Showing posts with label காப்பகம். Show all posts
Showing posts with label காப்பகம். Show all posts

Tuesday, March 27, 2018

குப்பைத் தொட்டி

குப்பைத் தொட்டி !?!?
~~~~~~~~~~~~~~~



அந்த ஊருல இருபது பேர் கொண்ட ஒரு முதியோர் காப்பகம் இருந்தது ...

காலை விடிந்தது வயோதிகம் நிறைந்த முகங்கள், பசி படர்ந்த வயிறு வாடிய தோற்றம் விருந்தினர் உணவை எதிர்பார்த்து எதிர்பார்த்து மணி 11 தாண்டியது...

ஒரு சிலர் பகட்டுடை உடுத்து காப்பகத்திற்கு வந்தனர் யார் நிர்வாகம் என்றனர், வெளிநாட்டு உதவியா என்றனர், யாருடைய உதவி, என்ன நோக்கம் என்று இன்னும் பல கேள்விகள் கேட்டனர். வயிறு நிறைய பசி மட்டுமே இருந்தும் எல்லாவற்றிற்கும் பணிந்த குரலில் பதில் தந்தனர்...

சந்தேகங்கள் தெளிவானதும் பழைய துணி இருக்கிறது எடுத்துக் கொள்ளுங்கள் என்று கொண்டுவந்த மூட்டையாக கட்டிய துணியை தானம் செய்து கிளம்பினர்...

உள்ளே ஒரு வயதான பாட்டி வாடிய குரலில் " அப்போ அவங்க சாப்பாடு கொடுக்க வரலையா " என்று முனங்கியது...

காலை பசி தாண்டி மதிய பசி வேளை வந்தது...

பசி மயக்கத்தில் இருந்த முதியவர்களை தேடி மற்றும் சிலர் வந்தார்கள் ...

அவர்களும் அதே கேள்விகளை வெவ்வேறு விதமாகக் கேட்டு விசாரணைக்கு பிறகு , காலையில் சமைத்த உணவு 10 பேருக்கு மீதம் இருக்கும் அதை கொடுக்க வந்தோம் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று தானம் செய்து விட்டு கிளம்பினர். நல்ல வேளை உணவு கெடாமல் இருந்தது அதை இருபது பேரும் பங்கிட்டு தங்களது பாதி வயிற்றை நிறைத்தனர்...

மாலை வந்தது ஒரு குடும்பம் வந்தது , அவர்களும் முன்பு வந்தவர்கள் கேட்ட கேள்வியை காட்டிலும் இன்னும் கூடுதலாக தங்களை தெளிவு படுத்திக் கொள்ள பல விளக்கங்களை கேட்டு விட்டு முடிவில் , தங்கள் வீட்டுக்கருகில் இருக்கும் ஒரு பாட்டியை தங்கள் காப்பகத்தில் சேர்க்க வந்துள்ளோம் இங்கே இலவசமாக பார்த்துக் கொள்வதாக கேள்விப்பட்டோம் ஆதரவற்ற பாட்டியை பராமரிக்க சொந்தமென்று யாருமில்லை என்று கூறி மூன்று தலை முறை கண்ட முப்பது சொந்தங்களுக்கு சொந்தக்காரியை சொந்தங்களே காப்பகத்தில் விட்டு சென்றனர்.

முதிய வயதில் புதிய தோழிகள் கிடைத்த மன ஆறுதலில் தன் கதையைப் பகிர்ந்து சோகத்தை ஓரளவு கரைத்துக் கொண்டது அந்த புது பாட்டி.

சற்று நேரத்தில் ஒரு தம்பதியினர் வந்தார்கள் தங்கள் குழந்தைக்கு இந்த தேதியில் பிறந்தநாள் வருகிறது, அதனால் ஊரில் உள்ள பெரிய ஹோட்டலில் உயர்தர உணவுக்கு ஏற்பாடு செய்கிறோம் என்றனர். ஆனால் வயோதிகத்திற்கு அந்த உணவு ஏற்காது வேறு ஏதாவது என்று வேண்டுகோள் முன் வைக்க . நாங்கள் வேறு இடம் செல்கிறோம் என்று வருத்தத்தில் விடை பெற்றனர்.

இரவு பசி வேளை வந்தது கூடவே கூடுதலாக பசியும். கூட..

கண் உறங்குவதற்கு முன் வாசலில் ஒரு வாகனம் வந்தது அதில் இருந்து வந்தவர்கள் திருமண விழாவில் 50 பேர் சாப்பிடும் அளவிற்கு உணவு மீதியாகி விட்டது அதை கொடுக்க வந்துள்ளோம் என்று சொல்லி முடிப்பதற்குள் , பசி முந்திக் கொண்டு வாய் திறந்து கண்டிப்பாக ஏற்றுக் கொள்கிறோம் என்று அந்த உணவை பெற்றுக் கொண்டது.

கல்யாண வீட்டில் சாப்பாடு மதியம் செய்தது போல சாதம் தவிர மற்ற பதார்த்தங்கள் எல்லாம் கெட்டுப்போய் லேசான வாடையால் காட்டிக் கொடுத்தது , பதார்த்தங்களை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, வெறும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி கரைத்து காப்பகத்தில் உள்ள 21 பேரும் குடித்து விட்டு அன்றைய பொழுதை நிறைவு செய்தனர். அடுத்த நாள் காலையுணவுக்கு மீந்து போன சாதம் இருக்கும் நிம்மதியுணர்வுடன் அனைவரும் உறங்க சென்றனர்.

முதல் நாள் வந்த கந்தல் துணியோடும், மீதம் இருந்த கல்யாண வீட்டு கஞ்சியோடும் விடியலுக்காக காத்திருந்தது அந்த காப்பகம்..!!!

தங்கள் வீடுகளில் தேவையில்லாத குப்பையாக கருதிய முதியவர்களை , காப்பகத்தை குப்பைத் தொட்டியாக எண்ணி விட்டுச் செல்லும் நபர்களுக்கு தெரிவதில்லை தாங்கள் விட்டுச் செல்வது முதிய உறவினரை அல்ல "அனுபவம் உரைக்கும் நூல்" என்றும்... முதியோர் காப்பகங்கள் எல்லாம் குப்பைத் தொட்டிகள் அல்ல, "பல்கலைக்கழக நூலகங்கள்" என்பதும்...

~மகேந்திரன்

Wednesday, May 07, 2014

ஒரே நாளில் மூன்று உறவுகளை குடும்பத்தினருடன் இணைத்து வைத்ததில் ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ******
(303/07-05-2014)

கோவையில் 05/05/2014 நேற்று அரசு மருத்துவமனை ,ரயில் நிலையம் கலெக்டர் அலுவலகம் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றித் திரிந்த மனநிலை பாதிக்கப்பட்டோர் மற்றும் பிச்சைக்காரர்கள் 12 பேரை போலீசார் மீட்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பினர் அவர்களிடம் விசாரித்தனர். அதில் சிலருக்கு வீடும் உறவினர்களும் இருப்பதை அறிந்து அவர்களது உறவினர்களை தேடும் முயற்சியில் இறங்கினர். அதன் தொடர்பாக போலீசார் அழைத்து வந்த 12 பேரில் ராஜன் (33) திருச்சி , வேலு (50) திருநெல்வேலி , தியாகராஜன் (60) முசிறி , மாரப்பன் (38) விஜயமங்கலம் , கோபால் (70) கோவை ஆகிய 5 பேர்களின் உறவினர்களை கண்டுபிடித்து அவர்களிடம் . இவர்களைப்பற்றிய விபரம் கூறியதில் ,திருச்சியிலிருந்து ராஜனின் சகோதரர் தாமோதரன், திருநெல்வேலியில் இருந்து வேலுவின் சகோதரர் முருகன் , முசிறியில் இருந்து தியாகராஜன் அவர்களின் மருமகன் சுந்தரராஜன் ஆகியோர் உடனடியாக இன்று 06/05/2014 கோவைக்கு வந்தனர் அவர்களிடம் அந்த மூவரையும் மாநகராட்சி காப்பக ஆய்வாளர் கங்காதரன் ஒப்படைத்தார்.

ராஜனைப்பற்றி அவரது சகோதரர் தாமோதரன் கூறும்போது :
"தனது தம்பி ராஜனுக்கு அவ்வப்போது காக்காய் வலிப்பு வரும் அதனால் சற்று ஞாபகமறதி ஏற்பட்டது கடந்த மூன்று மாதங்களுக்கு முன் காணாமல் போய்விட்டார் நாங்கள் எங்குத் தேடியும் கிடைக்கவில்லை நேற்று ஈரநெஞ்சம் அமைப்பு மூலமாக காவல் நிலையத்தில் இருந்து போலீசார் வந்து தம்பி கோவையில் இருக்கிறார் என்று கூறினார்கள் அதனை தொடர்ந்து அவனை அழைத்துப்போக வந்துள்ளேன் " என்றுக் கூறினார் .
வேலுவின் சகோதரர் முருகன் கூறும்போது :
" எனது தம்பி வேலு டிரைவராக பணிபுரிந்து வந்தார் அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றது இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் வேலுவிற்கு எதோ விபத்து ஏற்பட்டு உள்ளது என்று திருச்சியில் இருந்து அலைபேசி மூலம் தகவல் வந்தது நாங்கள் அங்கு சென்று பார்த்தபோது வேலு அந்தபகுதியில் இல்லை, அதன் பிறகு நாங்கள் திருநெல்வேலி காவல் நிலையத்தில் காணவில்லை என்று புகார் தெரிவித்திருந்தோம் ஆனால் இதுவரை வேலுவை கண்டுபிடித்து கொடுக்கவில்லை . இன்று ஈரநெஞ்சம் அமைப்பு மூலமாக கோவையில் தம்பி இருப்பதை அறிந்து அவரை அழைத்துப்போக வந்துள்ளோம்" என்றார்.
தியாகராஜன் அவர்களின் மருமகன் சுந்தரராஜன் கூறும்போது :
"எனது மாமாவின் குடும்ப சூழ்நிலை வறுமையானது அவரது மகன் அருண் குமார் MBA படித்து வருகிறார் அவரை நல்லபடியாக படிக்கவைக்க வேண்டும் என்று வீட்டை விட்டு வெளியேறி கூலி வேலை செய்து அவ்வப்போது பணம் அனுப்பி வைப்பார் . ஆனால் கடந்த 3 மாதமாக பணம் அனுப்பவில்லை , அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவலும் தெரியவில்லை நாங்கள் எங்குதேடியும் கிடைக்கவில்லை எங்கு இருக்கிறார் என்ற தகவலும் தெரியவில்லை . நேற்று இரவு ஈரநெஞ்சம் அமைப்பினர் கொடுத்த தகவலின் படி உடனடியாக கோவைக்கு வந்துள்ளேன் " என்றார்.
மேலும் இவர்களை மீட்டு பத்திரமாக ஒப்படைத்ததற்கு உறவினர்கள் ஈரநெஞ்சம் அமைப்பிற்கும் , கோவை காவல் துறைக்கும் , மாநகராட்சி காப்பகத்திற்கும் மனதார நன்றியை தெரிவித்துக்கொண்டு அழைத்துச் சென்றனர்.
ஒரே நாளில் மூன்று உறவுகளை குடும்பத்தினருடன் இணைத்து வைத்ததில் ஈரநெஞ்சம் மகிழ்கிறது.
நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Yesterday 05.05.2014 the police have rescued the mentally ill and the beggers from the government hospital, railway station and the collectors office where they disturbed the traffic and the general public. There were 12 of them rescued and admitted at Coimbatore City Corporation Home. Following that the members of the Eera Nenjam Trust questioned those helpless individuals. The members have found out that some of them had families and homes. The members started searching for the relatives and out of those 12 who were rescued by the police, Rajan (33) Trichy, Velu (50) Thirunelveli, Thiyagarajan (60) Musiri, Marappan (38) Vijayamangalam, Gopal (70) Coimbatore’s relatives were found and they were informed about their lost ones. When the members members of the Eera Nenjam Trust informed informed about these individuals, Rajan’s brother from Trichy, Velu’s brother Murugan from Thirunelveli, Thiyagarajan’s nephew Sundararajan came rushing down to Coimbatore today 06.05.2014. Citi Corporation Inspector Gengatharan handed those three over to their relatives.
When Rajan’s brother Thamotharan spoke, he said “my brother Rajan periodically suffered from epilepsy that caused him poor memory. He went missing three months ago. We searched for him everywhere but couldn’t find him. Yesterday through the Eera Nenjam Trust, the police came and informed that our brother was in Coimbatore. I came to bring him with me.”
When Velu’s brother Murugan spoke, “my brother Velu worked as a driver. He was married and have two children. Six months ago we received a cell phone message from Trichi that he had an accident. When we went to see him he wasn’t there. We reported a missing complaint at the Thirunelveli police station. But they haven’t found Velu . Today through the Eera Nenjam Trust we found that our brother Velu was in Coimbatore and came here to bring him with me.”
When Thiyagarajan’s nephew Sundararajan spoke, “my uncle’s family has financial difficulties. His son Arun Kumar is studying MBA. Just to support him in his studies uncle left home to earn labor job and sent money time to time. But the last 3 months money wasn’t sent by him and also there was news of his whereabout. We searched for him everywhere and couldn’t located him. Upon the messaged received last night from the members of the Eera Nenjam Trust I came to Coimbatore immedietly.”
They all thanked the Eera Nenjam Trust, Coimbatore police service, and the Coimbatore City Corporation Home for rescued them and handed over safely. They all left with their loved ones.
The Eera Nenjam Trust is very very pleased about the fact they have reunited three helpless individuals back with their families and happy to share that with you all.

~thank you
Eera Nenjam Trust

Thursday, March 27, 2014

TV நேரடி நிகழ்ச்சியில்... ஒரு உறவை கண்டுபிடிதுகொடுத்த ஈரநெஞ்சம்


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ******
[For English version, please scroll down]
(284/27-03-2014)
22-03-2014 அன்று பொதிகை தொலைக்காட்சியின் " காற்றுச் சிம்மாசனம் " என்ற நிகழ்ச்சி பதிவுக்கு ஈரநெஞ்சம் அமைப்பு சார்பாகக் குழந்தைகள் மற்றும் ஈரநெஞ்சம் திரு.மகேந்திரன் அழைப்பின் பேரில் கலந்துக்கொண்டனர் . நிகழ்ச்சியில் சேவாலயம் குழந்தைகள் சேவாலயம் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி சுதா, சிறப்பு அழைப்பாளராகத் தோழர் அறக்கட்டளை சாந்தகுமார் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சி தொகுப்பாளராகக் கோவை பொதிகை தொலைகாட்சி நிலைய தலைவர் கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி ஆகியோர் பங்குபெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் சேவாலயம் அமைப்பில் இருந்து வந்து பங்கு பெற்ற பேபி ஷாலினி என்ற 13 வயது சிறுமியின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் அனைவரையும் கண் கலங்க செய்தது. ஒன்றரை வருடத்திற்கு முன் சிறுமி பேபி ஷாலினியும் அவளது தம்பியும் ஒரு காப்பகத்தில் வசித்து வந்தனர். அப்போது தவிர்க்க முடியாத சில காரணங்களால் அந்த காப்பகத்தில் இருந்து எல்லா குழந்தைகளையும் வெளியேற்றப்பட்டு வேறு வேறு காப்பகங்களில் அனுமதிக்கப் பட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக பேபி ஷாலினியும் அவளது தம்பி ஆரோக்கியதாசும் பிரிந்து விட்டனர். பேபி ஷாலினி கோவை சேவாலயம் வந்து சேர்ந்தாள். தன் தம்பி எங்கு இருக்கிறான் என்று தெரியாத நிலையில் அன்று முதல் அவள் பலரிடமும் தன் தம்பியை கண்டு பிடித்து தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கேட்டுக் கொண்டால். அதை தொடர்ந்து மாநில குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திலும் அவளது வேண்டுகோள் பரிசீலிக்கப்பட்டு அவளது தம்பியை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் தம்பியை கண்டு பிடிக்க முடியவில்லை. கண்களில் நீர் மல்க தனக்கு இருந்த ஒரே ஆதரவான உறவையும் பிரிந்து விட்ட பேபி ஷாலினியின் நிலையை கண்டு அங்கு கூடியிருந்த அனைவருமே கண் கலங்கினர். அவளுக்காக எல்லோரும் பரிதாபப் பட்டு அவளது தம்பி கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.
ஆனால் இதுவரை உறவை பிரிந்து தவித்த பலரையும் உறவுகளுடன் சேர்த்து வைத்த ஈரநெஞ்சம் அமைப்பினர் பேபி ஷாலினியை அவளது தம்பியுடன் சேர்த்து வைத்தாக வேண்டும் என்ற உத்வேகத்துடன் உடனே முயற்சியை தொடங்கினர். முயற்சியின் பலனாக ஷாலினியின் தம்பி ஆரோக்கியதாஸ் ஊட்டியில் ஒரு காப்பகத்தில் இருப்பதை கண்டறிந்தனர். அதை தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பின் தலைமையில் பொதிகை தொலைகாட்சி ஊழியர்கள், சேவாலயம் அமைப்பின் நிர்வாகத்தினர் மற்றும் மாநில குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஊழியர்கள் ஆகியோர் பேபி ஷாலினியையும் அழைத்துக் கொண்டு இன்று 26-03-2014 ஊட்டிக்கு சென்று பேபி ஷாலினியின் தம்பியை கண்டுபிடித்து மீட்டனர். பேபி ஷாலினியை அவளது ஒரு உறவான அவளது தம்பியுடன் இணைத்து வைக்கும் வகையில் தம்பி ஆரோக்கியதாஸ் மாநில குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப் பட்டான்.
இதுவரை உறவை பிரிந்த பலரையும் ஈரநெஞ்சம் அமைப்பினர் அவர்களின் குடும்பத்தினருடன் இணைத்து வைத்துள்ளனர். ஆனால் ஆதரவற்ற, பிரிந்து விட்ட இரு உறவுகளை இணைத்து அவர்களுக்கு மீண்டும் ஆதரவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது ஈரநெஞ்சம் அமைப்பு. ஆதரவற்றவர்கள் என்ற நிலையே யாருக்கும் இருக்கக்கூடாது என்பதே ஈரநெஞ்சம் அமைப்பின் நோக்கமாகும்.
அவ்வகையில் இன்று பேபி ஷாலினியின் தம்பி ஆரோக்கியதாசை அவளுடன் இணைத்து வைத்ததற்காக ஈரநெஞ்சம் அமைப்பு மிகவும் மகிழ்ச்சி அடைவதோடு அதற்கு உதவிய பொதிகை தொலைகாட்சி மற்றும் அதன் "காற்று சிம்மாசனம்" நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், சேவாலயம் அமைப்பு நிர்வாகிகள், மாநில குழந்தைகள் பாதுகாப்பு அலவலக ஊழியர்கள் ஆகிய அனைவருக்கும் ஈரநெஞ்சம் அமைப்பு நன்றியை தெரிவித்து கொள்கிறது.
ஈர நெஞ்சம் அமைப்பின் இந்த அரிய முயற்சியை அனைவரும் மனதார பாராட்டினர்.
~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

On22.03.2014 on behalf of the Eera Nenjam Trust, Mr. Mahendran and the children from the trust participated upon the invitation in the recording of "Katru Simmasanam" a program of Pothigai TV. The principal Mrs. Sutha of Sevalayam School with the children, Mr. Shanthakumar from Thozhar Trust as a special invitee, and as a coordinator of the program, Kalai mamani Aandal Priyatharshini the head of Pothigai TV station also participated in this program.
During this program, an incident happened in the life of 13 year old Baby Shalini from Sevalayam organization made tears come out of everyone's eyes. One and a half years ago Baby Shalini and her brother Arockiyadas lived in a charity home. For some unavoidable reason, all the children of that trust had to be transferred to other charity homes. During that process unexpectedly baby Shilini and her brother Arockiyadas got separated. Baby Shalini ended up living in Sevalayam organization. Without knowing where her brother was living, baby Shalini asked many individuals to find her brother and reunited with her. Later her request was taken into consideration by the state children's safety operation office and they started trying to find her brother, but her brother couldn't be found. Everyone was in tears seeing the sorrowful situation of tearful Shalini who got separated from the only family she had. They all sympathized and prayed god for her to be reunited with the brother.
But, the members of the Eera Nenjam Trust who had reunited many individuals who lost their families in the past, determined to reunite Shalini back with her brother and started the search with the enthusiastic effort. Because of the tremendous effort they took, they found out that Shalini's brother is living in a charity home in Ooty. Following that information, under the leading of the Eera Nenjam trust the employees of Pothigai TV, the administrators of Sevalayam organization, and employees of the state children's safety operation went to Ooty. Earlier today 26.03.2014 baby Shalini was reunited with her brother Arockiadas. Now Arockiyadas is being handed over to the office of the state children's safety operation.
So far the Eera Nenjam Trust made many efforts and reunited many individuals back with their families. Now once again it made the difference by reuniting two siblings and found shelter for them. The mission of the Eera Nenjam Trust is that " there should be no individual that suffer from not being cared". According to its mission the Eera Nenjam Trust is very pleased of the fact that the siblings are reunited and being cared. The trust is also thanking the Pothigai TV, the program coordinators of the "Katru Simmasanam" program, administrators of Sevalayam organization and the officials from the state children's safety operation for their assistance in the search of the separated brother.
Everyone praised the tremendous effort of the members of Eera Nenjam Trust that made to find Arockiyadas in a very short time period.
The Eera Nenjam Trust is very pleased to share its experience with you all.
~thank you
Eera Nenjam


Friday, February 07, 2014

ஆடை இன்றி சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services


" ****** 
[For English version, please scroll down] 
(266/07-01-2014)
இன்று 07/02/2014 காலை கோவை இரயில் நிலையம் அருகே மன நலம் பாதிக்க பட்ட 30 வயது மதிக்க தக்க உடலில் ஆடைகள் கூட சரியான முறையில் இல்லாமல் துர்நாற்றத்துடன் அப்பகுதியில் சுற்றி திரிவதை அப்பகுதி பொதுமக்கள் கண்டு அந்த பெண்ணிற்கு பாதுகாப்பான இடம் தேடி தரும் படி ஈரநெஞ்சம் அமைபிற்கு வேண்டுகோள் விடுத்தனர்.அதனை தொடர்ந்து உடனடியாக அப்பகுதிக்கு ஈரநெஞ்சம் அமைப்பினர் சென்று அந்த மனநிலை பாதிக்க பட்ட பெண்ணை மீட்டு கோவை மாநகராட்சி காப்பகத்திற்கு அழைத்து வரபட்டு அவரை குளிக்கவைத்து மாற்று உடை அணிவித்து மாநகராட்சி காப்பகத்தில் அனுமதி கேட்டு மீட்கப்பட்ட பெண்ணை காப்பகத்தில் சேர்த்தனர்.
தற்போது காப்பகத்தின் பொறுப்பில் இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண் பேசுவதை வைத்துப்பார்க்கும் பொழுது பெண்ணிற்கு தாய் மட்டும் இருக்கலாம் எனவும் கோவை சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் தெரியப்படுகிறது.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Today 07/02/14 morning, 30 years old mentally ill without proper dressing was roaming near Koavai Railway station. General public approach Eeraneanjam to protect that lady and requested to give proper shelter for her. Immediately Eeranenjam reached the spot and took her to corporation home and she was given a bath and new cloths and admitted in the home. Eeranenjam spoke to her regarding her family background, from her talk we guess she has a mother near Koavai Soakkamputhur area.

~Thank you
Eera nenjam

Wednesday, January 08, 2014

தொண்ணூறு வயது மூதாட்டி மீட்பு

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(250/07-01-2014)

கோவை அவினாசிசாலை அண்ணா சிலை அருகில் சுமார் 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இன்று 07/01/2014 காலை முதல் சரிவர நடக்க முடியாமல் சாலையோரமாக சுருண்டு கிடந்துள்ளார். அப்பகுதி மக்கள் அந்த மூதாட்டியின் நிலையை அறிந்து உணவு கொடுத்து வந்தனர். யார் அவர் எங்கிருந்து வந்தார் என்ற விபரம் தெரியவில்லை. மூதாட்டிக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்ற நிலையில் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு தகவல் கொடுக்கப்பட்டு அந்த மூதாட்டியை ஒரு காப்பகத்தில் சேர்க்கும் படி கேட்டுக்கொண்டனர். ஈரநெஞ்சம் உறுப்பினர்கள் உடனடியாக அந்த பாட்டியை அப்பகுதியில் இருந்து மீட்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்துள்ளனர். மேலும் பாட்டியிடம் விசாரிக்கும் பொது அவர் பெயர் பச்சை அம்மாள் என்ற விபரம் மட்டும் கிடைக்கப்பட்டது. மேலதிக விபரங்கள் கிடைக்கப்படவில்லை. பாட்டியின் நிலையை கவனித்து உணவு கொடுத்து அவரது பாதுகாப்புக்காக உதவிய பொது மக்களுக்கு நன்றியை ஈர நெஞ்சம் அமைப்பு தெரிவித்துக் கொள்கிறது.
இந்த பாட்டியை உங்களில் யாருக்காவது அடையாளம் காண முடிந்தால் தயவு செய்து ஈர நெஞ்சம் அமைப்பைத் தொடர்பு கொள்ளவும். 9080131500

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Today 07.01.2014 an elderly lady about 90 years old was found curling down in hunger on the street near Anna Statue close to Avinashi Road in Coimbatore. Local citizens noticed her situation and provided food for her. Upon considering her safety, they contacted Eera Nenjam Trust and passed on the information of her situation. Members of Eera Nenjam Trust rushed to that location and rescued her. Later she was admitted at the Coimbatore City Corporation Charity Home. When the members of Eera Nenjam Trust questioned her about her background she could only tell them that her name is Pachchai Ammal. More information about her background cound't be collected from her. Eera Nenjam Trust is thanking the local citizens who helped the elderly lady with food and assisted her to find shelter.
If anyone of you can recognize this elderly lady and know any information about her, 
please contact Eera Nenjam trust. 9080131500

~Thank you
Eera Nenjam Trust

Wednesday, December 25, 2013

புதுக்கோட்டை ஸ்ரீ ராமலு உறவினருடன் ஒப்படைப்பு~ ஈரநெஞ்சம்







''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(245/25-12-2013)
புதுகோட்டையில் ஸ்ரீராமலு என்ற 75 வயதான முதியவர் தனது மகனுடன் நடந்த குடும்ப தகராறில் வீட்டிலிருந்து வெளியேற்றபட்டார். எங்கு செல்வது என்று தெரியாமல், தன் மகளின் முகவரியும் தெரியாமல், கோவையில் தனது நண்பர்களை சந்திக்க வந்த ஸ்ரீராமுலு உடல் நிலை சரி இல்லாத நிலையில் மருத்துவமனையில் நடக்க இயலாத நிலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகும் நடக்க முடியாமல் எங்கு செல்வது என்று தெரியமால் மழையில் நனைந்து சாலையோரம் கிடந்த அவரை B3 காவல் துறையினர் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு தகவல் கொடுத்தனர். அதனைதொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பு அந்த முதியவரை மீட்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் (22/10/13) அன்று சேர்த்தது.

https://www.facebook.com/photo.php?fbid=279912475467048&set=pb.100003448945950.-2207520000.1387979573.&type=3&theater


ஸ்ரீ ராமலு மருத்துவ உதவியுடன் காப்பகத்தில் நல்லமுறையில் பராமரிக்கப்பட்டுவந்தனர்.
மேலும் ஸ்ரீராமலு கொடுத்த தகவலை வைத்து அவருடைய உறவினர்களை தேடும் முயற்சியில் ஈர நெஞ்சம் மற்றும் புதுகோட்டை காவல் துறையினர் ஈடுபட்டனர். ஸ்ரீராமலு கொடுத்த தொலைபேசி எண் தவறாக இருந்தது. அனால் தொடர்ந்து அவருடைய மகள் ஹேமாவை தேடும் முயற்சி நடந்து வந்தது. நேற்று ஈர நஞ்சம் அமைப்பினர் சண்முகம் என்ற நகர காவல் துறை துணை ஆய்வாளர் உதவியினால் ஸ்ரீராமுலுவின் மகள் ஹேமாவின் விலாசத்தை கண்டுபிடித்தனர். இதைடுத்து இன்று (25.12.13)அவரை ஈர நெஞ்சம் அமைப்பினர் ஹேமாவிடம் ஒப்படைத்தனர். கணவரை இழந்து தனியாக வாழும் ஹேமாவுக்கு தன் தந்தை திரும்ப கிடைத்ததில் அளவற்ற மகிழ்ச்சி. ஸ்ரீராமலுவின் மனைவி திருமதி பிரேமாவும் தன் கணவர் திரும்ப கிடைத்ததற்கு ஈர நெஞ்சம் அமைபிற்கு நன்றியை தெரிவித்தார்.

http://youtu.be/y117XG1FDW0

யாரும் உதவாத நிலையில் தன்னை மீட்டு காப்பகத்தில் சேர்த்ததற்கும் மேலும் தன் மகளுடன் தன்னை சேர்த்ததற்கும் ஸ்ரீராமலு ஈரநெஞ்சம் அமைப்பிற்கு நன்றியை தெரிவிதுகொண்டார். இதற்க்கு பெரிதும் உதவி செய்த காவல் துறை அதிகாரி திரு. சண்முகம் அவர்களுக்கும் ஈர நெஞ்சம் உறுபினர்களுக்கும், ஈர நெஞ்சம் தன்னுடைய நன்றிகளை தெரிவித்துகொண்டது.
~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Sri Ramalu the 75 year old man was abused by his sons and was chased away from pudhukottai. He was unable to walk and admitted to be treated at the hospital in Coimbatore. After the treatment he didn't know where to go and was drenched in the rain. The B3 Police service noticed his situation and contacted Eera Nenjam. following that Eera Nenjam rescued him and admitted him at Coimbatore City Corporation Home. Now he is feeling better but could not remember any details properly. The phone number that he gave to the police as his daughter’s number was also wrong. But still eera nanjam was constantly taking efforts to find out his daughter’s address. At last his daughter Hema’s address was found out with the help of S.I Mr. Shanmugam of pudhukottai. He showed interest in helping sriramalu and was very helpful. Hema was very happy to have found her father and expressed her willingness to take care of her father. She lives alone after her husband’s death and she was happy to have her father back with her. Mr. Sriramalu’s wife Mrs. Prema also came along with her daughter and was extremely happy about her husband’s safety. The entire family was happy and they sincerely thanked Eera nenjam for this noble service. Eera nenjam sincerely thanks Mr. Shanmugam (S.I of Police, Pudhukottai) and the members of eera enjam who has helped Mr. Sriramulu to find his family.

~Thank You
Eera Nenjam

Sunday, December 22, 2013

ஆதரவற்ற மூதாட்டி மீட்பு

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(244/21-12-2013)

21/12/2013 கோவை, சுந்தராபுரம் பகுதியில் 90வயது மதிக்கத்தக்க தங்கம்மாள் என்பவர் பல வருடமாக சாலையில் வசித்துவந்தார் , பொதுமக்கள் மூதாட்டிக்கு உணவும் மற்றும் உதவியும் செய்துவந்தனர் , தற்சமையம் குளிர்காலமாக இருப்பதனால் மிகவும் அவதிப்பட்டு வந்தார், இதனை அறிந்த அப்பகுதிவாழ் மக்கள் ஈரநெஞ்சம் அமைபிற்கு தொடர்புகொண்டு தங்கம்மாள் பாட்டிக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தனர் , அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பினர் அந்த தங்கம்மாள் பாட்டியை தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துவந்து கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்கள்.

மேலும் தங்கம்மாள் பாட்டி கூறும்போது தனக்கு யாரும் இல்லை என்றும் பலவருடமாக இந்த பகுதியில் தான் குப்பைகளை பொருக்கி  விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்துவந்ததாகவும். இப்போது வயதாகிவிட்டதால் இந்த பகுதி மக்களிடம் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்ததாகவும் கூறினார்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Thangammal age about 90yrs has been living on the streets of Coimbatore Suntharapuram area for many years. The public used to provide food and help her. She struggled a lot because now it is a cold season. After noticing her struggle the public contacted Eera Nenjam and requested them to assist Thangammal Paati. Following that today 21.12.2013 Eera Nenjam rescued Thamgammal Paati and brought her to Coimbatore City Corporation home by ambulance and admited her at the home. When Thangammal Paati spoke about her background, she mentioned that she has no one to go to and survived these years by selling stuff from the waste. Now that she got old she survived by begging.

Once again Eera Nenjam is pleased about the fact that it rescued another homeless needy person and made a little difference. Eera Nenjam also want to share this information with you.

~Thank You
Eera Nenjam
Photo: ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(244/21-12-2013)

 21/12/2013 கோவை, சுந்தராபுரம் பகுதியில் 90வயது மதிக்கத்தக்க தங்கம்மாள் என்பவர் பல வருடமாக சாலையில் வசித்துவந்தார் , பொதுமக்கள் மூதாட்டிக்கு உணவும் மற்றும் உதவியும் செய்துவந்தனர் , தற்சமையம் குளிர்காலமாக இருப்பதனால் மிகவும் அவதிப்பட்டு வந்தார், இதனை அறிந்த அப்பகுதிவாழ் மக்கள் ஈரநெஞ்சம் அமைபிற்கு தொடர்புகொண்டு தங்கம்மாள் பாட்டிக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தனர் , அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பினர் அந்த தங்கம்மாள் பாட்டியை தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துவந்து கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்கள்.

மேலும் தங்கம்மாள் பாட்டி கூறும்போது தனக்கு யாரும் இல்லை என்றும் பலவருடமாக இந்த பகுதியில் தான் குப்பைகளை போருக்கு விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்துவந்ததாகவும். இப்போது வயதாகிவிட்டதால் இந்த பகுதி மக்களிடம் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்ததாகவும் கூறினார்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Thangammal age about 90yrs has been living on the streets of Coimbatore Suntharapuram area for many years. The public used to provide food and help her. She struggled a lot because now it is a cold season. After noticing her struggle the public contacted Eera Nenjam and requested them to assist Thangammal Paati. Following that today 21.12.2013  Eera Nenjam rescued Thamgammal Paati and brought her to Coimbatore City Corporation home by ambulance and admited her at the home. When Thangammal Paati spoke about her background, she mentioned that she has no one to go to and survived these years by selling stuff from the waste. Now that she got old she survived by begging. 

Once again Eera Nenjam is pleased about the fact that it rescued another homeless needy person and made a little difference. Eera Nenjam also want to share this information with you. 

~Thank You
Eera Nenjam

Thursday, November 28, 2013

லட்சுமி அம்மாவிற்கு உறவு கிடைச்சாச்சு ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
****** [For English version, please scroll down]
(237/27-11-2013)

26.11.13 அன்று முகநூலில் ஈரநெஞ்சம் அமைப்பு கொடுத்த தகவலை தொடர்ந்து லட்சுமி அம்மாள் பாட்டியின் பேரன் சிவகுமார் அவர்களின் தொடர்பு கிடைத்தது.

https://www.facebook.com/photo.php?fbid=494572107306877&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater

அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பினர் சிவகுமார் அவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தவுடன் சிவக்குமார் 27-11-2013 இன்று கோவை வந்தார். அவரிடம் லட்சுமி அம்மாள் ஒப்படைக்கப்பட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம். சிவகுமார் கூறுகையில் தனது பாட்டி தூத்துக்குடியில் 30.09.13 அன்று காணமல் போனதாகவும். அவரை பற்றி காவல் துறையில் தகவல் கொடுத்து கடந்த ஒரு மாதமாக தேடி வருவதாகவும் தெரிவித்தார். பிரிந்த தனது பாட்டியை மீட்டு தந்த ஈரநெஞ்சம் அமைப்பிற்கு அவர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். அவரை அவரது குடும்பத்தினருடன் சேர்க்கவும் உதவிய அனைத்து நண்பர்களுக்கும் ஈரநெஞ்சம் சார்பில் நன்றிகள்.

மீண்டும் ஒரு உறவை சேர்த்து வைத்ததில் ஈரநெஞ்சம் மகிழ்ச்சியடைகிறது.

~ நன்றி

ஈர நெஞ்சம்

https://www.facebook.com/eeranenjam

On 26-11-13, Eeranenjam's post in Facebook as Mrs. Lakshmiammal's detail, we came to know about his grand son Mr. Sivakuamr. As soon as Eeranenjam contacted and let him know about Mrs. Lakshmiammal. He came to Coimbatore and taken care of her. He told that she was missed in Thoothukudi on 30-10-2013 and they registered a complaint in police and searched her for a month. He told thanks to Eeranenjam to rescue his Grandmother. We thank you all who are helped to collect the details and rescue her. Eeraemjam feels happy to join one more person with family.

~thank you.
Eera Nenjam Charity
Photo: Eera Nenjam Charity
''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
****** [For English version, please scroll down]
(237/27-11-2013)

26.11.13 அன்று முகநூலில் ஈரநெஞ்சம் அமைப்பு கொடுத்த தகவலை தொடர்ந்து லட்சுமி அம்மாள் பாட்டியின் பேரன் சிவகுமார் அவர்களின் தொடர்பு கிடைத்தது.

https://www.facebook.com/photo.php?fbid=494572107306877&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater

அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பினர் சிவகுமார் அவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தவுடன் சிவக்குமார் 27-11-2013 இன்று கோவை வந்தார். அவரிடம் லட்சுமி அம்மாள் ஒப்படைக்கப்பட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம். சிவகுமார் கூறுகையில் தனது பாட்டி தூத்துக்குடியில் 30.09.13 அன்று காணமல் போனதாகவும். அவரை பற்றி காவல் துறையில் தகவல் கொடுத்து கடந்த ஒரு மாதமாக தேடி வருவதாகவும் தெரிவித்தார். பிரிந்த தனது பாட்டியை மீட்டு தந்த ஈரநெஞ்சம் அமைப்பிற்கு அவர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். அவரை அவரது குடும்பத்தினருடன் சேர்க்கவும் உதவிய அனைத்து நண்பர்களுக்கும் ஈரநெஞ்சம் சார்பில் நன்றிகள்.

மீண்டும் ஒரு உறவை சேர்த்து வைத்ததில் ஈரநெஞ்சம் மகிழ்ச்சியடைகிறது.

~ நன்றி

ஈர நெஞ்சம்

https://www.facebook.com/eeranenjam

On 26-11-13, Eeranenjam's post in Facebook as Mrs. Lakshmiammal's detail, we came to know about his grand son Mr. Sivakuamr. As soon as Eeranenjam contacted and let him know about Mrs. Lakshmiammal. He came to Coimbatore and taken care of her. He told that she was missed in Thoothukudi on 30-10-2013 and they registered a complaint in police and searched her for a month. He told thanks to Eeranenjam to rescue his Grandmother. We thank you all who are helped to collect the details and rescue her. Eeraemjam feels happy to join one more person with family.

~thank you.
Eera Nenjam Charity

Friday, June 07, 2013

ஆதரவற்ற சுசிலா அம்மா~ ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(165/2013)

கோவை உப்புளி பாளையம் பகுதியில் வயதான சுசிலா என்னும் சுமார் 80 வயதான மூதாட்டி ஒருவர் ஆதரவு இல்லாமல் மயங்கிய நிலையில் உண்பதற்கு உணவும் கிடைக்காமல் சாலையிலேயே பல நாட்களாக இருப்பதை கண்டு ஈரநெஞ்சம் , B4 காவல் நிலையம் அனுமதியுடன் அவரை 04/06/2013 அன்று கோவை மாநகராட்சி காப்பகத்தில் ஈரநெஞ்சம் அமைபினரால் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர் யார் என்ன விபரம் என தெரியவில்லை இவரைப்பற்றிய தகவல் உங்களுக்கு தெரிந்தால் ஈரநெஞ்சம் 9843344991 என்ற எண்ணுக்கு தகவல் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி
ஈர நெஞ்சம்

An old desolate woman of age 80, named Suseela was found on the roadside of uppilipalayam in kovai in very bad health condition even without having food to eat for many days. On knowing this Eeranenjam trust, with the permission of B4 police station took her to the corporation maintained trust on 04/06/2013 and entrusted her there. There is no information about this respected old woman.
If anyone knows any information about her kindly call the Eera nenjam trust in the number 9843344991.

~Thank you.
EERANENJAM

Sunday, May 12, 2013

ஈரநெஞ்சம் பயனுள்ள நாள் ~மகேந்திரன்


"வாழும் நாட்களில்  எல்லா நாட்களிலும் உண்மையான மகிழ்ச்சியை தரும் நாட்கள் நாம் பயனுள்ள வகையில் கழிக்கின்ற நாட்கள் தான்"
அப்படி நான் கழித்த நாட்களில் ஒன்றுதான் நமது ஈரநெஞ்சம் அமைப்பின் முதலாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள மாநகராட்சி முதியோர் காப்பகத்தில்  கழித்த அந்த ஒரு நாள்.

கடந்த 23-4-2014 உடன் ஈரநெஞ்சம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்தது. அதை தொடர்ந்து அதை பயனுள்ள வகையில் கொண்டாட ஈரநெஞ்சம் உறுப்பினர்கள் முடிவு செய்தோம். கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள மாநகராட்சி முதியோர் காப்பகத்தில் துப்புரவு பணி  மேற்கொள்ள முடிவு  செய்து , அதன்படி அந்த கட்டிடத்துக்கு வெள்ளை அடித்தல், கழிப்பறை சுத்தம் செய்தல், மற்றும் அங்கே  உள்ள முதியவர்களுக்கும் மாநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும்  முடி திருத்துதல், நகம் வெட்டுதல் குளிக்கவைதல்  போன்ற செயல்களை செய்தோம். மேலும் மரங்கள் நட்டோம், அவர்களுக்கு அறுசுவை உணவு வழங்குதல் போன்றவையும் நடந்தது.

இதில் நானும் எனது நண்பர்களும் ஈரநெஞ்சம் உறுப்பினர்களுமான எண்ணற்றோர் கலந்துக்கொண்டோம் .

அவர்களுக்கு கோவை வலைப்பதிவாளர்கள் சார்பாக அறுசுவை உணவும் வழங்கப்பட்டது. அது மட்டும்  இன்றி கோவை வலைப்பதிவாளர்கள் சார்பாக எழுத்தாளர்கள்  அகிலா ,  கோவை சரளா, திரு. கலாகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அங்கே இருந்த முதியவர்களுடன் கழித்த அந்த ஒருநாள் உண்மையாகவே மனம் நிம்மதியாக இருந்த ஒரு நாள். ஆம்.. ஆதரவற்றோருக்கு அரவணைப்பு  தரும்போது அவர்கள் அடையும் மகிழ்ச்சி, நிம்மதி  இருக்கிறதே அதை விட பெரியதுங்க,அதை நாம் காண்பது. அந்த மகிழ்ச்சியை நாங்கள் அனைவருமே உணர்ந்தோம். இது போல் முதியோர் காப்பகல் இல்லமால் இருக்க வேண்டும். நம்மை பெற்று போற்றி பாதுகாத்து வளர்த்த அவங்களை மிக கஷ்டமான ஒரு சூழ்நிலையில் வாழ விடக்கூடாது என ஒவ்வொருவரும் நினைத்தால் இது போல் முதியோர் இல்லங்கள் இருக்கவே இருக்காது.

எங்களது இந்த செயலுக்கு அனுமதி தந்த கோவை மாநகராட்சி ஆணையாளருக்கும், காப்பக பொறுப்பாளர் , உதவி புரிந்த பத்திர்க்கை துறை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

Thursday, April 11, 2013

சாலையோரமாக பரிதாபமான நிலையில் காணப்பட்ட ஜோதி ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

கோவை மாநகராட்சி காப்பகத்தில் இருந்து 03/04/2013 அன்று ஜோதி என்கிற சுமார் 40 வயது பெண்மணி காணாமல் போனதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, நேற்று (10/04/2013) கோவை டவுன் ஹால், மணிக்கூண்டு பகுதியில் சாலையோரமாக பரிதாபமான நிலையில் காணப்பட்ட ஜோதி ஈரநெஞ்சம் குழுவினரால் மீட்கப்பட்டு, மீண்டும் கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

காணாமல் போன ஜோதியை மீட்டுக் கொடுத்ததற்கு கோவை மாநகராட்சி காப்பகத்தினர் ஈரநெஞ்சம் குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (154/2013)
ஈர நெஞ்சம்

Jothi, about 40 years old, got lost on 03/04/2013 from Coimbatore Corporation Home. On hearing this, voluteers from Eera Nenjam were searching and found her in a very weak condition near the Town Hall Clock Tower, Coimbatore on 10/04/2013 and then admitted back in Coimbatore Corporation Home.
Coimbatore Corporation Home appreciated Eera Nenjam for finding the missing Jothi.

~ Thanks (154/2013)
Eera Eera Nenjam

Friday, March 29, 2013

ஆதரவற்ற மூதாட்டிக்கு அடைக்கலம்~ஈரநெஞ்சம்


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

கோவை காட்டூர் பட்டேல் சாலை பகுதியில் சுமார் 80 வயதான மூதாட்டி ஒருவர் ஆதரவு இல்லாத நிலையில் சாலையிலேயே பல மாதங்களாக இருப்பதாக காட்டூர் காவல் நிலைய போலீசாரால் ஈரநெஞ்சம் அமைப்பிற்குத் தகவல் கொடுத்து அந்த மூதாட்டியை ஏதேனும் காப்பகத்தில் சேர்க்கும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவரை 18/03/2013 அன்று கோவை மாநகராட்சி காப்பகத்தில் ஈரநெஞ்சம் அமைபினரால் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த மூதாட்டியை அழைத்துச் செல்லும் பொழுது உடைகள் இல்லாமல் இருந்த வேளையில் மாற்று உடை உடனடியாகக் கொடுத்துதவிய உறுப்பினர் தேவிகாவை ஈரநெஞ்சம் அமைப்பு பாராட்டுகிறது .

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (151/2013)
ஈர நெஞ்சம்

Kattur Police Station informed Eera Nenjam about a old lady, aged around 80, had been living on streets for months without anyone and requested us to help her to get admitted in any home. We got her admitted in Coimbatore Corporation Home on 18/03/2013. Eera Nenjam appreciates the timely help of its volunteer Ms. Devika who provided dress for the old lady who she did not have any extra dress to change,

~ Thanks (151/2013)
Eera Nenjam


Wednesday, March 20, 2013

மனநிலை பாதித்தவருக்கு அடைக்கலம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

(19/03/13) கோவை வ. உ. சி. பூங்கா அருகில் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அகோரமான உருவத்துடன் சுற்றித் திரிந்த திரு. சுப்பிரமணி என்பவரைக் கண்ட ஈர நெஞ்சம் அமைப்பினர் அவருக்கு முடி திருத்தி உடல் சுத்தம் செய்து புதிய உடை அணிவித்து கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்து அவருக்கு புனர் வாழ்வு அளித்துள்ளனர்.
ஈர நெஞ்சம் அமைப்பு அவருக்கு உடல் சுத்தம் செய்வதை கண்ட அப்பகுதியில் துணிக்கடை வைத்துள்ள திரு. ராஜேஷ் என்னும் மனித நேயம் மிக்க நண்பர் . அவர் திரு சுப்பிரமணிக்கு மாற்று உடை வழங்கி உதவி செய்தார். அவருக்கு ஈர நெஞ்சம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது .

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (149/2013)
ஈர நெஞ்சம்

Eera Nenjam volunteers found Mr. Subramani, being mentally challenged, today (19/03/2013) near V. O. C. Park, Coimbatore and then gave him a haircut, a bath and new clothers and also got him admitted in Coimbatore Corporation Home. Mr. Rajesh who has a textile store in that area, after seeing our volunteers’ service, donated new clothes to Mr. Subramani. Eera Nenjam appreciates his help.

~ Thanks (149/2013)
Eera Nenjam

Thursday, February 21, 2013

மனிதம் மரித்துப் போகக்கூடாது



********பரிதாபம் இப்படி ஒரு நிலை வரக்கூடாது, அப்படி யாருக்கும் வந்தாலும் அதற்க்கு நாம் தான் பொறுப்பு*******

வட மாநில மக்கள் தமிழ் நாட்டில் உள்ள சாலையில் அதிகமாக காணப்பட காரணம் , பொதுவாக வட மாநிலங்களில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பகமோ அல்லது சமூக அமைப்புகளோ குறைவு , அதனால் அங்குள்ள பொது மக்களுக்கு விழிப்புணர்வு மிக குறைவாக உள்ளது , இதனால் அங்கு அவர்களை பராமரிப்பதற்கு சிரமப்பட்டுக்கொண்டு தமிழகம் வரும் இரயில்களில் அவர்களை ஏற்றிவிடுகிறார்கள் இதனால் தமிழகத்தில் உள்ள சாலைகளில் அநேகமாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அல்லது ஆதரவற்றவர்கள் வடநாட்டவர்களே காணப்படுகிறார்கள் , அதுமட்டும் இல்லாமல் வடநாட்டில் உள்ள இளைஞர்கள் பிழைப்பு தேடி தமிழகம் வருகிறார்கள் அவர்களுக்கும் போதிய பாதுகாப்பு இல்லாதமையால் மன அழுத்தம் தாளாமல் அவர்களுக்கு மனநிலை பாதிப்புக்குள்ளாகிறார்கள் , அதனால் அவர்கள் தமது சொந்த ஊர் செல்ல வழிதெரியாமல் சாலையிலேயே திரிகிறார்கள் ,

இப்படிப்பட்ட பரிதாப மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய பொது மக்களுக்கு அக்கறை அதிகம் உள்ளது , அதில் எந்த சந்தேகமும் இல்லை , ஆனால் அவர்களுக்கு எப்படி உதவுவது என்பதுதான் தெரிவது இல்லை , இப்படிப்பட்டவர்களுக்கு பொது மக்கள் பரிதாபப்பட்டு அவர்களிடம் தம் கையில் உள்ள பணத்தையோ காசையோ அல்லது பொருளையோ அவர்களின் கையில் கொடுத்து விடுகிறார்கள் . அவர்களுக்கு பணம் பொருள் என்றாலே என்ன என்பது தெரிவது இல்லை , எதோ காகிதம் போல கிழித்து எறிந்துவிட்டு போய்விடுகிறார்கள்.

இவர்களுக்கு முக்கியமாக தேவைபடுவது நல்ல அன்பும் அரவணைப்பும் பாதுகாப்பும் மட்டுமே இதனை கருத்தில் கொண்டு கோவையில் இதற்க்கு முன் இருந்த ஆணையாளர் அன்சுல் மிஸ்ரா ஆணையின்படி மாநகராட்சி காப்பகங்கள் துவக்கி அதில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் , ஆதரவற்றவர்கள் என பரிதாப மக்கள் அங்கு சேர்க்கப்பட்டார்கள். மேலும் பல சமூக அமைப்புகள் ஆதரவற்றவர்களை பாதுகாக்கும் வகையில் முன் வந்து பாதுகாப்பான காப்பகங்களில் சேர்த்து வருகிறார்கள் , மேலும் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பவர்களை சமூக அமைப்புகள் உதவுவதற்காக அவர்கள் அருகில் செல்லும் சமயம் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பயத்தில் ஓடுவார்கள் அப்படி ஓடும் போது விபத்துகள் நேர்ந்து விடும், அதனால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அணுக சமூக அமைப்புகள் அச்சம் காட்டுகிறார்கள் , அப்படி ஆதரவற்றவர்களுக்கு உதவும் சமூக அமைப்புகளுக்கு அரசாங்கமோ அல்லது மாநகராட்சியோ நல்லதொரு அங்கிகாரம் கொடுக்கும் பட்சத்தில் . இப்படிப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் கிடக்கும் அப்பாவி மக்கள்களை பாதுகாப்பான இடங்களில் அந்த அமைப்புகள் சேர்க்கவும் அல்லது பாதுகாப்பு கொடுக்கவும் ஆர்வத்துடனும் பொறுப்புடனும் முன்வருவார்கள் .

~மகேந்திரன்

Sunday, February 10, 2013

ஆதரவற்ற மூதாட்டிக்கு ஆதரவு

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

கோவை உடையாம் பாளையம்பகுதியில் சுமார் 90 மூதாட்டி ஒருவர் கடந்த 5 மாதமாக நடக்க கூட முடியாமல் ஆதரவற்ற நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் ஈர நெஞ்சம் அமைப்பிற்கு அளித்த தகவலின் பேரில் இன்று (08/02/2013) அந்த மூதாட்டியை கோவை மாநகராட்சி காப்பகத்தில் அனுமதிக்கேட்டு ஈரநெஞ்சம் அமைப்பு அங்கு சேர்த்துள்ளது .

இந்த மூதாட்டியை ஈரநெஞ்சம் அமைப்பு அழைத்து செல்லும் நிகழ்ச்சியை லோட்டஸ் தொலைக்காட்சி மற்றும் கேப்டன் தொலைக்காட்சி நேரடியாக பதிவு செய்து அதை செய்தியில் ஒளிபரப்பி மக்களின் மனதில் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தியமைக்கு, ஈரநெஞ்சம் அமைப்பு பொதுமக்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.

http://youtu.be/WS1ic327uoA

~ நன்றி (140/2013)
ஈரநெஞ்சம்

90 years old orphan lady who was staying at Udayampalayam was not able to walk for past 5 months. Well wishers from that area informed about her to Eeranenjam Trust. 08/02/13 Eeraneanjam admitted her in Corporation home.
Lotus TV telecasted this incident live to public to create awareness among public. Eeraneanjam extends heartfelt thanks to Lotus TV.

~Thanks (140/2013)
EERANENJAM

Monday, June 25, 2012

ஆதரவற்ற சிறந்த மாணவர்களுக்கு ஊக்கதொகை

நண்பர்களே வருகின்ற 30/06/2012 சனிக்கிழமை ஈரநெஞ்சம் சார்பாக கோவை மாவட்ட  பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பிரபஞ்ச அமைதி சேவா ஆசரமம் இணைந்து  ஆதரவற்ற குழந்தைகளை மையமாக கொண்டு சுமார் முன்னூறுக்கும் மேற்ப்பட்ட  குழந்தைகளுக்கு , அதாவது பதினைந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் கோவை கருமத்தம் பட்டி அருகே உள்ள பதுவம்பள்ளியில் பிரபஞ்ச அமைதி சேவா ஆசரமம் என்னும் இடத்தில  நடத்த உள்ளது ,
மற்றும் தமிழகத்தில் உள்ள ஆதரவற்ற காப்பகங்களில் 10th, 12th தேர்வு எழுதி அதிக மதிப்பெண் எடுத்துள்ள ஆதரவற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் மற்றும்  நற்சான்றிதழும் வழங்கும் பணி துவங்க உள்ளது. அது சமையம் ஈரநெஞ்சம் , தாங்கள் மற்றும் தங்களது நண்பர்களின் ஆதரவையும் நாடுகிறோம் , அனைவரையும் அழைக்கிறோம் அனைவரும் வாருங்கள்....
தொடர்புக்கு ~ஈரநெஞ்சம் 9843344991