குப்பைத் தொட்டி !?!?
அந்த ஊருல இருபது பேர் கொண்ட ஒரு முதியோர் காப்பகம் இருந்தது ...
காலை விடிந்தது வயோதிகம் நிறைந்த முகங்கள், பசி படர்ந்த வயிறு வாடிய தோற்றம் விருந்தினர் உணவை எதிர்பார்த்து எதிர்பார்த்து மணி 11 தாண்டியது...
ஒரு சிலர் பகட்டுடை உடுத்து காப்பகத்திற்கு வந்தனர் யார் நிர்வாகம் என்றனர், வெளிநாட்டு உதவியா என்றனர், யாருடைய உதவி, என்ன நோக்கம் என்று இன்னும் பல கேள்விகள் கேட்டனர். வயிறு நிறைய பசி மட்டுமே இருந்தும் எல்லாவற்றிற்கும் பணிந்த குரலில் பதில் தந்தனர்...
சந்தேகங்கள் தெளிவானதும் பழைய துணி இருக்கிறது எடுத்துக் கொள்ளுங்கள் என்று கொண்டுவந்த மூட்டையாக கட்டிய துணியை தானம் செய்து கிளம்பினர்...
உள்ளே ஒரு வயதான பாட்டி வாடிய குரலில் " அப்போ அவங்க சாப்பாடு கொடுக்க வரலையா " என்று முனங்கியது...
காலை பசி தாண்டி மதிய பசி வேளை வந்தது...
பசி மயக்கத்தில் இருந்த முதியவர்களை தேடி மற்றும் சிலர் வந்தார்கள் ...
அவர்களும் அதே கேள்விகளை வெவ்வேறு விதமாகக் கேட்டு விசாரணைக்கு பிறகு , காலையில் சமைத்த உணவு 10 பேருக்கு மீதம் இருக்கும் அதை கொடுக்க வந்தோம் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று தானம் செய்து விட்டு கிளம்பினர். நல்ல வேளை உணவு கெடாமல் இருந்தது அதை இருபது பேரும் பங்கிட்டு தங்களது பாதி வயிற்றை நிறைத்தனர்...
மாலை வந்தது ஒரு குடும்பம் வந்தது , அவர்களும் முன்பு வந்தவர்கள் கேட்ட கேள்வியை காட்டிலும் இன்னும் கூடுதலாக தங்களை தெளிவு படுத்திக் கொள்ள பல விளக்கங்களை கேட்டு விட்டு முடிவில் , தங்கள் வீட்டுக்கருகில் இருக்கும் ஒரு பாட்டியை தங்கள் காப்பகத்தில் சேர்க்க வந்துள்ளோம் இங்கே இலவசமாக பார்த்துக் கொள்வதாக கேள்விப்பட்டோம் ஆதரவற்ற பாட்டியை பராமரிக்க சொந்தமென்று யாருமில்லை என்று கூறி மூன்று தலை முறை கண்ட முப்பது சொந்தங்களுக்கு சொந்தக்காரியை சொந்தங்களே காப்பகத்தில் விட்டு சென்றனர்.
முதிய வயதில் புதிய தோழிகள் கிடைத்த மன ஆறுதலில் தன் கதையைப் பகிர்ந்து சோகத்தை ஓரளவு கரைத்துக் கொண்டது அந்த புது பாட்டி.
சற்று நேரத்தில் ஒரு தம்பதியினர் வந்தார்கள் தங்கள் குழந்தைக்கு இந்த தேதியில் பிறந்தநாள் வருகிறது, அதனால் ஊரில் உள்ள பெரிய ஹோட்டலில் உயர்தர உணவுக்கு ஏற்பாடு செய்கிறோம் என்றனர். ஆனால் வயோதிகத்திற்கு அந்த உணவு ஏற்காது வேறு ஏதாவது என்று வேண்டுகோள் முன் வைக்க . நாங்கள் வேறு இடம் செல்கிறோம் என்று வருத்தத்தில் விடை பெற்றனர்.
இரவு பசி வேளை வந்தது கூடவே கூடுதலாக பசியும். கூட..
கண் உறங்குவதற்கு முன் வாசலில் ஒரு வாகனம் வந்தது அதில் இருந்து வந்தவர்கள் திருமண விழாவில் 50 பேர் சாப்பிடும் அளவிற்கு உணவு மீதியாகி விட்டது அதை கொடுக்க வந்துள்ளோம் என்று சொல்லி முடிப்பதற்குள் , பசி முந்திக் கொண்டு வாய் திறந்து கண்டிப்பாக ஏற்றுக் கொள்கிறோம் என்று அந்த உணவை பெற்றுக் கொண்டது.
கல்யாண வீட்டில் சாப்பாடு மதியம் செய்தது போல சாதம் தவிர மற்ற பதார்த்தங்கள் எல்லாம் கெட்டுப்போய் லேசான வாடையால் காட்டிக் கொடுத்தது , பதார்த்தங்களை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, வெறும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி கரைத்து காப்பகத்தில் உள்ள 21 பேரும் குடித்து விட்டு அன்றைய பொழுதை நிறைவு செய்தனர். அடுத்த நாள் காலையுணவுக்கு மீந்து போன சாதம் இருக்கும் நிம்மதியுணர்வுடன் அனைவரும் உறங்க சென்றனர்.
முதல் நாள் வந்த கந்தல் துணியோடும், மீதம் இருந்த கல்யாண வீட்டு கஞ்சியோடும் விடியலுக்காக காத்திருந்தது அந்த காப்பகம்..!!!
தங்கள் வீடுகளில் தேவையில்லாத குப்பையாக கருதிய முதியவர்களை , காப்பகத்தை குப்பைத் தொட்டியாக எண்ணி விட்டுச் செல்லும் நபர்களுக்கு தெரிவதில்லை தாங்கள் விட்டுச் செல்வது முதிய உறவினரை அல்ல "அனுபவம் உரைக்கும் நூல்" என்றும்... முதியோர் காப்பகங்கள் எல்லாம் குப்பைத் தொட்டிகள் அல்ல, "பல்கலைக்கழக நூலகங்கள்" என்பதும்...
~மகேந்திரன்










![Photo: ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(244/21-12-2013)
21/12/2013 கோவை, சுந்தராபுரம் பகுதியில் 90வயது மதிக்கத்தக்க தங்கம்மாள் என்பவர் பல வருடமாக சாலையில் வசித்துவந்தார் , பொதுமக்கள் மூதாட்டிக்கு உணவும் மற்றும் உதவியும் செய்துவந்தனர் , தற்சமையம் குளிர்காலமாக இருப்பதனால் மிகவும் அவதிப்பட்டு வந்தார், இதனை அறிந்த அப்பகுதிவாழ் மக்கள் ஈரநெஞ்சம் அமைபிற்கு தொடர்புகொண்டு தங்கம்மாள் பாட்டிக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தனர் , அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பினர் அந்த தங்கம்மாள் பாட்டியை தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துவந்து கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்கள்.
மேலும் தங்கம்மாள் பாட்டி கூறும்போது தனக்கு யாரும் இல்லை என்றும் பலவருடமாக இந்த பகுதியில் தான் குப்பைகளை போருக்கு விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்துவந்ததாகவும். இப்போது வயதாகிவிட்டதால் இந்த பகுதி மக்களிடம் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்ததாகவும் கூறினார்.
~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam
Thangammal age about 90yrs has been living on the streets of Coimbatore Suntharapuram area for many years. The public used to provide food and help her. She struggled a lot because now it is a cold season. After noticing her struggle the public contacted Eera Nenjam and requested them to assist Thangammal Paati. Following that today 21.12.2013 Eera Nenjam rescued Thamgammal Paati and brought her to Coimbatore City Corporation home by ambulance and admited her at the home. When Thangammal Paati spoke about her background, she mentioned that she has no one to go to and survived these years by selling stuff from the waste. Now that she got old she survived by begging.
Once again Eera Nenjam is pleased about the fact that it rescued another homeless needy person and made a little difference. Eera Nenjam also want to share this information with you.
~Thank You
Eera Nenjam](https://m.ak.fbcdn.net/sphotos-d.ak/hphotos-ak-frc3/p480x480/1472740_292611600863802_1429652731_n.jpg)
![Photo: Eera Nenjam Charity
''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
****** [For English version, please scroll down]
(237/27-11-2013)
26.11.13 அன்று முகநூலில் ஈரநெஞ்சம் அமைப்பு கொடுத்த தகவலை தொடர்ந்து லட்சுமி அம்மாள் பாட்டியின் பேரன் சிவகுமார் அவர்களின் தொடர்பு கிடைத்தது.
https://www.facebook.com/photo.php?fbid=494572107306877&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater
அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பினர் சிவகுமார் அவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தவுடன் சிவக்குமார் 27-11-2013 இன்று கோவை வந்தார். அவரிடம் லட்சுமி அம்மாள் ஒப்படைக்கப்பட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம். சிவகுமார் கூறுகையில் தனது பாட்டி தூத்துக்குடியில் 30.09.13 அன்று காணமல் போனதாகவும். அவரை பற்றி காவல் துறையில் தகவல் கொடுத்து கடந்த ஒரு மாதமாக தேடி வருவதாகவும் தெரிவித்தார். பிரிந்த தனது பாட்டியை மீட்டு தந்த ஈரநெஞ்சம் அமைப்பிற்கு அவர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். அவரை அவரது குடும்பத்தினருடன் சேர்க்கவும் உதவிய அனைத்து நண்பர்களுக்கும் ஈரநெஞ்சம் சார்பில் நன்றிகள்.
மீண்டும் ஒரு உறவை சேர்த்து வைத்ததில் ஈரநெஞ்சம் மகிழ்ச்சியடைகிறது.
~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam
On 26-11-13, Eeranenjam's post in Facebook as Mrs. Lakshmiammal's detail, we came to know about his grand son Mr. Sivakuamr. As soon as Eeranenjam contacted and let him know about Mrs. Lakshmiammal. He came to Coimbatore and taken care of her. He told that she was missed in Thoothukudi on 30-10-2013 and they registered a complaint in police and searched her for a month. He told thanks to Eeranenjam to rescue his Grandmother. We thank you all who are helped to collect the details and rescue her. Eeraemjam feels happy to join one more person with family.
~thank you.
Eera Nenjam Charity](https://m.ak.fbcdn.net/sphotos-h.ak/hphotos-ak-prn2/p480x480/1441297_534091913352866_119186947_n.jpg)
![Photo: ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(165/2013)
கோவை உப்புளி பாளையம் பகுதியில் வயதான சுசிலா என்னும் சுமார் 80 வயதான மூதாட்டி ஒருவர் ஆதரவு இல்லாமல் மயங்கிய நிலையில் உண்பதற்கு உணவும் கிடைக்காமல் சாலையிலேயே பல நாட்களாக இருப்பதை கண்டு ஈரநெஞ்சம் , B4 காவல் நிலையம் அனுமதியுடன் அவரை 04/06/2013 அன்று கோவை மாநகராட்சி காப்பகத்தில் ஈரநெஞ்சம் அமைபினரால் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர் யார் என்ன விபரம் என தெரியவில்லை இவரைப்பற்றிய தகவல் உங்களுக்கு தெரிந்தால் ஈரநெஞ்சம் 9843344991 என்ற எண்ணுக்கு தகவல் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
https://www.facebook.com/eeranenjam
~ நன்றி
ஈர நெஞ்சம்
An old desolate woman of age 80, named Suseela was found on the roadside of uppilipalayam in kovai in very bad health condition even without having food to eat for many days. On knowing this Eeranenjam trust, with the permission of B4 police station took her to the corporation maintained trust on 04/06/2013 and entrusted her there. There is no information about this respected old woman.
If anyone knows any information about her kindly call the Eera nenjam trust in the number 9843344991.
~Thank you.
EERANENJAM](https://m.ak.fbcdn.net/sphotos-g.ak/hphotos-ak-prn2/p480x480/970998_421080794656009_1268968840_n.jpg)




உதவி புரிந்த பத்திர்க்கை துறை
நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.





