Showing posts with label பரிதாபம். Show all posts
Showing posts with label பரிதாபம். Show all posts

Monday, December 08, 2014

ஈரநெஞ்சம் சேவை ஆதரவற்ற பாட்டியின் தலையில் புழுக்களின் கூடு

ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services .
****************************************************************
( 389 / 7-12-2014 )

இன்று 7-12-2014 கோவை, கணபதி, சத்தி சாலையில் ஆதரவற்ற நிலையில் செல்லம்மா 80 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவர் மீட்கப்பட்டு பாதுகாப்பாக கோவை மாநகராட்சி காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது தலையில் பல காயங்கள் ஏற்பட்டு இருந்ததோடு அவற்றில் புழுக்கள் பிடித்து துர்நாற்றம் வீசிய நிலையிலும் இருந்தது. அதை சுத்தம் செய்து அவருக்கு மேலும் சிகிச்சை அளிக்க ஈரநெஞ்சம் அறக்கட்டளை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த பாட்டி யார் எப்படி அங்கு வந்தார் என்ற தெரியாத நிலையில் தலையில் இப்படி காயத்துடனும் புழுக்களுடனும் இருப்பதைப் பார்க்கும் பொழுது பரிதாபமாக இருந்தது.

தன் உடல், பொருள், ஆவியை தியாகம் செய்து நம்மை கவனித்துக் கொள்ளும். பெற்றோர் இயலாமை நிலைக்குத் தள்ளப்படும் போது அவர்களை கவனித்துக் கொள்ளாமல் இப்படி தெருவில் ஆதரவற்ற நிலையில் விடுவதை பார்க்கும் பொழுது கல்லும் கூட கசிந்துருகி கண்ணீர் சிந்தும்.

~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Today 7-12-2014, an old lady chellamma, age 80 years was there in Coimbatore, Sathy road and no one care for her. Eeranenjam found and admitted her in Coimbatore corporation home. In her head there are some wounds and lot of worms in there with bad smell. Eeranenjam trust people cleaned all that and admitted her in Coimbatore GH for further treatment.

Parents sacrifice all their life things for taking care of their children. But in their old age no one taking care for her. This is really sorrowful and making tears in some body's eyes.

~thank you
Eera Nenjam






https://www.youtube.com/watch?v=4eQrJ8TKD-0&list=UUlItkV-aZwettjImLxCk7qw



 

https://www.youtube.com/watch?v=aez2Mj5alZE&index=4&list=UUlItkV-aZwettjImLxCk7qw










Sunday, February 23, 2014

சாலையில் காயத்துடன் ஆதரவற்று இருந்தவருக்கு முதலுதவி ~ மகேந்திரன்

சில நாட்களுக்கு முன்பாக உக்கடம் பகுதியில் சாலையில் ஆதரவற்று ஒரு மூதாட்டி வலது கை இழந்த நிலையில் பரிதாபமாக இருந்தார், அவருக்கு பாதுகாப்புக் கொடுக்க அந்த மூதாட்டியை அழைத்துவந்து மாநகராட்சி காப்பகத்தில் அனுமதி கேட்டு அங்கு சேர்க்கப்பட்டது. அதன் பிறகு அந்த அம்மாவின் தலையில் எதோ காயம் இருக்கும் போல தலை வலியால் துடித்துக்கொண்டு இருந்தார். முடி நிறைய இருந்ததால் காயம் தெரியவில்லை தலையில் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தது அதிக துர்நாற்றம் வீச, தலையில் முடி வெட்டி விடலாம் என்று முடியை வெட்டும் போதுதான் தெரிந்தது அத்தலையில் இருந்த காயத்தில் புழுக்கள் இருந்தது, பாவம் அந்த அம்மா வலியை எப்படி பொறுத்துக்கொண்டு இருந்தார் என்று தெரியவில்லை , முடிதிருத்தம் செய்து காயத்தில் இருந்த புழுக்களை எல்லாம் எடுத்துவிட்டு காயத்திற்கு மருந்து போடப்பட்டு உள்ளது, இப்படி ஒரு வேதனை யாரும் அனுபவிக்க கூடாது. அந்த வயதான அம்மா விரைவில் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.







நன்றி...

Tuesday, November 05, 2013

பரிதாபம் தாய் இறந்தது கூட ஜெயந்திக்குத் தெரியாது. ~ஈரநெஞ்சம்


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(228/04/11/13)

கடந்த 1ஆம் தேதி, தீபாவளிக்கு முன்தினம், கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சுமார் 32 வயது மதிக்கத்தக்க மன நிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இருப்பதாக அறிந்த காவல் துறையினர் அந்த பெண்ணை கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்தனர்.

அப்பெண்ணின் பெயர் ஜெயந்தி என்பதை தவிர வேறெதுவும் தெரியவில்லை. இந்நிலையில் இது போல பலரை அவரது குடும்பத்தினரை கண்டு பிடித்து தேடி தந்த ஈரநெஞ்சம் அமைப்பினரை கோவை மாநகராட்சி காப்பகத்தினர் தொடர்பு கொண்டு ஜெயந்தியை பற்றி தெரிவித்தனர். மேலும் அவரது குடும்பத்தினரை தேடி கண்டுபிடிக்குமாறு கேட்டு கொண்டனர். ஈரநெஞ்சம் அமைப்பினர் ஜெயந்தியை நேரில் கண்டு அவரிடம் பேசி விசாரித்த போது புதுத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் என்றும், கே.கே.புதூர் பள்ளியில் 9ஆம் வகுப்புவரை படித்ததாகவும் மட்டும் அறிந்து கொள்ள முடிந்தது.

உடனடியாக அந்த பள்ளிக்கு சென்று விசாரித்த போது அப்படி யாரும் இல்லை என்று கூறிவிட்டனர். பின்னர் அவர் கூறிய புதுத்தோட்டம் பகுதியை தேடி கண்டு பிடித்து அங்கே சென்று விசாரித்தனர் ஈரநெஞ்சம் அமைப்பினர். 3 மணி நேர தேடலுக்கு பின் ஜெயந்தியின் சகோதரிகள் சகாய ராணி மற்றும் சாந்தியை கண்டு பிடித்த கேட்ட போது பல வருத்தபடுபடியான நிகழ்வுகள் தெரிய வந்தது.

ஜெயந்தி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரது கணவர் 10 வருடங்களுக்குமுன்னரே அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். பிறகு அவர் தனது மகன் ஆண்ட்ரோ கிங்ஸ்லி யுடன் தன தாய் வீட்டில்தான் வசித்து வந்தார். தொடர்ந்து அவர் மருத்துவ சிகிச்சையில் இருந்து மருந்துகள் எடுத்துகொண்டு வந்ததால் மனநிலை தேறி வந்திருக்கிறார். இந்நிலையில் அவரது தாயார் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால் ஜெயந்தி தொடர்ந்து மருந்து எடுத்துகொள்ள முடியாமல் இருந்திருக்கிறது. தாயார் உடல்நிலை மிகவும் மோசமானதால் எல்லோரும் மருத்துவமனைக்கு சென்று விட்டிருக்கின்றனர். வீட்டில் தனியாக இருந்த ஜெயந்தி தாயாரை தேடியோ அல்லது தன்னை அறியாமலோ வீட்டை பூட்டி கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டார். வழி தவறி காந்திபுரம் வந்து சேர்ந்து விட்டார். அவர் வந்த அன்றே அவரது தாயாரும் இறந்து விட்டார். அதுவும் ஜெயந்திக்குதேரியவில்லை. அவரது சகோதரிகளும் குடும்பத்தினரும் ஜெயந்தியை தேட முயற்சி மேற்கொண்டும் கிடைக்காததால் அவர்களே தாயாரின் இறுதி காரியங்களையும் செய்து விட்டனர்.

இந்நிலையில் 4 நாட்களுக்கு பிறகு இன்று ஜெயந்தி பற்றிய தகவல்களை ஈரநெஞ்சம் அமைப்பினர் மூலம் கேட்டறிந்த அவரது சகோதரிகள் கண்ணில் கண்ணீர் மல்க ஈரநெஞ்சம் அமைப்பினருக்கு நன்றி தெரிவித்தனர். தங்கள் சகோதரியை அழைத்து சென்ற அவர்கள் மிக இக்கட்டான வேதனையான சூழ்நிலையில் இருந்த தங்களுக்கு தங்கள் சகோதரி கிடைத்ததோடு கிங்ஸ்லி க்கு தனது தாயரையும் மீட்டு கொடுத்ததற்கு அவர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து கொண்டனர். மீண்டும் ஒரு உறவை தேடி தந்த மகிழ்ச்சியோடு விடை பெற்று கொண்டது ஈரநெஞ்சம்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam


on 1-10-2013, a day before Diwali, A mentally disabled lady aged about 32 was founded and admitted in Coimbatore corporation home by police.

Her name is Ms. Jeyanthi. Except her name, they couldn't know any other details about her. then they informed to Eeranenjam trust people, who are joining so many people like her with family. they came and inquired jeyanthi. she told that she was studied in K.K. Puthur school till 9th standard and she is from Puthuthottam area. Eeranenjam people went to that school and inquired about Ms. Jeyanthi. But they also don't know about her. Then eeranenjam went to Puthuththotaam and searched her family. after 3 hrs search, they found her sisters Ms. Sagayarani and Ms.Santhi.

Then only came to know the bad situations of Ms. Jeyanthi. Due to she is mentally disabled, her husband left her ten years back. Then she is living with her mother with her son Antro Kingley. She is taking medical treatment and tablets continuously and she got improvement. When her mother was unwell and admitted in hospital she was unable to continue her treatment and tablets. When her mother was ery serious, all family members were went to hospital and Jeyainthi was alone in home. At that time, she left home and unfortunately missed. The same day her mother was died. But she didn't know that. Her family members tried to found her. But they couldn't and they finished their mother's final rituals.

After 4 days they found her sister, due to Eeranenjam turst 's efforts. They feel very thank and happy because they got their sister and also Kingley got his mother. they told that when they are in critical situation, Eeranenjam done a great help for his family and they said a lot of thanks to Eeranenjam trust with tear. Eeranenjam also feels very happy to join Ms. Jeyanthi with her family.

Thank you.
~Eera Nenjam

Saturday, October 05, 2013

கோவிந்தன் அய்யாவின் பரிதாபம் ~ஈரநெஞ்சம்



''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(210/04-10-2013)

இன்று 04/10/13 கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோவிந்தன் என்ற 66 வயதான பெரியவர் பேச இயலாமல் மயக்கமடைந்த நிலையில் கிடந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு தகவல் கொடுத்தனர் அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பு அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தது. சில நேரம் கழித்து அவருக்கு நினைவு வந்தபின் அவர் கொடுத்த சில தகவலின் படி ஈரநெஞ்சம் அமைப்பு மேற்கொண்ட முயற்சியால் அவர் கன்னியாகுமாரி குழித்துறை பகுதியை சேர்த்தவர் என்பதும், அவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் இருப்பதும் மேலும் அவருக்கு கிருஷ்ணன்குட்டி என்று ஒரு உடன்பிறந்த சகோதரர் இருப்பதும் தெரியவந்தது. மேலும் அவர் சகோதரர் கிருஷ்ணன்குட்டி தொடர்புகிடைத்து அவரை தொடர்பு கொண்ட பொழுது " கோவிந்தனை வேண்டாம் என்று அவர் குடும்பத்தால் கைவிடப்பட்டதாகவும் அதன்பிறகு இவர் தனியாக இருந்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. தனது சகோதரர் நிலையை கண்டு அவர் வருந்துவதாகவும் மேலும் அவரை தன் வீட்டில் சேர்த்துக்கொள்ள முடியாத சூழ்நிலை என்றும் அவரை அங்கேயே ஒரு காப்பகத்தில் சேர்த்து பராமரிக்குமாறு கேட்டுகொண்டதின் படி கோவிந்தன் கோவை காரைமடை அன்புமலர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
கோவிந்தனை காப்பாற்றி காப்பகத்தில் சேர்த்ததற்கு கிருஷ்ணன்குட்டி ஈரநெஞ்சம் அமைப்பிற்கு நன்றி சொல்லி மேலும் முடிந்தால் அடிகடி காப்பகத்தில் தனது சகோதரரை வந்து பார்பதாகவும் அவர் தெரிவித்துக்கொண்டார்.
நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Today 04.10.2013, 66 years old elderly man name Govindan was found unconcious at the premises of the Collector's Office. The public who saw this, informed the Eera Nenjam Trust. Members of Eera Nenjam rushed to the scene and rescued the elder and admitted in the hospital. After a little while when the elder became concious, he gave some information about himself. According to the information given, it was known that he is from Kanykumari Kulithurai area. He is married and has two daughters and a son. He also have a brother name Krishnan Kutty. Eera Nenjam got contact information of Krishnan Kutty and when contacted him, he said that Govindan was abandoned by his family and he lived by himself. Also came to know that Govindan worked at a private company. He also felt very bad about his brother's situation and mentioned that he is in a situation where he could't have his brother lived in his house. He also requested Eera Nenjam to admit Govindan in a charity home to be taken care of. Upon the brother's request Govindan was admitted in Coimbatore Karaimadai Anbumalar Charity Home. Krishnan Kutty thanked Eera Nenjam and told them that he would often visit his brother.

Eera Nenjam is pleased about the fact that another helpless life has been rescued from the streets.

Thank you
~Eera Nenjam

Monday, July 29, 2013

நான்கு நாட்களாக சாலையில் கிடந்தவருக்கு ஈரநெஞ்சம் உறவை தேடு கொடுத்தது.


"ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"

******
[For English version, please scroll down]
(189/28.07.2013)

கோவை உப்பிலிபாளையம் போக்குவரத்து சிக்னல் அருகே சாக்கடை ஓரமாக நான்கு நாட்களாக இருந்த சக்திவேல் வயது 45 என்பவரை கடந்த 27/07/2013 அன்று ஈரநெஞ்சம் அமைப்பினரால் மீட்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்து சக்தி வேல் அவருக்கு உறவினர்கள் இருப்பதை அறிந்து அவரது உறவினர்களை தேடும் முயற்சியில் இறங்கியது .

அதனை தொடர்ந்து சக்திவேல் இருபது நாட்களுக்கு முன் திருச்சியில் இருந்து கோவைக்கு வேலை தேடிவந்ததாகவும் திடீர் என்று உடல் நோய்வாய்பட்டு சாலையில் விழுந்து விட்டதாகவும் உதவிக்கு யாரை அழைத்தாலும் தான் குடிபோதையில் இருப்பதாக நினைத்து உதவ மறுத்ததாகவும் கூறினார். மேலும் அவர் தான் திருச்சியில் எட்டரை என்னும் பகுதியை சேர்ந்தவர் என்று தனக்கு மனைவி அமுதா, மகன் சதீஷ், மகள் சாந்தி இருப்பதாகவும் மேலும் சில தகவலை தெரிவித்த தகவளை வைத்துக்கொண்டு .சக்திவேலின் உறவினரை தேடும் முயற்சியில் இறங்கியது https://www.facebook.com/photo.php?fbid=441617119269043&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater
அதனை அடுத்து ஈரநெஞ்சம் அமைப்பு திருச்சி அருகே இருக்கும் சொம்பரசன் பேட்டை காவல்நிலைய உதவியுடன் சக்திவேலின் உறவினர்களை கண்டறிந்து சக்திவேலின் மகன் சதீஷ் மற்றும் அவர்களது உறவினர் செல்வகுமார் , வினோத் அவர்களை உடனடியாக கோவைக்கு வரவழைக்கப்பட்டு காப்பகத்தில் இருக்கும் சக்திவேல் அவர்களை அவர்களுடன் அனுப்பிவைத்தது.
http://www.youtube.com/watch?v=iZrlFOzBE28&feature=youtu.be
தனது தந்தை சாலையோரமாக உயிருக்கு போராடிய நிலையில் இருந்து காப்பாற்றிக் கொடுத்த ஈரநெஞ்சம் அமைபிற்கு சக்திவேலின் மகன் சதீஷ் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
சக்திவேலின் உறவினரை கண்டறிய உதவிய சொம்பரசன் பேட்டை காவல் நிலையத்திற்கும் மற்றும் அணைத்து நண்பர்களுக்கு ஈரநெஞ்சம் அமைப்பு நன்றியை தெரிவித்து கொள்வதோடு .பிரிந்த உறவினை தங்கள் குடும்பத்திடம் சேர்த்து வைத்த திருப்தியில் ஈரநெஞ்சம் அமைப்பு மனநிறைவு அடைகிறது.
நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Eeraneanjam rescued a person near koavai uppilipalayam traffic singnal, he was laying near ditch for four days. On 27/07/13 Eeraneanjam admitted him in corporation home and started enquiry about him, and found he has relatives at Trichy. Twenty days back he came to Coimbatore from Trichy to search job, but he fall in sick and fell down on the street, public thought he is drunker and no one helped him. Eeraneanjam enquired him and came to know he is Mr. Sakthivel, belongs to Eatarai, Trichy region, and his wife Amudha, son Sathish and daughter Shanthi. Eeraneajam started locating his relatives.

With the help of Soambarasan pettai, Trichy police Eeraneajam located Sakthivel’s relatives and his son Sathish and relatives Selvakumar, Vinoth came to Coimbatore, and Sakthivel who was stayed at Corporation home was sent with them.

Sathish thanked Eeraneanjam for rescued his father. Eeraneanjam thanked Soambarasan pettai police station who supported to identify Sakthivel s relative.

~Thank you
Eera Nenjam




Sunday, July 28, 2013

கோவை சுந்தராபுரத்தில் சாலையில் ஒரு பரிதாபம். ~ஈரநெஞ்சம்






''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(186/24.07.2013)

கோவை சுந்தராபுரம் அருகே சுமார் 50 வயது நிரம்பிய ஒருவர், கடந்த இரண்டு நாட்களாக உடல்நலம் குன்றி, உடலில் ஈக்கள் மொய்க்க, ஆடையின்றி பொதுமக்கள் செல்லும் சாலையோரம் ஆதரவற்று இருப்பதாக பொதுமக்கள் சிலர் , இன்று 24.07.2013 ஈரநெஞ்சம் அமைப்பிற்கு தகவல் கொடுத்தனர். அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அவ்விடத்திற்கு விரைந்து சென்று 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அவருக்கு தேவையான மாற்று உடை அணிவித்து பின்பு அவரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்து தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் உடல்நலம் விரைவில் குணமடைய நாம் அனைவரும் இறைவனிடம் வேண்டிகொள்வோம்.

நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Today 24.07.2013 near Kovai Sundarapuram, Civilians have reported to Eera Nenjam that a naked sick man around his 50s was helplessly lying by the road side with the flies flocking to his body. Eera Nenjam rushed to the scene, dressed him up and admitted him at the Government Hospital for treatment with the help of 108 Ambulance Service. Let us all pray to god for his recovery.

Thank you
~Eera Nenjam


Wednesday, July 24, 2013

காயத்துடன் இருந்தவரை ஈரநெஞ்சம் மருத்துவமனையில் சேர்த்தது

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(184/23.07.2013)
இன்று 23.07.13 காலை கோவை அரசு மருத்துவமனை அருகே சுமார் 60 வயது நிரம்பிய ஒருவர் கால் அழுகிய நிலையில் காயத்துடன் சாலையோரம் ஆதரவற்று இருபதாக பொதுமக்கள் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு தகவல் கொடுத்தனர். அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அவ்விடத்திற்கு விரைந்து சென்று 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஈரநெஞ்சம் அவரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளது.
அவரின் உடல்நலம் விரைவில் குணமடைய நாம் அனைவரும் இறைவனிடம் வேண்டிகொள்வோம்.



http://www.youtube.com/watch?v=5QImvChl0WI&feature=youtu.be

~நன்றி
ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Today morning 23.07.2013, the civilians passed a message to Eera Nenjam that there was a man around age 60 with the decomposed leg, was lying down helplessly by the roadside beside the Kovai Government Hospital. Eera Nenjam rushed to that place and admitted him to the hospital for treatment with the help of 108 Ambulance Service.
Let us all pray to god for his recovery.

~Thank You
Eeranenjam






Saturday, June 22, 2013

சாலையோரம் இருந்த பெண்மணிக்கு பாதுகாப்பு ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(168/2013)

நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆறு மாதமாக நடைபாதையில் வசித்து வந்திருக்கிறார். அவருக்கு அங்கு இருக்கும் பொது மக்கள் உண்ண உணவும், முடிந்த உதவிகளையும் செய்துள்ளனர். அவருக்குத் தன் பெயர், ஊர் எதுவும் தெரியவில்லை. அவர் பேசும் மொழியும் புரியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அங்கு இருக்கும் சில நல்ல உள்ளங்கள் நமது ஈர நெஞ்சம் அமைப்பின் செயல்பாடுகளைப் பற்றி தெரிந்து கொண்டு அந்த பெண்ணிற்கு ஏதேனும் ஒரு பாதுகாப்பு கொடுக்கும் படி ஈரநெஞ்சம் அமைப்பைக் கேட்டுக்கொண்டனர் . அதனைத் தொடர்ந்து,12.06.2013 அன்று அந்தப் பெண்ணை ஈர நெஞ்சம் அமைப்பு மீட்டு, கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்தது.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி
ஈர நெஞ்சம்

A middle aged lady around 40 years old, mentally challenged, was living on the pavement in Narasimmanayakkan Palayam, Coimbatore. The people living closer fed her and also helped in all possible ways. She did not even know her name and native place and nobody could understand the language she spoke. Under these circumstances, few people, after knowing about Eera Nenjam, contacted us and requested if we could do any help to the lady. Eera Nenjam rescued her and got her admitted in the Coimbatore Corporation Home.

~ Thanks
Eera Nenjam
 

Monday, June 17, 2013

சாலையில் ஆதரவற்று இறந்தவரை நல்லடக்கம் செய்தது ஈரநெஞ்சம்




''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(167/2013)


கோவை செல்வபுரம் அருகில் பிச்சை எடுத்துக்கொண்டு இருந்த சுமார் 75 வயதான ஒருவர் நோய்வாய் பட்டு 10.06.2013 சாலையோரம் இறந்து கிடந்தார். ஒருவர் இறந்து கிடக்கிறார் என்பதை கூட அறியாத நிலையில் பலர் இருக்க இளகிய உள்ளம் கொண்ட ஒருவரால் B10 காவல் துறைக்கு தகவல் கொடுக்க பட்டது .அதனை தொடர்ந்து காவல் துறை விசாரணைக்கு பிறகு அந்த முதியவருக்கு யாரும் இல்லை அவர் ஆதரவற்றவர் என்று நிலையில் ஈரநெஞ்சம் அமைபிற்கு B10 காவல் துறையுனரால் அந்த பெரியவரின் பிரேத உடலை நல்லடக்கம் செய்து தரும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஈர நெஞ்சம் அந்த பெரியவரின் உடலை 11.06.13 அன்று சொக்கம்புத்துர் மயானத்திற்கு எடுத்து சென்று நல்லடக்கம் செய்தது . உடலை நல்லடக்கம் செய்ய துணை இருந்த B10 துணை ஆய்வாளர் திரு. முருகையன் , அமைப்பின் நண்பர் சுப்பு , மயான தொழிலாளி வைரமணி அவர்களுக்கு ஈரநெஞ்சம் மனதார நன்றி தெரிவித்துகொள்கிறது. இறந்த பெரியவருக்கு துணையாக உறவுகள் இல்லாவிட்டாலும், அவரின் இறுதி காலத்தில் ஈர நெஞ்சம் துணையானது. அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் உங்களோடு சேர்ந்து நாங்களும் வேண்டுகிறோம்.

https://www.facebook.com/eeranenjam
ஈர நெஞ்சம்
~ நன்றி

An old man, aged around 75, who had been sick and begging on the streets in Selvapuram, Coimbatore, was found dead on 10.06.2013. When many people ignored his body on the street, a kind person informed the B10 Police Station about it.
After the proper medical processes, the Police Station requested Eera Nenjam to do the last rituals for him. We, along with Mr. Murugaiyan, Sub Inspector, Mr. Subhu, a good friend of Eera Nenjam and Mr. Vairamani, the cemetery worker, helped to bury his body.
Eera Nenjam appreciates their help. Even though the old man had none when he was alive, he had many friends to take care of his final rituals. May his soul rest in peace.

Eera Nenjam
~ Thanks

Tuesday, June 11, 2013

"வாழ்க்கை என்பதும் உயிர் என்பதும் சாதாரண விஷயம் இல்லைங்க"





உயிருடன் இருக்க வேண்டும் என்றால் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை உணவு உட்கொண்டாக வேண்டிய வினோத நோயால் அவதியுறும்  டிஸ்கி என்னும் இளம் பெண்"


மருத்துவர்களாலேயே கண்டறிய முடியாத விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார், அமெரிக்காவை சேர்ந்த இந்த 21 வயது  டிஸ்கி , இவருடைய தற்போதைய எடை வெறும் 25.4 கிலோகிராம் மட்டுமே . இத்தனைக்கும்  ஒரு நாளில் 60 முறை  உணவு எடை கூடுவதாக இல்லை .
டிஸ்கி இவருக்கு கிரிஸ் என்ற  இளைய சகோதரரும், ,மரினா என்ற சகோதரியும் இருக்காங்க, இவங்க  இருவரும் மற்றவர்களை போல நலமுடன் தான் இருக்காங்க .
டிஸ்கி இவங்க அம்மா  சொல்றாங்க ''மருத்துவர்கள் சொன்னார்கள் இந்த பெண் உயிர்வாழ்வதே மிகபெரும் கேள்விகுறி அப்படியே பிழைத்தாலும் மற்ற குழந்தைகளை போல் நடக்கவோ பேசவோ செய்வாரா என்பது உறுதியாக சொல்ல முடியாது என்றனர்'' என்றார் .
ஆனாலும் அந்த அம்மா  மனம் தளராமல் டிஸ்கி  யை  நம்பிக்கையுடன் பாசத்துடனும் வளர்த்து வந்தாங்க.
டிஸ்கி க்கு குழந்தை பருவத்தில் உடை எடுக்கும் போது விளையாட்டு பொம்மைகளுக்கு உடை தைக்கும் இடத்தில தான்  உடைகளை வந்குவாங்கலாம் என்ன காரணம் என்றால் மற்ற சிறுவர்களுக்கு உண்டான  உடைகள் இவருக்கு பொருந்தாது என்பதாலாம்.
மரணத்தை வென்று வாழும் இந்த டிஸ்கி டாக்டர்களுடைய கணிப்பை எல்லாம் பொய்யாக்கி தற்போது மற்றவர்களை போலவே இயல்பான  வாழ்கை வாழ்ந்து வருகிறார் .
டிஸ்கி  கூறும்போது ''நான் இரண்டுமுறை மரணத்தின் விழும்பில் இருந்து மீண்டு வந்துள்ளேன் ,  தினமும் என் உடல் எடையை அளவிட்டு வருகிறேன் ஒரு பவுண்ட் எடை கூடி இருந்தாலும் எனக்கு ஆச்சரியமே என் எனெர்ஜி குறையாமல் இருக்க ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒரு முறை நொறுக்கு தீனிகள் , ஐஸ் க்ரீம் , கேக் வகைகள் ,என சாப்பிட்டு கொண்டே இருப்பேன் என்னுடைய உடல் தோற்றம் கோரமாக இருந்தாலும் இருக்கும் நோய்  பற்றியும் கவலை படாமல் வீட்டிலேயே முடங்கி இருக்காமல் தன்னம்பிக்கையோடு சாவோடு  போராடி வருகிறேன்  ''என்கிறார் .
மனிதனாகப் பிறந்த இந்த வாழ்க்கை வாழ்வதற்குத்தான். பல இன்னல்கள் வரலாம். பிரச்சினைகளைச் சந்திக்கலாம். தோல்விகள் கிடைக்கலாம் இவற்றை எல்லாம் சந்தித்து, போராடி, இவற்றையும் கடந்து வாழும் போது இதுதான் வாழ்க்கை என்று புரியும். எப்படி நாம் பிறப்பது கடவுள் செயலோ அதுபோல  நமது  வாழ்கையும் கடவுளுடைய செயல்தான் என்பதை டிஸ்கி எல்லோருக்கும் புரிய வைக்கிறார்.

நண்பர்களே   எவ்வளவோ கவலைகள் இருக்கலாம் ,  அல்லது வேதனைகள் இருக்கலாம் . அப்படி  பட்டவர்கள் சிலர் தவறான முடிவுகளை  எடுக்கிறார்கள் அவர்களுக்காங்க  ஒரு  விழிப்புணர்வு
 தேடலை உங்களுக்காக  பதிவிடுகிறேன்
நன்றி .

~மகேந்திரன்

Thursday, June 06, 2013

தேவி அம்மாக்கு உறவு கிடைசாச்சு ~மகேந்திரன்




''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(166/2013)

கடந்த 13/07/2010 அன்று கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் 55 வயதுள்ள ஒரு பெண் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், உடலில் உடைகூட இல்லாமல் கோவை காந்திபுரம் பகுதியில் இருந்தார் . இவரை ஈரநெஞ்சம் மகேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் மூலமாக கோவை அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்தில் தேவியை நல்ல முறையில் பராமரித்து வந்த நிலையில், ROBERT BOSCH கம்பெனி உதவியுடன் மருத்துவர் ரமணி அவர்களின் சிகிச்சையில் , கடந்த மூன்று வருடத்திற்கு பிறகு தேவிக்கு சுயநினைவு திரும்பியது . அதனை அடுத்து அவருக்கு தான் யாரென்றும், தன் மகன் யாரென்றும் நினைவு திரும்பியது. தான் தேவி , தன்னுடைய மகன் கணேஷ் என்கின்ற ரகு என்றும் அவர் கோவை செல்வபுரம் பகுதியில் வசிப்பவர் என்று இருந்த இடத்தையும் கூறினார். இதன் மூலமாக தேவியின் மகன் ரகுவை அழைத்து கேட்கும் போது தேவி என்பவர் என்னுடைய தாயார் தான் நானும் என் அம்மாவும் மட்டும் தான் எங்கள் வீட்டில் இருந்து வந்தோம் கடந்த 5 வருடங்களாக அவர் காணவில்லை, எங்கு தேடியும் கிடைக்கவில்லை , போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார் தனது அம்மா கிடைத்த மகிழ்ச்சியில் திரு.ரகு மூன்று வருடமாக அம்மாவை பராமரித்து வந்த அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்திற்கும், சாலையில் பரிதாபமாக இருந்த தனது அம்மாவை காப்பகத்திற்கு அழைத்து வந்து சேர்த்த ஈரநெஞ்சம் அமைப்பிற்க்கும் , மருத்துவ சிகிச்சைக்கு உதவிய ROBERT BOSCH கம்பெனி மற்றும் Dr. ரமணி அவர்களுக்கும் மனதார ரகு நன்றியை தெரிவித்துக்கொண்டார். அதனை அடுத்து தேவி அம்மாவை இன்று 05/06/2013 துடியலூர் காவல் நிலையத்தின் முன்னிலையில் அவருடைய மகன் ரகுவிடம் ஒப்படைக்கப்பட்டது. சாலையில் மிகவும் பரிதாபமான நிலையில் இருந்த தேவி அம்மாவிற்கு உறவு கிடைத்த மகிழ்ச்சியில் ஈரநெஞ்சம் உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறது.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி
ஈர நெஞ்சம்

On 13.07.10, an old woman was found near the Thiruvallore bus stop at Gandhipuram in Kovai. She was mentally disturbed and did not even have a dress to cover her body. She was taken to the ‘Anbalayam rehabilitation centre’ by Eera Nenjam Magendran and his friends. With great care for the past 3 years at the ‘Anbalayam’ like proper medical treatment by Dr. Ramani and with medical aid from ROBERT BOSCH Ms. Devi regained her conscious. She was able to recognize herself and also her son. She mentioned that her name is Devi and her son’s name is Ganesh (a) Raghu and she is a resident of selvapuram in Kovai. Based on the information received from Mrs. Devi, Mr. Raghu was found and when asked about the details Mr. Raghu said that Ms. Devi is his mother and only they both lived together in a house. He also mentioned that his mother was lost for the past 5 years and all the efforts made in search of her including filing a complaint in the police station was in vain. Mr. Raghu was over whelmed with joy on seeing his mother after 5 years. He extended his sincere thanks to Anbalayam who took care of his mother for the past 3 years, to eera nenjam trust which took pity on his mother who was on the road side and entrusted her to the anbalayam , for the medical help from ROBERT BOSCH company and Dr. Ramani for the good treatment. Mrs. Devi was handed over to her son Mr. Raghu today (5.06.13) at the Thudiyalur police station. Eera nenjam wishes to share this happiness that Ms. Devi who was on the road side in a pitiful state is now safe in the hands of her son.

~ Thank You
Eera Nenjam



Thursday, April 11, 2013

சாலையோரமாக பரிதாபமான நிலையில் காணப்பட்ட ஜோதி ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

கோவை மாநகராட்சி காப்பகத்தில் இருந்து 03/04/2013 அன்று ஜோதி என்கிற சுமார் 40 வயது பெண்மணி காணாமல் போனதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, நேற்று (10/04/2013) கோவை டவுன் ஹால், மணிக்கூண்டு பகுதியில் சாலையோரமாக பரிதாபமான நிலையில் காணப்பட்ட ஜோதி ஈரநெஞ்சம் குழுவினரால் மீட்கப்பட்டு, மீண்டும் கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

காணாமல் போன ஜோதியை மீட்டுக் கொடுத்ததற்கு கோவை மாநகராட்சி காப்பகத்தினர் ஈரநெஞ்சம் குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (154/2013)
ஈர நெஞ்சம்

Jothi, about 40 years old, got lost on 03/04/2013 from Coimbatore Corporation Home. On hearing this, voluteers from Eera Nenjam were searching and found her in a very weak condition near the Town Hall Clock Tower, Coimbatore on 10/04/2013 and then admitted back in Coimbatore Corporation Home.
Coimbatore Corporation Home appreciated Eera Nenjam for finding the missing Jothi.

~ Thanks (154/2013)
Eera Eera Nenjam

Wednesday, February 29, 2012

காக்கும் கடவுளா ? காவு கேட்க்கும் கடவுளா ? ~மகேந்திரன்


அன்று 25/02/12 ஞாயிற்றுக்கிழமை நான் (மகேந்திரன் ) கரூரில் அருகே  உள்ள எங்களது குலதெய்வ கோவிலில் எனது உறவினர் வீட்டு காதுகுத்து திருவிழா அழைப்பு வந்ததால்  சென்று இருந்தேன்...
விழா நடந்து கொண்டு இருந்தது...
கோவில் வாசலில் இரண்டு ஆட்டுக்குட்டிகள் அதனோடு விழாவிற்கு வந்திருந்த  சின்னசிறு குழந்தைகள் விளையாடிக்கொண்டு, அந்த அழகிய தருணத்தை 
ரசித்தபடியே நான்... 
நான் ரசித்துக்கொண்டு இருப்பதை பொறுக்காத உறவினர் ஒருவர்  என்னை அழைத்து விழா நடப்பதை புகைப்படம் எடுக்கச்சொல்லி கட்டளை இட்டார் சம்மதித்து புகை படம் எடுத்துக்கொண்டு பொழுதை கழித்துக்கொண்டு இருந்தேன் ...
காதுகுத்துக்காக குழந்தைகளை தயார் செய்து அந்த  மொட்டை அடித்து ,  மேடையில்  உட்கார வைத்தார்கள் குழந்தைகள்  கண்ணில் வலிக்கும் என்ற  பயம் என்பதே இல்லை மகிழ்ச்சி மட்டுமே இருந்தது ..
எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி விளையாடிக்கொண்டு இருந்தது. காது குத்து நடைபெற்றது...
கோவிலில் பூஜை நடந்தேறியது...
மதிய உணவுக்கு ஒரு குரல் உத்தரவிட்டது...
கோவில் கதவடைக்கப்பட்டது ,
கோவில் வாசலில், குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருந்த அந்த ஆட்டுக்குட்டியை, குழந்தைகளிடம் இருந்து பிரித்து இழுத்துக்கொண்டு பூசாரி ஒருவர் கோவிலின் அருகே இருக்கும் ஐயனார் சிலைக்குமுன் கொண்டு சென்றார் , குழந்தைகளிடம் இருந்து அந்த ஆட்டுக்குட்டியை பிரித்ததும் குழந்தைகளுக்கு முகம் வாடிப்போனது ,
ஐயனார் சிலைக்கு முன் கோவில் பூசாரி சாராயம் மற்றும் தேங்காய் பழத்துடன் பூஜை, ஏதோ உளறியபடி...
இழுத்து வரப்பட்டுக்கொண்டு இருந்தது அந்த வாயில்லா ஜீவன் அதனை பின்தொடர்ந்து குழந்தைகள் ஏக்கத்தோடு வந்துக்கொண்டு இருந்தார்கள்,
அய்யனார் முன் வாயில்லா ஜீவனை நிறுத்தி அதன் மீது கோவில் பூசாரி கலக்கி வைக்கப்பட்டு இருந்த மஞ்சள் நீர் ஊற்றினார்   , கூடி இருந்தவர்கள் எல்லோரும் "அய்யா உத்தரவு கொடுயா" என கோஷமிட  எனக்கு கண்கலங்க ஆரம்பித்தது,
அந்த வாயில்லா ஜீவன் மீது ஊற்றிய  தண்ணீர் அந்த   மேனியில் படவும் அந்த ஜீவனுக்கு உடல் சிலிர்த்தது.
உடனே சுற்றி இருந்தவர்கள் அந்த ஜீவனை இறுக்கி பிடிக்க , பூசாரி தனது கையில் இருந்த  கத்தியை அந்த வாயில்லா ஜீவன் கழுத்தில் பய்த்தார் , 
அந்த ஜீவனோடு விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை தெய்வங்கள் இந்த அகோர காட்சியை கண்டு கதற ஆரம்பித்தது....
என்கண்களில் கண்ணீர்பாய்ந்தது  , ஜீவனின் கழுத்தில் இருந்து இரத்தம் பீச்சிஅடித்தது. 
பக்தர்கள் என சொல்லிக்கொண்டவர்கள் முகத்தில் ஒரு முகசுழிப்பும் இல்லை..
பதிலாக நல்ல கடா நல்ல பசி என சீக்கிரம் ஆகட்டும் என கூத்தாட்டம் போட ஆரம்பித்தனர்.
அந்த வாயில்லா ஜீவன் தலை வெட்டப்பட்டு முண்டமாய் துடி துடித்து மண்ணில் உயிரை விட்டது,
அந்த ஜீவனுக்கும் உணர்வு இருப்பதால் தானே தலையை வெட்டியதும்  கதறியது...
இல்லாவிட்டால் மரம் போல மனிதனுக்கு இன்னொரு  தலையை  பரிசளித்து இருக்குமே...
குழந்தைகள் அழுகைக்கு கூட பதில் சொல்லதெரியாது பெற்றோர்கள் "கொஞ்சம் பொறு இப்போதான் வெட்டி இருக்காங்க சமையல் முடிஞ்சது கறி சோறு சாப்பிடலாம் என வாயடைதுவிட்டார்கள் .
மீண்டும் நான்  கோயிலுக்கு சென்றேன் மனம் விட்டு  கோவத்தில்  நீ காக்கும் கடவுளா ?   காவு கேட்க்கும் கடவுளா ?
இவர்கள் பக்தர்களா பாவிகளா ? என முனனேன்.
 அதுவும் கோவிலில் உயிர் பலி இட்டு தன் சுயனலதிர்க்காக வாழ்வது கடவுள் ஏற்குமா ?
எந்த கடவுள் உயிர்பலி கேட்கிறது ?
எந்த கடவுள் உயிர் பலிக்கேட்கிறதோ அதை கடவுளாக எண்ணுவதும் வணங்குவதும் நியாயமா ?

காலைமுதல் பசியோடு இருந்த எனக்கு  துயரத்தால் எதையும் உண்பதற்கு மனம் வரவில்லை கோவைக்கு திரும்பி விட்டேன் கோவத்தோடு...
என் கோவம் அந்த அகோரர்கள் மீதும் தான்...
நீங்கள் மனிதர்களானால் என் கோவம் ஞாயம்தானா ?
~மகேந்திரன்