Showing posts with label மரம். Show all posts
Showing posts with label மரம். Show all posts

Friday, October 26, 2012

மரங்களை எல்லாம் இப்படி கடவுள்ளாக ஆக்கிட்டா


மரங்களை எல்லாம் இப்படி கடவுள்ளாக ஆக்கிட்டா யாரும் வெட்ட மாட்டார்களோ...
"மே பிளவர்" மரம் இல்லைங்க இது விநாயகர் மரம்
கோவை ராம் நகர் பகுதியில்...
~மகி

Monday, September 24, 2012

பாண்டிச்சேரியில் மரம் நடுவிழா ~ ஈரநெஞ்சம்


[For English version, please scroll down]
"ஈர நெஞ்சம்" அமைப்பின் சார்பில் பாண்டிச்சேரியில் எம்பலம், மறைமலை அடிகளார் அரசு மேல் நிலைப்பள்ளியில் 22.09.2012 அன்று மரம் நடு விழா நடை பெற்றது. அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரும், ஈர நெஞ்சத்தின் தொண்டு ஆர்வலருமான திரு. அன்புதாசன் அவர்களின் முயற்சியினால், இந்த மரம் நடு விழா இனிதே நடைபெற்றது.

காலை ஒன்பது மணிக்கு, பள்ளியின் துணை முதல்வர் திரு. இரகோத்தமன் அவர்கள் தலைமை தாங்கி, முதல் மரக்கன்றை நட்டு விழாவைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர், ”இன்று இங்கே நிழல் தரும் மரங்கள் மட்டும் நடப்படவில்லை; தான் படித்த பள்ளிக்குத் தன்னால் முடிந்தவற்றைச் செய்து தர வேண்டும் என்ற எண்ணத்தையும் சேர்த்து மாணவர்கள் மனதில் விதைக்கக் காரணமாய் இருந்த முன்னாள் மாணவர் அன்புதாசனை வாழ்த்துகிறேன்” என்று பேசினார். அது மட்டுமின்றி ஈர நெஞ்சத்தின் தொடர் சேவைகளையும், அனைத்து நிர்வாகிகளையும், தொண்டு ஆர்வலர்களையும் பாராட்டி நினைவுப் பரிசும் வழங்கினார். நண்பகல் 12 மணி அளவில் அனைத்து மரக்கன்றுகளும் நடப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது. இந்த விழாவில்125 மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டன.

இதற்கு எல்லாவகையிலும் உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் திரு கோவிந்தன், திரு. ராஜசேகரன் இருவருக்கும் "ஈர நெஞ்சம்" தனது நன்றியையும் பாராட்டுதல்களையும் மனமாரத் தெரிவித்துக் கொள்கிறது. மரம் நடுவதற்கு வேண்டிய உதவி செய்ததற்கும், நட்ட மரங்களை நீர் ஊற்றி அவற்றை நன்றாகப் பராமரிக்க வேண்டிய எல்லாவற்றையும் தொடர்ந்து செய்வதாக உறுதி அளித்த அனைத்து மாணவர்களுக்கும் ஈர நெஞ்சம் தனது நன்றியையும் பாராட்டுதல்களையும் மனமாரத் தெரிவித்துக் கொள்கிறது. அனைத்து மாணவர்களுக்கும் முன்னோடியாக விளங்கும் அன்புதாசனைப் போல இன்னும் பலர் உருவாக எல்லாம் வல்ல இறைவனை ஈர நெஞ்சம் வேண்டுகிறது. விழாவின் முடிவில், அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

~நன்றி (84/2012 )
"ஈர நெஞ்சம்

"https://www.facebook.com/eeranenjam

......

We had the "Tree Plantation" ceremony at Maraimalai Adikalar Government Higher Secondary School, Embalam, Pondicheery on 22.09.2012 successfully. It was possible by the good effort of one of our volunteers Mr. Anbu Dassan and he also happened to be an alumni of this school.

Mr. Rahothman, Vice-Principal,initiated the function by planting the first tree. In his speech, he praised Mr.Anbu Dassan for his effort of planting trees and added that he not only helped to plant trees but also made himself a good example to the present students. He also congratulated the various services and activities of EERA NENJAM and its trustees. There were 125 trees planted on this function and it was completed by 12 noon.

We would like to thank the teachers Mr. Govindan, Mr. Rajasekaran for their help. The school management has promised us that they would take care of the planted trees by watering them as needed.

We expect some more volunteers would come and engage themselves in these of activities in the following years such as Mr. Anbu Dassan. Snack was served to all the participants.
~Thanks (84/2012)
EERA NENJAM























Wednesday, December 21, 2011

மரங்கள் பூமிக்கு வரங்கள்..!

மரங்கள் பூமிக்கு வரங்கள்..!
மரங்கள் நமக்கு  தராதது என்று என்ன இருக்கிறது..?
மரங்களுக்காக நாம் என்ன குடுத்து இருக்கிறோம்..?
கருவறை முதல் கல்லறை வரை மரங்கள் தான் சுனக்கிறது..?
ஆணி அடித்தாலும் சரி 
தொட்டில் கட்டினாலும் சரி
மரங்கள் தொகையை தான் விரிக்கிறது..!
இடியானாலும், மின்னலானாலும், மழையானாலும், வெய்யில்லானாலும், மனிதனுக்கு  பொறுமையை கற்றுத்தருகிறது..!
மனிதன் கல்லை எறிந்தாலும்
மரங்கள் மனிதனுக்கு  மலர்களையே  உதிர்க்கிறது..!
மாநாட்டுக்குள் எந்த மரங்களும்  மார்தட்டிக்கொள்வது இல்லை தான்தான் உயர்ந்த ஜாதி என்று..!
எந்த மரமும் அடுத்த மரத்துக்கு  எதிரியாய்  இருந்தது இல்லை..!
மனிதனிடம்  எத்தனை  மிருகங்கள்..!
மரங்களிடம்  மரங்கள் மட்டுமே இருக்கின்றது..!
மனிதா... 

கொஞ்சம் கவனித்தாயா  
நீ 
மரங்களை 
வெட்டும் போதுகூட  
கிளைகள் 
உனக்கு சாமரம் வீசுவதை..!

Sunday, September 25, 2011

கனிமரம்...

மரத்தில்
வேர், கிளை, இல்லை, காய், கனி, பூ,
இவைகள் இருக்கும்...
உன் மரத்தில்
வேர், கிளை, இல்லை, காய், பூ
இவையெல்லாம்
கனியாகவே இருக்கும் 

கனிமரம்...♥

Monday, September 05, 2011

மரத்தை வெட்டி வீழ்த்துவோம்! நம் மண்ணின் மாண்பை காப்போம்!

கருவேலங்காட்டுமரங்கள்

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் ‘மரங்களை நடுங்கள்’ என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் ‘மரங்களை வெட்டுங்கள்’ என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ‘ ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ‘ என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்க கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

 மண்ணின் வில்லன்
 அமெரிக்க தாவரவியல் பூங்கா , ‘வளர்க்க கூடாத நச்சு மரங்கள்’ என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் ‘காட்டு கருவேல மரம்’ தான் அது. நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல…., இப்போதைய பிரச்சனை….!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள்
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல…! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது…!
 இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது….. ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும், நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.
தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.
உடம்பு முழுதும் விஷம்

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்….?!!
ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.
காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.
அறியாமை
 நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.
கேரளாவின் விழிப்புணர்வு
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்…..!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்….??! என்ன முரண்பாடு…?? என்ன அறியாமை..??
ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம்
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .
சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?

இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்….

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்…..! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!