Showing posts with label மறுவாழ்வு. Show all posts
Showing posts with label மறுவாழ்வு. Show all posts

Sunday, April 05, 2015

ஒருவருட முயற்சிக்கு பிறகு மேற்கு வங்க வாலிபரை அவரது உறவினருடன் ஒப்படைப்பு.

கடந்த வருடம் 19/04/2014 அன்று கோவை ரயில் நிலையத்தில் இருந்து ரயில்வே காவலர் மூலமாக பிரதீப் 23 மனநிலை சரி இல்லாத நிலையில் மீட்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்தனர்.






மனநிலை பாதித்த நிலையில் பிரதீப்
அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அறக்கட்டளை பிரதீப் பிடம் விசாரித்து பல தகவல்கள் சேகரித்து அவருடைய உறவினர்களை தேடும் முயற்சியுடன் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் முயற்சியையும் மேற்கொண்டது. https://www.facebook.com/photo.php?fbid=345269842264644&set=pb.100003448945950.-2207520000.1428237057.&type=3&theater சுமார் ஒருவருடமாக ஈரநெஞ்சம் அறக்கட்டளை மேற்கொண்ட பெரும் முயற்சியின் பயனாக பிரதீப்பிற்கு உடல் நலனும் தேறியது . அதோடு அவரது உறவினர் முகவரியும் கண்டுபிடிக்கப்பட்டது மேற்கு வங்காளம் பீர்பாரா ( Birpara ) பக்கத்தில் ராம்தாலா (ராம்ராஜ்தாலா) என்னும் பகுதியில் உள்ள டீ எஸ்டேட் கம்பெனிகளுக்கு பிரதீப் பற்றிய தகவல்கள் தொடர்ந்து மெயில் மூலம் அனுப்பப்பட்டு வந்தது . இதனைக் கவனித்த சில கம்பெனிகள் பிரதீப்பின் புகைப்படத்துடன் அந்த ஊர் பகுதியில் உள்ள சுவர்களில் நோட்டிசாக ஒட்டி பிரதீப்பின் உறவை தேடும் முயற்சியில் அவர்களும் ஈரநெஞ்சம் அறக்கட்டளையோடு கைக் கோர்த்தனர். அதன் மூலம் பிரதீப்பின் உறவினர்கள் ஈரநெஞ்சம் அறக்கட்டளையைத் தொடர்பு கொண்டனர் . உறவினர்கள் கிடைத்துவிட்டார்கள் என்ற மகிழ்ச்சி அடைந்தாலும் கூட அவர்கள் அதிக வெளியுலக வாழ்க்கை அறியாதவர்கள் . ஆதலால் அவர்களிடம் பிரதீப் பற்றி கூறியதில் அவர்களுக்கு கோவை பற்றியும், இந்த ஊர் எங்கு உள்ளது என்பது பற்றியும் அவர்களுக்கு விளங்கவில்லை . அவர்கள் படிப்பறிவும் போதிய வெளி உலக வாழ்க்கையும் அறியாதவர்கள் போன்று தெரிந்தது . இதனால் பிரதீப்பின் உறவினர்களை கோவைக்கு வரவழைப்பத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு வந்தது. ஈரநெஞ்சம் அறக்கட்டளை தொடர்ந்து பிரதீப்பை அவர்களது உறவினர்களுடன் ஒப்படைக்கும் முயற்சியை மேற்கொண்டு வந்தது . இதன் பலனாக கடந்த வாரத்தில் பிரதீப்பின் சகோதரர் மார்டின் என்பவர் தொடர்பில் கிடைத்தார் . அவரிடம் விபரத்தை சொன்னதும் தம்பியை அழைத்து செல்ல உடனடியாக இன்று கோவைக்கு வந்தார் . பிரதீப் அவரை சந்தித்ததும் ஆனந்த கண்ணீர் மல்க தொலைத்த உறவை கண்முன் கண்டதும் கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது நம்மையும் கலங்கவைத்துவிட்டது. பிரதீப்பின் சகோதரர் மார்டின் கூறும்போது " கேரளாவில் என்னோடு தான் பிரதீப் வேலைப் பார்த்து வந்தான். கடந்த வருடம் விடுமுறைக்கு ஊருக்கு செல்வதாக சொல்லிக் கொண்டு சென்றவன் வீடு போய் சேரவில்லை. அலைபேசி வசதி எங்கள் ஊரில் சரிவர இல்லாததால் இவன் காணாமல் போனதும் எனக்கு தெரியாது கடந்த மாதம் நான் விடுமுறைக்கு ஊருக்கு போனபோதுதான் பிரதீப் அங்கு வரவில்லை என்பது தெரியவந்தது. எனது பெற்றோர்களிடம் ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர் பிரதீப் பற்றி அவ்வப்போது பக்கத்து வீட்டினரின் அலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவார்கள். ஆனால் எங்கிருந்து பேசுகிறார்கள் என்பது தெளிவாக என் பெற்றோருக்கு புரியவில்லை . என்னிடத்திலும் தகவல் தெரிவிக்க முடியாத நிலை அதனால் தான் தகவல் தெரிவிக்க வில்லை என்றும் கூறினார்கள் . பிரதீப்பை எப்படி கண்டுபிடிப்பது என்ற கவலையில் இருந்த போதுதான், கடந்தவாரம் மீண்டும் பக்கத்து வீட்டிற்கு அலைபேசியில் ஈரநெஞ்சம் என்று சொல்லி பிரதீப் பற்றி கூறினார்கள் . அதனாலேயே பிரதீப் இருக்கும் இடம் தெரிந்து உடனடியாக தம்பியை அழைத்து செல்ல வந்தேன் " என்றார்.



குணமடைந்த பிரதீப்

பிரதீப் கூறும் பொழுது " நான் எந்த நிலையில் இங்கு வந்தேன் என்று எனக்கு இதுவரை தெரியாது . ஆனால் இங்கு எனக்கு அன்பும் அனுசரணையும் அதிகம் கிடைத்தது . இங்கு உள்ள முதியோர்களை பார்த்துக் கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது இங்கு உள்ள சேவையைக் கண்டு மெய் சிலிர்த்து போனேன். அதனாலேயே இவர்களை விட்டுப் பிரிய மனம் இல்லை. என்னை முழுமனிதனாக மாற்றி உறவினர்களுடன் இணைத்து வைக்க ஈரநெஞ்சம் அறக்கட்டளை மற்றும் மாநகராட்சி காப்பக நிர்வாகிகள் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு நான் பெரிதும் கடமைப்பட்டு இருக்கிறேன் . இங்கு இருந்ததில் நான் தமிழும் நன்கு கற்றுக் கொண்டேன். இப்போது நான் மகிழ்ச்சியாக அண்ணனுடன் ஊர் செல்கிறேன் " என்று சொல்லிக் கிளம்பினார்.


பிரதீப் அவர்களை அவரது உறவினருடன் சேர்த்துவைக்க உதவிய அணைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் . ~ஈரநெஞ்சம்

Thursday, December 20, 2012

கண்ணன் அநாதை இல்லைங்க

"ஈர நெஞ்சம் சேவைகள்" / "EERA NENJAM Services"
[For English version, please scroll down]
******
13.12.2012 அன்று, ஹலோ எஃப்.எம்.ஐச் சேர்ந்த திரு.கண்ணன் அவர்கள், காலை அலுவலகம் செல்லும் வழியில் கோவை செஞ்சுலுவைச்சங்கம் அருகே ஒரு நபர் உடல்நலம் கு...ன்றிய நிலையில் தள்ளாடியபடி சென்று கொண்டு இருப்பதை கண்டார். பின்னர், அவரது பணி முடிந்து திரும்புகையில் அதே நபர் மயங்கி கிடப்பதைக் கண்டதும், எங்கள் அமைப்பிற்குத் தகவல் கொடுத்தார். உடனே அங்கு சென்ற "ஈர நெஞ்சம்" அமைப்பினர் மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். அவரைப் (படத்தில் இருப்பவர்) பற்றியத் தகவல் தெரிந்தோர் ஈர நெஞ்சம் அமைப்பைத் தொடர்பு கொள்ள (7200099400 /eeranenjam@gmail.com) வேண்டுகிறோம்.
நன்றி (117/2012)
ஈர நெஞ்சம்
......
Mr. Kannan, working for Hello FM Radio Station, found an unhealthy person at Coimbatore Red cross, when he was going to his work on 13.12.2012. He saw the same person fainted at the same place while he returned from his work in the evening and contacted our organization. We made arrangement to admit him in a hospital. We request you to contact us (7200099400/ eerannejam@gmail.com) if you know any information about him (in the picture)
~Thanks (117/2012)
EERA NENJAM 


######################################################

 இந்தனை  தொடர்ந்து ...

 ######################################################






''ஈர நெஞ்சம் சேவைகள் / EERA NENJAM Services''
******
[For English version, please scroll down]
13.12.2012 அன்று, ஹலோ எஃப்.எம்.ஐச் சேர்ந்த திரு.கண்ணன் அவர்கள் சொன்னதன் பேரில், எங்கள் அமைப்பால், கோவை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் சற்று உடல்நலம் தேறிய நிலையில், தனது பெயர் கண்ணன் என்றும், லாரி ஓட்டுனராக பணி புரிவதாகவும், தனது ஊர் கோவை சரவணம்பட்டி என்றும், தனது தம்பி பெயர் நடராஜ் என்றும் எங்களிடம் தன்னைப்பற்றிய சில விவரங்களைத் தெரிவித்தார். அ...தைத் தொடர்ந்து அவரது தம்பி நடராஜ் அவர்களை ஈர நெஞ்சம் அமைப்பு தேடிக் கண்டுப்பிடித்து அவரது அண்ணன் பற்றிய தகவலை சொன்னதன் பேரில் அவர் 17.12.2012 அன்று தனது அண்ணனை அழைத்துச் சென்று வேறு ஒரு மருத்துவமனையில் சேர்த்து உள்ளார் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

திரு நடராஜ், எங்கள் அமைப்பிடம் அடிக்கடி, தனது அண்ணன் வெளி ஊர்களில் உள்ள கோவில்களுக்குச் சென்று வருவார் என்றும், அவர் இந்த முறை அதுபோல சென்ற போது எதிர்பாராமல் நடந்துள்ள விபத்தின் காரணமாக இப்படி ஆகிவிட்டது என்றும், அவரைப் பற்றிய தகவல் தெரியாமல் தான் தேடிக்கொண்டு இருந்தபோது ஈர நெஞ்சம் அமைப்பு தனது அண்ணனை கண்டு பிடித்து தன்னிடம் சேர்த்து உள்ளது என மனம் நெகிழ்ந்து நமக்கு நன்றி தெரிவித்தார் .

திரு.கண்ணன் ( ஹலோ எஃப்.எம்) அவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் .இந்த உலகத்தில் ஆதரவற்றோர் என யாருமே இல்லை. தொலைந்த உறவை மீட்டுக் கொடுத்த மகிழ்வில் ஈர நெஞ்சம் திரு. கண்ணனன் அவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவிப்பதோடு இது போல இன்னும் பலருக்கு உதவத் துணை புரிய வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறது.
~நன்றி (120/2012)
ஈர நெஞ்சம்
......
You may know that an unidentified person was admitted to Coimbatore Government Hospital by our organization with the help of Mr. Kannan (working for Hello FM) on 13.12.2012. As he was getting better, he told us his personal information. His name is Kannan, working as a lorry driver and hailing from Saravanampatty, Coimbatore and his brother's name is Mr. Nataraj. Based on the information provided, we contacted Mr Nataraj and he got admitted him in some other hospital. Mr. Nataraj told us that Mr. Kannan used to visit temples often and this time he got lost due to the accident he had. He also added that though they were searching for him and found him finally through EERA NENJAM. He thanked Mr. Kannan (Hello FM).
As we always say, no one is orphan in this world, and we are happy and proud ourselves that Mr. Kannan got reunited with his family through our organization. We thank Mr. Kannan (Hello FM) and wish him to help many other needy people.
~Thanks(120/2012)
EERA NENJAM
Photo: ''ஈர நெஞ்சம் சேவைகள் / EERA NENJAM Services''

******

[For English version, please scroll down]

13.12.2012 அன்று, ஹலோ எஃப்.எம்.ஐச் சேர்ந்த திரு.கண்ணன் அவர்கள் சொன்னதன் 
பேரில், எங்கள் அமைப்பால், கோவை அரசு பொது மருத்துவமனையில் 
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் சற்று உடல்நலம் தேறிய 
நிலையில், தனது பெயர் கண்ணன் என்றும், லாரி ஓட்டுனராக பணி புரிவதாகவும், 
தனது ஊர் கோவை சரவணம்பட்டி என்றும், தனது தம்பி பெயர் நடராஜ் என்றும் 
எங்களிடம் தன்னைப்பற்றிய சில விவரங்களைத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து 
அவரது தம்பி நடராஜ் அவர்களை ஈர நெஞ்சம் அமைப்பு தேடிக் கண்டுப்பிடித்து 
அவரது அண்ணன் பற்றிய தகவலை சொன்னதன் பேரில் அவர் 17.12.2012 அன்று தனது 
அண்ணனை அழைத்துச் சென்று வேறு ஒரு மருத்துவமனையில் சேர்த்து உள்ளார் என்பதை
 மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.



திரு நடராஜ், எங்கள் அமைப்பிடம் அடிக்கடி, தனது அண்ணன் வெளி ஊர்களில் உள்ள 
கோவில்களுக்குச் சென்று வருவார் என்றும், அவர் இந்த முறை அதுபோல சென்ற போது
 எதிர்பாராமல் நடந்துள்ள விபத்தின் காரணமாக இப்படி ஆகிவிட்டது என்றும், 
அவரைப் பற்றிய தகவல் தெரியாமல் தான் தேடிக்கொண்டு இருந்தபோது ஈர நெஞ்சம் 
அமைப்பு தனது அண்ணனை கண்டு பிடித்து தன்னிடம் சேர்த்து உள்ளது என மனம் 
நெகிழ்ந்து நமக்கு நன்றி தெரிவித்தார் .



திரு.கண்ணன் ( ஹலோ எஃப்.எம்) அவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் 
தெரிவித்துக் கொண்டார் .இந்த உலகத்தில் ஆதரவற்றோர் என யாருமே இல்லை. 
தொலைந்த உறவை மீட்டுக் கொடுத்த மகிழ்வில் ஈர நெஞ்சம் திரு. கண்ணனன் 
அவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவிப்பதோடு இது போல இன்னும் பலருக்கு உதவத்
 துணை புரிய வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறது.

~நன்றி (120/2012)

ஈர நெஞ்சம் 

......

You may know that an unidentified person was admitted to Coimbatore 
Government Hospital by our organization with the help of Mr. Kannan 
(working for Hello FM) on 13.12.2012. As he was getting better, he told 
us his personal information. His name is Kannan, working as a lorry 
driver and hailing from Saravanampatty, Coimbatore and his brother's 
name is Mr. Nataraj. Based on the information provided, we contacted Mr 
Nataraj and he got admitted him in some other hospital. Mr. Nataraj told
 us that Mr. Kannan used to visit temples often and this time he got 
lost due to the accident he had. He also added that though they were 
searching for him and found him finally through EERA NENJAM. He thanked 
Mr. Kannan (Hello FM). 

As we always say, no one is orphan in this world, and we are happy and 
proud ourselves that Mr. Kannan got reunited with his family through our
 organization. We thank Mr. Kannan (Hello FM) and wish him to help many 
other needy people.

~Thanks(120/2012)

EERA NENJAM

Wednesday, November 21, 2012

ஈரநெஞ்சம் அமைப்பின் முயற்சி ~தீரத்சிங்

''ஈர நெஞ்சம் சேவைகள்'' / ''EERA NENJAM Services''

******
[For English version, please scroll down]


கோவை ரத்தினபுரி புது பாலம் பகுதியில், 17.11.2012 அன்று, உடல்நலம் சரியில்லாத நிலையில் ஒருவர் உடலில் சிறுநீரகப்பை (சிறுநீரகம் சேமிக்கும் பை) உடன் மிகவும் பரிதாபமான நிலையில் இருப்பதாகவும், அவருடன் மனைவியும் கடும் குளிரில் அவதிப்பட்டு கொண்டு இருப்பதாகவும் சிலர் ''ஈர நெஞ்சம்'' அமைப்பை அணுகி அவர்களுக்கு தக
ுந்த உதவி செய்ய கேட்டுக்கொண்டனர்.

உடனடியாக ''ஈர நெஞ்சம்'' அமைப்பினர், அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது, பொதுமக்கள் சொன்னதுபோல, திரு.தீரத்சிங் (வயது 55), உடலில் சிறுநீரகப்பை இருந்தது. மற்றும் அவரது மனைவி லட்சுமி அவருடன் இருந்தார். அவரிடம் விபரம் கேட்டபோது "தனது கணவர் தீரத்சிங். அவருக்கு இரண்டு சிறுநீரகமும் பழுதடைந்து விட்டது. முடிந்தவரை சிகிச்சை கொடுத்துள்ளோம். மருத்துவமனையில் சிகிச்சை இவ்வளவுதான்.ஆகையால், தீரத்சிங் அவரை டிச்சார்ஜ் செய்கிறோம் என்று கூறி எங்களை டிஸ்சார்ஜ் செய்து வெளியேற்றிவிட்டனர். ஆனால், இவருக்கு கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்லை. எங்களுக்கு, வீடு வாசல் ஏதும் இல்லை. ஆகவே, இரவு முழுவதும் கொட்டும் பனியில் இங்கேயே தங்கிவிட்டோம். பனியில் இருந்ததால், இன்று காலை எனது கணவருக்கு மேலும் உடல்நலம் பாதித்து வருகிறது என்ன செய்வது என்று தெரியவில்லை" என்றார். இதற்க்கு இடையில், தீரத்திங் அவரை ''அன்பு மலர்'' காப்பகத்தில் சேர்க்க ''ஈர நெஞ்சம்'' அமைப்பினர் முயற்சி செய்தனர். ஆனால், தீரத்சிங் சிறுநீரகப்பையுடன் இருப்பதால், காப்பகத்தில் கொஞ்சம் தயக்கம் காட்டினர்.மேலும், இரவு முழுவதும், பனியில் இருந்ததால், அவரது உடல் மோசமாக இருந்தது. அதனை கருத்தில் கொண்டு அவரை மீண்டும் அரசு மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று RMO டாக்டர். P.சிவப்ரகாசம் அவரை வேண்டி கேட்டுக்கொண்டு, அவரது அனுமதியோடு ஈரநெஞ்சம் அரசு மருத்துவ மனையில் தீரத்சிங்கை சேர்த்தது. தற்சமையம் தீரத்சிங் நல்ல முறையில் அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதற்காக மருத்துவர் RMO P.சிவப்ரகாசம் அவர்களுக்கு "ஈர நெஞ்சம்" நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது .

மேலும் தீரத்சிங், மற்றும் அவரது மனைவி லட்சுமி அவர்களின் பரிதாபமான நிலையை பார்த்த கோவை ரத்தினபுரி புது பாலம் பொதுமக்கள் அனைவரும், அந்த தம்பதியினருக்கு கோவை அரசு மருத்துவமனை RMO, P.சிவப்ரகாசம் மற்றும் "ஈர நெஞ்சம்" அமைப்பினர் முன்னிலையில் நன்கொடையாக Rs. 3,400 வழங்கினர். இதனை பெற்றுக்கொண்ட திருமதி.லட்சுமி அவர்கள், அரசு மருத்துவமனை RMO . P.சிவப்ரகாசம் அவருக்கும், ''ஈர நெஞ்சம்'' அமைப்பிற்கும் மற்றும் பொதுமக்களுக்கும் மனதார நன்றியினை தெரிவித்துக்கொண்டார். தீரத்சிங் உடல்நலம் விரைவில் குணமடைய உங்களோடு சேர்ந்து ஈரநெஞ்சம் இறைவனை பிரார்த்திக்கிறது. இந்த தகவல்களை, வெவ்வேறு நாளிதழ்களில் வந்துள்ளது. அவைகள் உங்கள் பார்வைக்கு.
நன்றி
ஈரநெஞ்சம் /(111/2012)



https://www.facebook.com/eeranenjam
......

''EERA NENJAM'' organization received a call from public that there was a person with Kidney bag and lying down on the streets of Puthuppalam, Rathinapuri area, Coimbatore on 17.11.2012 and asked us to help him. He and his wife were also struggling in cold. When we visited the place, Mr Theerathsingh (Age: 55) was having kidney-bag on his body and his wife informed us that his two kidneys have been spoiled and hospital authorities discharged him as it would be difficult to cure his case. She continued that there were homeless and as no one for them to take care and had been struggling. Our organization was thinking of admitting him at ''Anbu Malar'' Home, Coimbatore but due to his body and health condition, they were hesitating to admit him and hence we requested the RMO Dr.Sivaprakasam of Coimbatore Government Hospital, Coimbatore, to help him to get admitted back. He generously agreed and as of now he is getting the treatment at the hospital.

By looking at his condition, public from Rathinapuri area have generously donated Rs.3,400 (Rupees three thousand four hundred only) to her in presence of RMO, Dr. Sivaprakasam and EERA NENJAM Organization. She thanked the doctor, public and our organization for the timely help. This information was published in many daily newspapers and their clipping are attached herewith for your reference.
~Thanks
EERA NENJAM / (111/2012)


Sunday, November 04, 2012

ரேக்காவின் மறுவாழ்வுக்கு ஈரநெஞ்சம்

"ஈர நெஞ்சம் சேவைகள்" / "EERA NENJAM Services"
......
[For English version, please scroll down]
திருச்சியைச் சேர்ந்த திருமதி. ரேகா (வயது: 26), காதலித்து மணந்த கணவனால் கைவிடப்பட்ட நிலையில், தனது ஒரு வயது ஆண் குழந்தையுடன் ஆதரவின்றி, ஸ்ரீ ரங்கம் கோவிலின் அருகில் மிகவும் கஷ்டப்பட்டு பிறரிடம் கை ஏந்தி வாழும் நிலையில் இருந்தார். அவரது நிலை கண்டு, மனம் இளகிய திருச்சி லால்குடியைச் சேர்ந்த திரு. ஞானசேகர், எங்கள் அமைப்பின் உதவியை நாடினார். அவரைப் பாதுகாப்பான இடத்தில் சேர்த்து வாழவைக்க வ
ேண்டுமென்ற நோக்கத்தில், கோவை பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் 03.11.2012, அன்று தாயும் சேயும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

கணவனாலும், பெற்றோராலும், சகோதரனாலும் கைவிடப்பட்டு புகலிடம் இன்றித் தவித்தத் தனக்கு நல் ஆதரவு தந்த "ஈர நெஞ்சம்" அமைப்பிற்குத் தனது மனமார்ந்த நன்றியைத் திருமதி.ரேகா தெரிவித்துக் கொண்டார்.
https://www.facebook.com/eeranenjam
~ நன்றி /(99/2012)
"ஈர நெஞ்சம்"
......
Mrs. Rekha, (Age:26), abandoned by her husband and family, was found helpless with her one year old son near Srirangam temple. She is from Trichy and had a love marriage. Considering her situation, Mr. Gnanasekar of Lalgudi contacted our organization. We made arrangement to admit her and her son in the Universal Peace Foundation, Coimbatore on 03.11.2012.

Mrs. Rekha thanked us for our timely help.
~Thanks / (99/2012)
"EERA NENJAM"
Photo: "ஈர நெஞ்சம் சேவைகள்" / "EERA NENJAM Services"
......
[For English version, please scroll down]
திருச்சியைச் சேர்ந்த திருமதி. ரேகா (வயது: 26), காதலித்து மணந்த கணவனால் கைவிடப்பட்ட நிலையில், தனது ஒரு வயது ஆண் குழந்தையுடன் ஆதரவின்றி, ஸ்ரீ ரங்கம் கோவிலின் அருகில் மிகவும் கஷ்டப்பட்டு பிறரிடம் கை ஏந்தி வாழும் நிலையில் இருந்தார். அவரது நிலை கண்டு, மனம் இளகிய திருச்சி லால்குடியைச் சேர்ந்த திரு. ஞானசேகர், எங்கள் அமைப்பின் உதவியை நாடினார். அவரைப் பாதுகாப்பான இடத்தில் சேர்த்து வாழவைக்க வேண்டுமென்ற நோக்கத்தில், கோவை பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் 03.11.2012, அன்று தாயும் சேயும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

கணவனாலும், பெற்றோராலும், சகோதரனாலும் கைவிடப்பட்டு புகலிடம் இன்றித் தவித்தத் தனக்கு நல் ஆதரவு தந்த "ஈர நெஞ்சம்" அமைப்பிற்குத் தனது மனமார்ந்த நன்றியைத் திருமதி.ரேகா தெரிவித்துக் கொண்டார். 
https://www.facebook.com/eeranenjam
~ நன்றி /(99/2012)
"ஈர நெஞ்சம்"
......
Mrs. Rekha, (Age:26), abandoned by her husband and family, was found helpless with her one year old son near Srirangam temple. She is from Trichy and had a love marriage. Considering her situation, Mr. Gnanasekar of Lalgudi contacted our organization. We made arrangement to admit her and her son in the Universal Peace Foundation, Coimbatore on 03.11.2012. 

Mrs. Rekha thanked us for our timely help. 
~Thanks / (99/2012) 
"EERA NENJAM"

Tuesday, April 17, 2012

மனநிலை பாதித்த கோவிந்தராஜு குடும்பத்துடன் இணைந்தார்

கடந்த 18 / 12 / 11 அன்று  ஆம்பூர் (வேலூர்) ரயில்நிலையம் எதிரே  இவரை அரைகுறை ஆடையுடன்மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றிதிரிந்ததை  நேரில் கண்டு அவரை ஏதாவது ஒரு காப்பகத்தில் பாதுகாப்புடன் பராமரிக்க வேண்டும் என  நானும் (மகேந்திரன்) நண்பர் சுதர்சனனும் முடிவு செய்தோம்  . திருபதூர் பகுதியில் உள்ள "உதவும்  உள்ளங்கள்" என்னும் மனநிலை பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு இல்லைத்தை தொடர்புகொண்டு இவரை பற்றி தகவல் கொடுத்து அந்த இல்லைத்தை சேர்ந்தவர்கள் நேரில் அவரை அணுகி  பரிவுடன் அழைத்து சென்று அவர்களுடைய இல்லைதில் பராமரித்து வந்தார்கள் ,

அங்கு அவருக்கு மருத்துவ உதவி கொடுக்கப்பட்டு வந்தது அதனை தொடர்ந்து  கடந்த சில நாட்களாக அவரிடம் பெரும் மாற்றம் காணப்பட்டது அவர் பேச துவங்கினார் , அவருடைய பெயர் கோவிந்த ராஜு என்றும்  பெற்றோர் சீனி கவுண்டர், கோவிந்த அம்மாள் என்றும்  முகவரி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் என்றும் கூறினார் , அதனை கொண்டு காப்பகத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜுவின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு வரவழைத்து கோவிந்தராஜு அவர்களை வேலூர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பெற்றோருடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளார்கள்.



மகிழ்ச்சியான விஷயம்ங்க இதில் குறிப்பிடத்தக்க ஒன்று என்ன என்றால் கோவிந்தராஜு அவர்களது பெற்றோரை  பிரிந்து ஆறு வருடங்கள் ஆகியுள்ளது.

கோவிந்தராஜ் அவரகளது உறவினருடன் சேர்க்க உதவிய  "உதவும்  உள்ளங்கள்" என்னும் மனநிலை பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு இல்லத்தை எப்படி பாராட்டுவது வார்த்தைகளே இல்லை சாலையோரமாக கோவிந்தராஜுவை கண்டு எனக்கு தகவல் கொடுத்த  சுதர்சனனுக்கு  மனமார்ந்த வாழ்த்துக்கள்...
~மகேந்திரன்

Thursday, November 24, 2011

சாந்தாமணியின் நல்லகாலம் ~மகேந்திரன்










கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் சாந்தாமணி என்னும் பெண் வசித்து வந்துள்ளாள்,சாந்தாம...ணி இவளுக்கு ஆதரவு என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை , கடந்த நான்கு வருடமாக சாந்தாமணி மனநிலை பாதிக்கப்பட்டு இந்த நிலைக்கு விதியால் தள்ளப்பட்டால் , அந்த நஞ்சுண்டபுரம் பொது மக்கள் இவளுக்கு அவ்வப்போது உணவு வழங்கி வந்துள்ளனர் , ஆனால் கடந்த சிலநாட்களாக இவளுக்கு உணவு யாரும் குடுக்க படவில்லை என்று தெரிகிறது , நஞ்சுண்டாபுரம் பகுதியில் எனக்கு தெரிந்த தங்கை நந்தினி இவள் மூலமாக சாந்தாமணியை பற்றி இன்று 24/11/11 எனக்கு தகவல் வந்தது , உடனடியாக நான் அந்தபகுதிக்கு சென்று தங்கை நந்தினி அவளது தோழி சந்தியா அவர்களின் உதவியால் சாந்தாமனிக்கு முன் உதவி செய்து சாந்தாமணியை கோவை அன்னை தெரேசா காப்பகத்தில் சேர்த்துவிட்டு வீடு திரும்பினோம்,
தங்கை நந்தினியை பாராட்ட வார்த்தைகளே இல்லை
நந்தினி மிகவும் ஏழ்மை நிலை உடையவள் அடுத்த வேலைக்கு உணவு என்பது அவளுக்கு கனவு , நான் சமூக சேவகனாக உருவாக அவளும் ஒரு காரணம் என்பதை சொல்ல நான் இங்கு கடமை பட்டுள்ளேன் .
Magi Mahendiran