மாவை பார்த்து மருத்துவமனையில் இருந்து டிச்சார்ஜ் செய்தது பாரத அன்னை இல்லை இல்லத்தில் சேர்த்துவிட்டு வரலாம் என்று சொன்னதும் கண்ணன் உடனே வந்து விட்டார்,
மருத்துவனை சென்று நேற்று  பழநியம்மாவை அனுமதித்து இருந்த வார்டிற்கு சென்று பார்த்தோம் பெரும் அதிர்ச்சி...
அந்த வார்டில் பழநியம்மாவை காணவில்லை அங்கு இருந்த GH முழுவதும் தேடிப்பார்த்து விட்டு நேற்று நேற்று அவர் இருந்த வார்டில் உள்ள மருத்துவ உதவியாளரை பழநியம்மாவை பற்றி கேட்டபோது அந்த பழனியம்மாள் யார் அது போன்று ஒருவரும் இங்கு அனுமதிக்க வில்லையே என்று அங்கு இருக்கும் கோப்புகளை பார்த்துவிட்டு என்ங்களை வெளியே அனுப்பிவிட்டார் மீண்டும் மருத்துவமனை முழுவதும் தேடிப்பார்த்துவிட்டு , அந்த உடல் நோய்வாய் பட்ட பழனியம்மாள் எங்கு போனார்களோ இப்போது எங்கு , எப்படி இருக்கிறார்களோ தெரியவில்லை மீண்டும் யாராவது கண்ணில் அவர் தேன் பட்டால் மறக்காமல் 9843344991 மகேந்திரன் என்னை தொடர்புக்கொள்ளுங்கள்...

கோவில் போல எண்ணித்தான் மருத்துவமனைக்கு வருகிறார்கள், நேரில் வராத கடவுள் மருத்துவராய் வருகிறார் என்று தான் மருத்துவரை நம்புகின்றனர், இந்த எண்ணத்தில் தான் பழநியம்மாவை GH ல் விட்டு வந்தேன் , ஆனால் இப்போது பழனியம்மாள் 
எங்கே... கடவுள் என்ன செய்தது ?????
பாவம் பழனியம்மாள்

கல்லறை திருவிழா...

சாதிக்கான கலவரம் சிலசமயம் சமாதானத்தில்,
மதத்துக்கான போராட்டம் மறந்து கூட போகிறது,
தண்ணீருக்கான போராட்டம் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது,
ஆனால்
காதலுக்கான போராட்டம் கல்லறை திருவிழா நடத்தி வைக்கிறது...!


Friday, September 16, 2011

நாளைய பொழுது பழனியம்மளுக்காக விடியுமா?

இன்று மாலை கோவை ஆவரம்பாளயம் சோபா நகரில் உள்ள எனக்கு தெரிந்த ஒரு நிறுவனத்தில் இருந்து ஒரு அழைப்பு வந்தது,
அதில் அவர்களுடைய அலுவலக வாசலில் சாலையோரமாக
ஒரு பெண் உடல் நலம் சரியில்லாமல் படுத்திருக்கிறாள் மகேந்திரன் சார் நீங்கள் வந்து அந்த பெண்ணிற்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்று,
உடனே நான் அந்த பகுதிக்கு சென்று அந்த பெண் இருந்த நிலையை பார்த்தேன் ஏதோ பழைய துணிகளை சுருட்டி ஓரத்தில் போட்டது போன்று இருந்தார் , மேலும் அந்த பெண் சற்று மயங்கிய நிலையில் இருந்தார் , அதுமட்டும் அல்லாது அவருடைய வலது கழுத்து பகுதியில் ஒரு பெரிய கட்டி உடைத்து அதில் இருந்து சீல் (ஜாலம்) வந்து அவருடைய உடையெல்லாம் நனைந்து பெரும் துர்நாற்றம் அடித்துக்கொண்டு இருந்தது ,
அதை பொறுத்துக்கொண்டு அந்த பெண்ணை தொட்டு நீ யார் , எங்கிருந்து வருகிறாய் என்றதற்கு சிரம்மப்பட்டு பழனியம்மாள் என்று மட்டும் சொல்லி மயங்கிவிட்டாள்,  பிறகு 108 ஆம்பலான்ஸ் வரவழைத்து அந்த பழனியம்மாளை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல எனக்கு மிகவும் உறுதுணையாக நண்பர் கென்னடி துணைக்கு வந்தார்.
GH அழைத்து சென்றோம் அங்கு அந்த பழனியம்மாள் யார் என்றார்கள் நடந்ததை சொன்னேன் , ஆனால்  GH ல் இவருக்கு துணைக்கி யாரேனும்  இருந்தால் தான் பழனியம்மாளுக்கு வைத்தியம் செய்வோம் என்றார்கள் அதற்க்கு நான்  அவர்களிடம்
மிகவும் போராடி  இன்று இரவு உங்கள் பாதுகாப்பில் வைத்துக்கொள்ளுங்கள் எனக்கு கொஞ்சம் வேலை உள்ளது உங்கள் வைத்தியம் முடிந்ததும் நான் நாளை வந்தது ஏதாவது ஒரு காப்பகத்தில் சேர்த்து விடுகிறேன் அதற்க்கு அரை மனதுடன் சம்மதித்தனர் ஆனால் அதன் உள்ளருத்தம் எனக்கு புரியவில்லை கடவுள் மீது பாரத்தை போட்டுவிட்டு வெளியே வந்து , எனக்கு தெரிந்த இரண்டு காப்பகத்தில் பழனியம்மாளுக்காக இடம் கேட்க ஒரு காப்பகத்தில் நிர்வாகி  ஊரில் இல்லை என்றும் மற்றொன்றில் மாதம் மாதம் பணம் வேண்டும் என்று கேட்க எனக்கும் நண்பர் கென்னடிக்கும் பழனியம்மாளை பற்றி கவலை அதிகமானது , என்ன செய்யபோகிறோம் என்று யோசிக்கும் போது நினைவுக்கு வந்தது பாரத அன்னை இல்லை ஒன்று அவர்களை தொடர்பு கொண்டு பழநியம்மாவை பற்றி சொல்ல அதற்க்கு பாரத அன்னை நிர்வாகி நாளை காவல் துறை அனுமதியோடு அழைத்து வாருங்கள் என்றார்கள்.
பெரும் நிம்மதியோடு காப்பக நிர்வாகிக்கு நன்றி சொல்லிவிட்டு நம்பிக்கையோடு வீடு திரும்பினோம் நானும் எனது நண்பர் கென்னடியும்.
நாளைய பொழுது பழனியம்மளுக்காக விடியுமா?
~மகேந்திரன்

நட்பால் தான்..!

ஒரு உயிர்
ஜனிப்பது உடல்களின்
கூடல்
என்றால்...
அந்த உயிர்
வாழ்வது
நல உள்ளங்களின்
 நட்பால் தான்..!

தவற விட்டுவிடாதிங்க..!

வாழ்கையில்
காதலை
தவற விட்டுவிடாதிங்க..!
அதற்காக
வாழ்கையை
காதலால்
தவற விட்டுவிடாதிங்க..!


Wednesday, September 14, 2011

கலைவாணியை வீதியில் விட்டுவிடக்கூடாது -மகேந்திரன்

இவர் பெயர் சிவகுமார் நல்ல கலைஞர்
ஊர் கும்பகோணம் பிழைப்பைத்தேடி கோவையில் சாலையோரம் காணப்பட்டார்,
அவரிடம்...

 
விதி இப்படி சாலைக்கி தள்ளிவிட்டது, ஒருவர் தான் முன் நிற்கவைத்துவிட்டு அவரை பார்த்தபடியே களிமண்ணை கொண்டு ஒருசில நிமிடங்களில் தான் முன்னர் நிற்பவரின் உருவத்தை செய்து  முடிப்பார் ,
 
சிவகுமாரை போன்ற கலைஞர்கள் தற்போது வயிற்று பிழைப்பிற்காக கலையை சாலையில் தவம் கிடக்கின்றன...
சிலசமயம் இவர்களை பார்க்கும் போது சாலையில் கலைவாணி கையில் திருவோடு இருப்பது போல மனதில் இடி விழுகிறது...
சிவகுமார் இவர் செய்யும் குருவி, யானை, குதிரை ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் விற்று வயிற்றை கழுவிக்கொண்டு இருக்கிறார்,இவரை பற்றி நண்பர் V. பழனியப்பன் இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதுய கட்டுரை பிரசுரமானது, அதை படித்த  SRI KRISNA WOODEN ART நிறுவனர் N. விகயகுமார் இந்தியன் எக்ஸ்பிரஸ்  தொடர்புகொண்டு சிவகுமார் அவருக்கு தகுந்த வேலை தான் ஏற்படுத்தி தருவதாக சொல்லி உறுதி அளித்து சிவகுமார் வாழ்வில் வசந்தத்தை காட்டியுள்ளார்,

N. விகயகுமார் அவருக்கு சிவக்குமாரை அடையாளம் காட்டிய இந்தியன் எக்ஸ்பிரஸ் V.பழனியப்பன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
இன்னும் இது போன்ற நல்ல கலைஞர்கள் முகவரி இல்லாமல் இருக்கிறார்கள் அவரளுக்கு 

N. விகயகுமார், V. பழனியப்பன் போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்கள் கிடைக்க ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன்...
~மகேந்திரன் 

Tuesday, September 13, 2011

அனாதை...

சாலையோரம்

ஒரு ஆணுறை..!

தப்பியது

ஒரு அனாதை..!

Monday, September 12, 2011

ஆண்களே..!

ஆண்களே! பெண்களை புகழாதிர்கள்
அவர்களுக்கு தலை கனம் அதிகம் !
பெண்களே! ஆண்களை பார்கதிர்கள்
அவர்களுக்கு மனோபலம் குறைவு !

Sunday, September 11, 2011

அன்னக்கொடை...

அன்னக்கொடை
அன்னதானம் ( மகேந்திரன் )  என்னுடைய நீண்டநாள் கனவு...
கோவில் விழா, திருமண விழா, பிறந்தநாள் விழா, போன்ற விழாக்களில் எல்லோரும் அன்னதானம் செய்கிறார்கள்...
இன்னும் சிலபேர் உணவு மீதமானதால் அதை அன்னதானமாக செய்கிறார்கள், இதில் சாப்பிட வருகிறவர்கள்  வசதியானவர்கள்,
வசதியற்றவர்கள், வழிப்போக்கர்கள் என வருகிறார்கள் சிலபேர் போதையிலும் வருகிறார்கள்...
இதில் எனக்கு உடன்பாடில்லை,
எத்தனையோ பேர் உறவுகள் அறியாமல் தாய் தந்தை இழந்து எங்கு இருக்கிறோம் எப்படி இருக்கிறோம் என்று கூடதெரியாமல் உடுத்த உடை இல்லாமல் உன்ன உணவு இல்லாமல், படிக்கவும் வழி இல்லாமல் இருந்து வருகிறார்கள்,
அவர்களுக்கு வயிறார உணவு வழங்குவதே அன்னதானம் என மனதில் பட்டது...


அதை செயல்படுத்த நானும் எனது நண்பர்களும் (தபசுராஜ் , கண்ணன் , மகேஷ் , அருள்ராஜ்) முடிவு செய்து பொதுமக்களுடன் இணைந்து வாரம் ஒருநாள் ஞாயிறு மதிய வேளையில் 100 ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகிறோம்,
இன்றோடு (11/09/2011) 25 வது வாரம் ஆகிறது...
இந்த சேவையில் தாங்களும் பங்குகொள்ள விரும்புகிறோம்...
முடிந்தவரை செய்கிறோம்...!
முடிந்தால் எல்லாநாளும் எல்லாவேளையிலும் செய்வோம்...!
வாருங்கள்...!
தொடர்புக்கு 9843344991 


இன்றைய அன்னக்கொடை 25/09/11 G .கந்தசாமி


நமது நண்பர் கோவையை சேர்ந்த  G .கந்தசாமி, (9443911381) என்பவர் தனது 40 வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார் , நாம் அன்னக்கொடையுடன் இணைந்து இந்த மதியவேளை ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி அவர்களை மகிழ்வித்தார் ,

இன்றைய அன்னக்கொடை 02/10/11
Uma Ganesh Iyer
கார்னர் ஸ்டோன்
அன்னக்கொடை ஆதரவற்ற குழைதைகளுக்கு மதிய உணவு வழங்கிட நமது facebook தோழி
Uma Ganesh Iyer அவர்கள் இரண்டாயிரம் ருபாய் அனுப்பி வைத்திருந்தார் , அதனை கொண்டு இன்று 02/10/2011 கார்னர் ஸ்டோன் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது, 

இன்றைய அன்னக்கொடை 09/10/11  பொன்னையா கண்ணன் facebook நண்பர் 

கோவை மணியகாரன் பாளையத்தில் இமயம்  பெண்கள் இல்லம்  ,இங்கு கணவனாலும் ,குடும்பத்தராலும் கைவிடப்பட்ட அபலை பெண்களுக்கு இன்று ஞாயிற்று கிழமை மதியம் பசிக்கு உணவு வழங்கப்பட்டது இதில் நமது face book நண்பர்
Ponnaiah kannan நேரில் கலந்துக்கொண்டார்...
~மகேந்திரன்

புல்லாக இருப்பதே மேல்...

மரமாக இருப்பதை விட
புல்லாக
இருப்பதே மேல்...
எத்தனை பேர்
மிதித்தாலும்
எழுந்து
நிற்கும் புல்
எந்த சூரவளியாலும்
சூறையாட முடியாது..!


Monday, September 05, 2011

மரத்தை வெட்டி வீழ்த்துவோம்! நம் மண்ணின் மாண்பை காப்போம்!

கருவேலங்காட்டுமரங்கள்

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் ‘மரங்களை நடுங்கள்’ என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் ‘மரங்களை வெட்டுங்கள்’ என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ‘ ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ‘ என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்க கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

 மண்ணின் வில்லன்
 அமெரிக்க தாவரவியல் பூங்கா , ‘வளர்க்க கூடாத நச்சு மரங்கள்’ என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் ‘காட்டு கருவேல மரம்’ தான் அது. நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல…., இப்போதைய பிரச்சனை….!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள்
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல…! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது…!
 இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது….. ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும், நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.
தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.
உடம்பு முழுதும் விஷம்

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்….?!!
ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.
காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.
அறியாமை
 நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.
கேரளாவின் விழிப்புணர்வு
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்…..!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்….??! என்ன முரண்பாடு…?? என்ன அறியாமை..??
ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம்
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .
சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?

இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்….

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்…..! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!