Showing posts with label ஆதரவற்றவர். Show all posts
Showing posts with label ஆதரவற்றவர். Show all posts

Sunday, April 05, 2015

ஒருவருட முயற்சிக்கு பிறகு மேற்கு வங்க வாலிபரை அவரது உறவினருடன் ஒப்படைப்பு.

கடந்த வருடம் 19/04/2014 அன்று கோவை ரயில் நிலையத்தில் இருந்து ரயில்வே காவலர் மூலமாக பிரதீப் 23 மனநிலை சரி இல்லாத நிலையில் மீட்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்தனர்.






மனநிலை பாதித்த நிலையில் பிரதீப்
அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அறக்கட்டளை பிரதீப் பிடம் விசாரித்து பல தகவல்கள் சேகரித்து அவருடைய உறவினர்களை தேடும் முயற்சியுடன் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் முயற்சியையும் மேற்கொண்டது. https://www.facebook.com/photo.php?fbid=345269842264644&set=pb.100003448945950.-2207520000.1428237057.&type=3&theater சுமார் ஒருவருடமாக ஈரநெஞ்சம் அறக்கட்டளை மேற்கொண்ட பெரும் முயற்சியின் பயனாக பிரதீப்பிற்கு உடல் நலனும் தேறியது . அதோடு அவரது உறவினர் முகவரியும் கண்டுபிடிக்கப்பட்டது மேற்கு வங்காளம் பீர்பாரா ( Birpara ) பக்கத்தில் ராம்தாலா (ராம்ராஜ்தாலா) என்னும் பகுதியில் உள்ள டீ எஸ்டேட் கம்பெனிகளுக்கு பிரதீப் பற்றிய தகவல்கள் தொடர்ந்து மெயில் மூலம் அனுப்பப்பட்டு வந்தது . இதனைக் கவனித்த சில கம்பெனிகள் பிரதீப்பின் புகைப்படத்துடன் அந்த ஊர் பகுதியில் உள்ள சுவர்களில் நோட்டிசாக ஒட்டி பிரதீப்பின் உறவை தேடும் முயற்சியில் அவர்களும் ஈரநெஞ்சம் அறக்கட்டளையோடு கைக் கோர்த்தனர். அதன் மூலம் பிரதீப்பின் உறவினர்கள் ஈரநெஞ்சம் அறக்கட்டளையைத் தொடர்பு கொண்டனர் . உறவினர்கள் கிடைத்துவிட்டார்கள் என்ற மகிழ்ச்சி அடைந்தாலும் கூட அவர்கள் அதிக வெளியுலக வாழ்க்கை அறியாதவர்கள் . ஆதலால் அவர்களிடம் பிரதீப் பற்றி கூறியதில் அவர்களுக்கு கோவை பற்றியும், இந்த ஊர் எங்கு உள்ளது என்பது பற்றியும் அவர்களுக்கு விளங்கவில்லை . அவர்கள் படிப்பறிவும் போதிய வெளி உலக வாழ்க்கையும் அறியாதவர்கள் போன்று தெரிந்தது . இதனால் பிரதீப்பின் உறவினர்களை கோவைக்கு வரவழைப்பத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு வந்தது. ஈரநெஞ்சம் அறக்கட்டளை தொடர்ந்து பிரதீப்பை அவர்களது உறவினர்களுடன் ஒப்படைக்கும் முயற்சியை மேற்கொண்டு வந்தது . இதன் பலனாக கடந்த வாரத்தில் பிரதீப்பின் சகோதரர் மார்டின் என்பவர் தொடர்பில் கிடைத்தார் . அவரிடம் விபரத்தை சொன்னதும் தம்பியை அழைத்து செல்ல உடனடியாக இன்று கோவைக்கு வந்தார் . பிரதீப் அவரை சந்தித்ததும் ஆனந்த கண்ணீர் மல்க தொலைத்த உறவை கண்முன் கண்டதும் கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது நம்மையும் கலங்கவைத்துவிட்டது. பிரதீப்பின் சகோதரர் மார்டின் கூறும்போது " கேரளாவில் என்னோடு தான் பிரதீப் வேலைப் பார்த்து வந்தான். கடந்த வருடம் விடுமுறைக்கு ஊருக்கு செல்வதாக சொல்லிக் கொண்டு சென்றவன் வீடு போய் சேரவில்லை. அலைபேசி வசதி எங்கள் ஊரில் சரிவர இல்லாததால் இவன் காணாமல் போனதும் எனக்கு தெரியாது கடந்த மாதம் நான் விடுமுறைக்கு ஊருக்கு போனபோதுதான் பிரதீப் அங்கு வரவில்லை என்பது தெரியவந்தது. எனது பெற்றோர்களிடம் ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர் பிரதீப் பற்றி அவ்வப்போது பக்கத்து வீட்டினரின் அலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவார்கள். ஆனால் எங்கிருந்து பேசுகிறார்கள் என்பது தெளிவாக என் பெற்றோருக்கு புரியவில்லை . என்னிடத்திலும் தகவல் தெரிவிக்க முடியாத நிலை அதனால் தான் தகவல் தெரிவிக்க வில்லை என்றும் கூறினார்கள் . பிரதீப்பை எப்படி கண்டுபிடிப்பது என்ற கவலையில் இருந்த போதுதான், கடந்தவாரம் மீண்டும் பக்கத்து வீட்டிற்கு அலைபேசியில் ஈரநெஞ்சம் என்று சொல்லி பிரதீப் பற்றி கூறினார்கள் . அதனாலேயே பிரதீப் இருக்கும் இடம் தெரிந்து உடனடியாக தம்பியை அழைத்து செல்ல வந்தேன் " என்றார்.



குணமடைந்த பிரதீப்

பிரதீப் கூறும் பொழுது " நான் எந்த நிலையில் இங்கு வந்தேன் என்று எனக்கு இதுவரை தெரியாது . ஆனால் இங்கு எனக்கு அன்பும் அனுசரணையும் அதிகம் கிடைத்தது . இங்கு உள்ள முதியோர்களை பார்த்துக் கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது இங்கு உள்ள சேவையைக் கண்டு மெய் சிலிர்த்து போனேன். அதனாலேயே இவர்களை விட்டுப் பிரிய மனம் இல்லை. என்னை முழுமனிதனாக மாற்றி உறவினர்களுடன் இணைத்து வைக்க ஈரநெஞ்சம் அறக்கட்டளை மற்றும் மாநகராட்சி காப்பக நிர்வாகிகள் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு நான் பெரிதும் கடமைப்பட்டு இருக்கிறேன் . இங்கு இருந்ததில் நான் தமிழும் நன்கு கற்றுக் கொண்டேன். இப்போது நான் மகிழ்ச்சியாக அண்ணனுடன் ஊர் செல்கிறேன் " என்று சொல்லிக் கிளம்பினார்.


பிரதீப் அவர்களை அவரது உறவினருடன் சேர்த்துவைக்க உதவிய அணைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் . ~ஈரநெஞ்சம்

Tuesday, February 24, 2015

கலெக்டர் அலுவலகம் முன் கால் அழுகிய நிலையில்

ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services .
****************************************************************
( 410 / 29-01-2015 )
கடந்த 26-01-2015 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்து கால்கள் பாதிக்கப்பட்டு அழுகிய நிலையில் இருந்த திரு. நாகராஜ் அன்பவர் ஈரநெஞ்சம் அறக்கட்டளையால் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.
அவருக்கு உடன் இருக்க உறவினர்கள் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலை இருந்தது. இந்நிலையில் அவரது நிலை குறித்த தகவல் அறிந்த தாயார் திடீரென மயக்கம் போட்டு விழுவிட்டார் என்றும் தன மகனை நீங்களே அனுப்பி வைக்க உதவுமாறும் நாகராஜின் தந்தை கேட்டுக் கொண்டார். எனவே ஈரநெஞ்சம் அறக்கட்டளை மூலம் அவசர சிகிச்சை ஊர்தி மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார். எனினும் மனது கேட்காமல் அவரது தந்தை பாதி வழியிலேயே வந்து உடன் அழைத்துக் கொண்டு சென்றார். அங்கு தேனீ மாவட்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டு இருப்பதாகவும் ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கு தகவல் தெரிவித்தார். அவரது உடல்நிலை விரைவில் நல்ல முறையில் தேறி நலம் பெற வேண்டும் என்று ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பில் பிரார்த்தித்துக் கொள்கிறோம்.
நன்றி
ஈரநெஞ்சம்
Coimbatore, in front of collect office Mr. Nagaraj, who was rescued by Eeranenjam on 26-1-2015 and admitted in Coimbatore Governement. As he has no relation to take care of him, he was unable to proceed treatment.
In this situation Eeranenjam trust informed about him with his family. Suddenly his mother was affected physically and unconscious. So his father requested us to send his son safely. So, Eeranenjam trust arranged an ambulance to take him to his native. Even though his father came in middle of his journey and take care of him. Also his father informed that Mr. Nagaraj was admitted in Theni Government Hospital for treatment. Wwe pray for his health and get well soon.
Thanks
Eeranenjam Trust.





Thursday, October 23, 2014

ஈரநெஞ்சம் கொண்டாடிய தீபாவளி

" ஈரநெஞ்சம் கொண்டாடிய தீபாவளி "
ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services
***********************************************************
(370 / 21-10-2014)




கோவை சிங்கநல்லூர் அருகே நீலிக்கோணாம்பாளையம் என்னும் இடத்தில் சண்முகம் ( 58 ) என்பவர் கண் தெரியாதவராக இருக்கும் காரணத்தால் பத்து வருடங்களாக குடும்பத்தாரால் புறக்கணிக்கப்பட்டு கழிவுநீர் கால்வாய் ஓரமாக இத்தனை நாளும் இருந்திருக்கிறார் . அவரைப் பற்றி மனோன்மணி என்னும் பெண் ஈரநெஞ்சம் அமைப்புக்கு தகவல் தெரிவித்தார். அனைவரும் தீபாவளி கொண்டாடும் நேரம் அவர் இப்படி இருப்பது மனதுக்கு கஷ்டமாக இருப்பதாகவும் தெரிவித்தார் . அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற ஈரநெஞ்சம் அமைப்பினர் , அந்த பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் சண்முகத்தை அங்கேயே குளிக்க வைத்து , பொதுமக்கள் முன்னிலையில் அவரை தீபாவளி கொண்டாட வைக்க முடிவெடுத்தனர் . அதனைக் கண்ட பொதுமக்கள் அவர்களாகவே அவருக்கு உடுத்த புதிய துணி வாங்கி கொடுத்தனர் .பின்னர் சாப்பிட தீபாவளி பலகாரம் கொடுத்தனர் . பின்னர் அங்கிருக்கும் குழந்தைகள் முன்னிலையில் அவருக்காக பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடி அங்கிருக்கும் மக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களையும் நமது ஈரநெஞ்சம் அமைப்பு தெரிவித்துக்கொண்டது ...





பின்னர் கோவை மாநகராட்சி தங்கும் விடுதியில் அனுமதி கேட்டு அங்கு சண்முகம் அவர்களை பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார் . "




" சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம் பிறரை மகிழ்வித்துப் பார்ப்பது தான் " ; அந்த வகையில் சண்முகம் அவர்களை மகிழ்வித்ததில் ஈரநெஞ்சம் அமைப்பு பெருமிதம் கொள்கிறது . அதில் பொதுமக்களும் கலந்து கொண்டது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது ...
ஈரநெஞ்சம் அமைப்பிற்கு இந்த தீபாவளி மறக்கமுடியாத தீபாவளி !!!
~ஈரநெஞ்சம்.
https://www.facebook.com/eeranenjam

Tuesday, June 17, 2014

சென்னையில் ஒரு நாள் ஈரநெஞ்சம்

ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ****************
(320/13-06-2014)

சென்னை மயிலாப்பூர் , ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள Yellow Pages பேருந்து நிறுத்தத்தில் ,நேற்று 13/06/2014 சுமார் 60 வயதுடைய சென்னை பட்டினபாக்கத்தை சேர்ந்த தனமாலையா ஜீனத் பேகம் ஆதரவற்ற மனநிலை பாதித்த பெண் வலது கால் புண்ணாகி அழுகிய நிலையில் படுத்திருப்பதை பார்த்த நம் ஈர நெஞ்சம் அமைப்பின் உறுப்பினர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து வரவழைத்து அந்த ஆம்புலன்சிலேயே அவர்களுடன் சென்று ராயபேட்டை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார் .

கோவையை சேர்ந்த அவர் சென்னை தெரியாத ஊர் நமக்கென்ன என்று விடாமல் அந்த பெண்ணின் மேல் கருணை கொண்டு மருத்துவமனை வரை சென்று சேர்த்ததை தபார்த் மருத்துவர்கள் அவரை பாராட்டினர் . அவரது மனித நேய செயலை நாமும் பாராட்டுவோம் ...

ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

A member of the Eera Nenjam Trust found helpless 60 year old Thanamalaya Jeenath Begam at Chennai, Mayilapur, Radhakrishnan Street beside the Yellow Pages Bus stop. Thanamalaya was mentally ill and had decayed right leg. The trust member immediately called the 108 ambulance service. When they arrived the member also went along with them in the ambulace and admitted the lady at Rayapettai Government Hospital.

The doctors at the hospital praised the trust member for his kind service. The member was from Coimbatore, Chennai was an unfamiliar place for him, but that didn’t stop him from helping the needy person. Let us also praise him and wish him for him being a good humanitarian.

~thank you
Eera Nenjam

Friday, June 06, 2014

பெத்த மனம் பித்து : பிள்ளை மனம் கல்லு ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
(315 / 06-06-2014)"
*********************

02-06-2014 அன்று சுமார் 51 வயதான ஒருவர் கோவை, காந்திபுரம் நகர பேருந்து நிலையம் எதிரில் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார் . அங்கு வந்த ஈரநெஞ்சம் அமைப்பினர் அவரை மீட்டு உடனடியாக அவரை கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்தனர் .

https://www.facebook.com/photo.php?fbid=576204495810304&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater

அவரிடம் ஈரநெஞ்சம் அமைப்பினர் பேசியதில் அவர் தன் பெயர் சதிஷ் என்றும் , தன் ஊர் பாப்பநாயக்கன் பாளையம் என்றும் தெரிவித்தார் . அவருக்கு தாய் தந்தை இருப்பதாக தெரிவித்த அவர் .

மேலும் அவர் " நான் மிகவும் மோசமானவன் சிறு வயது முதல் தீய நண்பர்களின் சகவாசத்தால் குடி மற்றும் போதை பழக்கத்தால் பெரியவர்களை மதிக்காமல் , திருட்டு , சங்கிலி பறிப்பு போன்ற பல களவாணி தனங்கள் செய்து பல பேர் வாழ்க்கையில் விளையாடியிருக்கிறேன் . அவர்களின் வயித்தெரிச்சலும், சாபமும் தான் 15 நாட்களாக இப்படி அசைய கூட முடியாத நிலையில் இருக்கிறேன் . இந்த நிலையில் என்னை பார்த்தால் கூட என் பெற்றோர் என்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் . நான் அவர்களுக்கு அவ்வளவு கஷ்டங்கள் கொடுத்திருக்கிறேன். சிலர் என்னை மருத்துவ மனையில் கொண்டு சேர்த்தனர் . ஆனால் அங்கிருந்தவர்கள் என்னை மீண்டும் வெளியே கொண்டு வந்து விட்டு விட்டனர் . அடுத்தவர்களின் பாவத்தைக் கொட்டிக் கொண்ட எனக்கு ஆண்டவன் கொடுத்த இந்த தண்டனை சரியானது தான் . நான் இப்படியே இந்த நிலையிலேயே இறந்து போனால் கூட பரவாயில்லை " என்று கண்ணீருடன் கூறினார் .

அவர் தன் தவறுக்காக வருந்தி கண்ணீர் விடுவதை கண்ட ஈர நெஞ்சம் அமைப்பினர் அவரை அவரது பெற்றோருடன் சேர்த்து வைத்து விட வேண்டும் என்று விரும்பி அவர்களை நேற்று இரவு 04/06/2014 தொடர்பு கொண்டு பேசினர் . அப்போது பேசிய அவரது அப்பா குபேந்திரன் , தன்னால் இரவில் வரமுடியாது காலையில் வருகிறேன் என்று கூறினார் . அதே போல் இன்று காலை அவர் கோவை மாநகராட்சி காப்பகத்தில் வந்து தன் மகனை சந்தித்து கண்ணீர் விட்டார் ... தந்தையை பார்த்ததும் சதிஷும் கண்ணீர் விட்டு கதறினார் அதை பார்த்து அருகில் இருந்த அமைப்பினரும் மனம் நெகிழ்ந்தனர் .

பின்னர் குபேந்திரன் " நான் இருதய நோயாளி ,என் மனைவி ஜோதி இப்போது உடல் நலமில்லாமல் இருக்கிறார் அதனால் தான் நான் மட்டும் என் மகனை பார்க்க வந்தேன் . இருபது வருடங்களுக்கு முன்னால் இவன் பண்ணாத தப்பே கிடையாது என்று கூறலாம் , இரவில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போலீஸ் வந்து வீட்டுக் கதவை தட்டி இவனை பற்றி விசாரிப்பார்கள் . இவனால் எங்களுக்கு பலவகையிலும் அவமானங்கள் தான்
ஏற்பட்டது . எங்கள் வீட்டில் நடைபெற இருந்த ஒரு திருமணம் கூட இவனால் தடைப் பட்டது ... பல இலட்சங்கள் இவனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது . இவன் வீட்டை விட்டு வெளியேறியதும் போலீஸ் ஸ்டேஷன் போய் சதிஷுக்கும் எங்களுக்கும் இனி எந்த சம்பந்தமும் கிடையாது அவனை தேடி இனி யாரும் எங்கள் வீட்டுக்கு வராதீர்கள் என்று எழுதி கொடுத்து விட்டோம் ... இன்று என் மகனின் இந்த நிலையை பற்றி கேட்டதும் எங்கள் மனம் தாங்கவில்லை நான் அவனை நாளை இங்கிருந்து அழைத்து சென்று வேறு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க போகிறேன் " என்று கண்ணீருக்கு இடையில் கூறினார் .

இதை தான் நம் முன்னோர்கள் ' பெத்த மனம் பித்து : பிள்ளை மனம் கல்லு ' என்று கூறினார்கள் போலும் .

மீண்டும் ஒரு உறவை இணைத்து வைத்ததில் ஈர நெஞ்சம் மகிழ்கிறது .

நன்றி
~ஈரநெஞ்சம்

On 02.06.2014 there was a 51 year old man with poor health found opposite to the Gandhipuram bus station in Coimbatore. The members of the Eera Nenjam Trust rescued him and admitted at the Coimbatore City Corporation Home.

When the members spoke to him, he mentioned in tears that his name was Sathish, he was from Pappanayakkan Palayam and he had both parents. He also said that “I am an evil person. Since I was small, with the bad friendship I got used to alcohol and drugs. I never respected the grownups, played evil games with people by breaking gold chains, and doing other robberies. I think it is the curse and the suffering of the people that I am in this bad situation and not being moved myself for the past 15 days. My parents won’t accept me in this terrible situation. I gave them a lot of hardship. Some people admitted me at the hospital, but people at the hospital sent me out. It is right for God to punish me like this for doing sins for other people. I won’t mind suffering like this and later die in this situation.”

When the members saw him realizing his mistakes and being in tears, they liked to reunite him with his parents. They contacted his parents and talked to them last night 04.06.2014. His father Kubendran said that he was unable to travel in the night and will arrive in the morning. As he said, this morning he came to the Coimbatore City Corporation Home and was in tears when he saw his son. Sathish also cried when he saw his father, this made the hearts of the trust members of the trust melt.

Kubendran said in tears “ I am a heart patient, now my wife Jothy is not well because that I came alone to see my son. 20 years ago there was no bad things being left without him doing them. The police came any night knocking on the door to inquire about his whereabouts. He brought a lot of shame onto us. He made us loose several lacks of money. When he left home, we went to the police station and gave a report saying that we have no connection with Sathish and never come looking for him to our door step. Today when I heard the situation of my son we couldn’t bare it. I am going to bring him with me tomorrow and admit him in another hospital for treatment.”

This was why our ancestors said “ parents hearts are soft and the children's hearts made of rock”.

The Eera Nenjam Trust is very pleased about the fact that they managed to reunite another needy individual back with their family and is happy to share that with you all.

~thank you
Eera Nenjam

Tuesday, April 22, 2014

நூறு வயதான பாட்டி நான்குமாதங்களுக்கு பிறகு உறவினர்களுடன்.

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ******
(296/22-04-2014)
கோவை மேட்டுப்பாளையம் ரோடு துடியலூர் பேருந்து நிலையம் பகுதியில் இன்று 16/04/2014 சுமார் 100 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் காலை முதல் நடக்க முடியாமலும் பேசமுடியாமலும் , பார்வையற்ற நிலையிலும் சாலையின் ஓரமாகப் பரிதாபநிலையில் இருப்பதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஈரநெஞ்சம் அமைப்புடன் இணைந்து கோவை மாநகராட்சி காப்பகத்தில் பாதுகாப்பிற்காகச் சேர்த்தனர்.
அதனைத் தொடர்ந்து காப்பகத்தின் பராமரிப்பில் இருக்கும் அந்தப் பாட்டியின் உடல்நலம் நல்லமுறையில் முன்னேற்றம் கண்டது . இதனைக் கண்ட ஈரநெஞ்சம் அமைப்பினர் அந்தப் பாட்டியின் உறவினரை கண்டறிய பெரும் முயற்சி எடுத்தது.
https://www.facebook.com/photo.php?fbid=555256837905070&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theaterஅதன் பயனாக 20/04/2014 அன்று பாட்டியின் உறவினர்கள் பாண்டிச்சேரி அருகில் உள்ள சித்தலம் பட்டு என்ற இடத்தில இருப்பதை ஈரநெஞ்சம் அமைப்பினர் கண்டு கண்டறிந்து அவர்களிடம் பாட்டியை பற்றி விபரம் கூறியதும் அவர்கள் பாட்டியின் பெயர் ஆண்டாய் அம்மாள் என்பதை உறுதிபடுத்திப் பாட்டியின் அக்காள் மகனான சுப்பிரமணி மற்றும் அவரது மகன் வைத்தியநாதனும் கோவைக்கு 21/04/2014 அன்று விரைந்து வந்தனர் . அவர்களிடம் ஆண்டாய் அம்மாளை ஈரநெஞ்சம் அமைப்பினர் ஒப்படைத்தனர் .


இதைப்பற்றி அவர்கள் கூறும்போது ஆண்டாய் அம்மாளுக்கு வயது நூறு என்றும் , நூருவயதானாலும் நல்ல சுறுசுறுப்புடன் இருப்பார் எங்குவேண்டுமானாலும் தனியாகவே சென்றுவருவார் . கடந்த 14/01/2014 பொங்கல் தினத்தன்று வெளியே சென்றவர் வீடுதிரும்பவில்லை நாங்கள் வழக்கம்போல யாராவது உறவினர் வீட்டிற்குச் சென்றிருப்பார் என்று எல்லா இடங்களிலும் தேடி பார்த்துவிட்டோ

ம் கடந்த நான்கு மாதமாகத் தேடாத இடம் இல்லை . பாட்டியை காணாமல் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த வருத்ததுடன் இருந்த நிலையில் நேற்று 20/04/2014 ஈரநெஞ்சம் என்ற அமைபினரால் ஆண்டாய் அம்மாள் கோவையில் இருப்பதை அறிந்து உடனடியாகப் பாட்டியை அழைத்துச் செல்ல வந்துள்ளோம் . பாட்டியை மீடுக்கொடுத ஈரநெஞ்சம் அமைப்பிற்கும் மாநகராட்சி காப்பகத்திற்கும் , ஜனரஞ்சக சேவா ஆசிரமத்திற்கும் மனதார நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறி ஆண்டாய் அம்மாளை அழைத்துச் சென்றனர்.


நண்பர்களே, 16/04/2014 அன்று சாலையில் இருந்து பாட்டியை மீட்பதற்கு முன் , கோவையில் உள்ள சின்னக்கன்னம் புதூர் என்ற இடத்தில உள்ள ஜனரஞ்சக சேவா ஆசிரமத்தில் இரண்டு மாதங்கள் இந்தப் பாட்டி தங்கிருந்ததையும் ஈரநெஞ்சம் அமைப்பினர் கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
அந்தக் காப்பகத்தின் அறக்காவலர் வேங்கடபதி அவர்கள் கூறும்போது ஆண்டாய் அம்மாள் அவரைக் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கோவில் பாளையம் பகுதியில் இருந்து அழைத்துவந்தோம். அதன் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை 13/04/2014 அன்று காலை எங்கள் காப்பகத்தில் இருந்து காணாமல் போய் விட்டார் . நாங்கள் எல்லா இடத்திலும் தேடி கொண்டிருந்தோம் அதன் பிறகு ஈரநெஞ்சம் அமைப்பினர் ஆண்டாய் அம்மாள் எங்கள் பாதுகாப்பில் இருக்கிறார் அவரைப்பற்றி அறிந்து போக வந்தோம் என்று வந்தார்கள். அவர்களிடம் ஆண்டாய் அம்மாள் இங்குத் தங்கி இருந்த இரண்டு மாதங்களில் அவர் பேசுவது சுத்தமாகப் புரியாது ஆனால் நல்ல சுறு சுறுப்பாக இருப்பார் என்றோம் .


ஈரநெஞ்சம் அமைப்பினர் இந்தப் பாட்டி இங்குத் தங்கிருந்ததைக் கண்டு பிடித்ததே பெரும் ஆச்சர்யம் அடைந்தோம் அடுத்தச் சில மணிநேரத்திலேயே பாண்டிச்சேரியில் உறவினர்கள் அவர்களைக் கண்டுபிடிதுவிடோம் அவர்கள் பாட்டியை அழைத்துச் செல்ல வந்துகொண்டு இருக்கிறார்கள் என்றனர் . பெரும் இன்ப அதிர்ச்சி அடைந்துவிட்டோம் ஈரநெஞ்சம் அமைபிற்கு வாழ்த்துக்கள் கூறினார் . பாட்டியை நாங்கள் அழைத்துவரும்போது பாட்டியிடம் 2000 ரூபாய் இருந்தது அதைப் பாட்டியின் உறவினரிடம் ஒப்படைத்து விடுகிறோம் என்று அந்தப் பணத்தை ஒப்படைத்தனர் .


மீண்டும் ஒரு உறவை குடும்பத்தினருடன் இணைத்து வைத்த மகிழ்ச்சியில் ஈரநெஞ்சம் அமைப்பினர்.
நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjamOn 16.04.2014 the general public noticed an elderly woman around 100 years old who was unable to see, speak, and walk. She was lying in hunger by the bus station of Mettupalaiyam Road, Thudiyalur in Coimbatore. The general public and the members of the Eera Nenjam Trust admitted her at the Coimbatore City Corporation Home. While she was under the care of that Charity home, the elderly lady was recovering and there was an improvement in her health.
Noticing the improvement in the elderly lady’s health, the members of the Eera Nenjam Trust took a lot of effort in finding her relatives. From the result of their effort, on 20.04.2014 the members found her relatives in Sithalam Pattu near Pondicheri. When the members of the Eera Nenjam informed them about the elderly lady, they made sure that the elderly lady’s name was Andai Ammal. Her nephew Subramani and his son Vaithiyanathan rushed to reach Coimbatore on 21.04.2014. The members of the Eera Nenjam Trust handed Andai Ammal over to her relatives.


When they spoke about Andai Ammal, they said “she is now 100 years old, but she is too active for someone who is 100yrs. She was able to go wherever she wanted to go and return all by herself. Past 14.04.2014 on the Pongal day she went out but never came back. We thought that she would have gone to some relatives’ house and we searched for her everywhere. We searched almost everywhere for the past four months and never found her. While Everyone in the family were so upset about Andai Ammal being missed, the members of the Eera Nenjam Trust contacted us and informed about Andai Ammal was being cared in Coimbatore. We immediately came to take her with us.
We thank the Eera Nenjam Trust, City Corporation Home and the Janaranjaga Seva Ashram for rescuing and caring for Andai Ammal.” They took the elderly lady with them and left.
Dear friends , it should be noted that the members of the Eera Nenjam Trust also found out that before the elderly lady was rescued from the street, she was under the care of the Janaranjaga Seva Ashram in Chinnakannam Puthur, Coimbatore for two months.
When Mr. Vegadapathy, the Trustee of that Ashram spoke, he said “two months ago, we brought Andai Ammal from Kovil Palayam area. After that she went missing from the Ashram since last Sunday 13.04.2014. We searched for her in all the places. Later the members of the Eera Nenjam Trust came and told us that Andai Ammal was under their care and wanted to know more information about her. We told them that when Andai Ammal was under our care we couldn’t understand her speech at all but she was very active. We were very surprised how they found the elderly lady, not only that after few hours they contacted and mentioned that they found the elderly lady’s relatives in Pondicheri. Also mentioned that they are on their way to bring Andai Ammal with them. It was a joyful shock for us.” The trustee also said that when they rescued the elderly lady she had 2000 rupees with her, and they would give that to her relatives and that was what they did.
The members of the Eera nenjam Trust is very pleased about the fact that one another helpless individual was reunited back with their relatives. They like to share their experience with you all.
~thank you
Eera Nenjam

Friday, April 18, 2014

தேவராஜ் உறவினர்கள் கண்டுபிடிப்பு ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ******
(293/18-04-2014)

கோவை 17-04-2014: திரு தேவராஜ், வயது 90, இவர் புலியகுளம், அன்னை தெரசா மகளிர் பள்ளி அருகில் கண் சரி இல்லாமல் பசி மயக்கத்துடன், துணைக்கு யாருமின்றி இருப்பதாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் திரு தேவராஜை மீட்டு ஈரநெஞ்சம் அமைப்பு கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்தனர் , அதனைதொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பு திரு தேவராஜ் அவருக்கு மகன்களும் மகளும் இருப்பதை அறிந்து அவர்களை தேடி கண்டறியும் முயற்சியில் இறங்கியது அதன் பலனாக அவரது மகன் கந்தசாமி மற்றும் வேங்கடராஜன் தொடர்பு கிடைத்தது. அவர்களிடம் அவர்களுடைய தந்தை திரு தேவராஜ், நிலையை பற்றி தெரிவித்து வந்து அழைத்து செல்லுமாறு ஈரநெஞ்சம் அமைப்பினர் கேட்டுக் கொண்டனர்.
https://www.facebook.com/photo.php?fbid=319653774826251&set=a.143756775749286.13398.100003448945950&type=1&theater

அதனை தொடர்ந்து இன்று 18-04-2014 இன்று திரு தேவராஜின் மகன் வேங்கடராஜன் , மகள் விஜயா இருவரும் கோவை வந்து தங்களின் தந்தையை அழைத்து சென்றனர். இதை பற்றி அவர்கள் கூறும் போது " நாங்கள் இனி இவரை நல்லபடி பார்த்துக்கொள்கிறோம் இந்நாள்வரை கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார் ஆனால் இப்போது இவருக்கு இப்படி பட்ட நிலை ஏற்படும் என்று தெரியாது என்றும் இவரை காப்பாற்றி பாது காப்பு கொடுத்து எங்களிடம் ஒப்படைதமைக்கு ஈரநெஞ்சம் , அமைப்பிற்கும் கோவை மாநகராட்சி காப்பகத்திற்கும் மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் . என்றனர் "

மீண்டும் ஒரு உறவை குடும்பத்தினருடன் இணைத்து வைத்த மகிழ்ச்சியில் ஈரநெஞ்சம் அமைப்பினர்.

நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Sunday, April 13, 2014

10 நாட்களாக சாலையில் கிடந்தவரை மீட்பு ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services" ******
[For English version, please scroll down]
(291/12-04-2014)



கோவை திருச்சி ரோடு சௌரிபாளையம் பகுதியில் கடந்த 10 நாட்களாக 66 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடக்க முடியாது , பார்வையற்ற நிலையில் இருப்பதாக பொது மக்கள் 108 ஆம்புலன்ஸுக்கு கொடுத்த தகவலின் பேரில் அவர்கள் மூன்று நாட்களுக்கு முன் சென்று அவரைப் பார்த்தனர் . பார்வையற்ற நிலையில் உள்ள அவரை பார்த்துக் கொள்ள துணை இல்லாததால் அவர்கள் அவரை அழைத்து செல்லவில்லை . இந்நிலையில் பொது மக்கள் ஈரநெஞ்சம் அமைப்பை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர் .
ஈரநெஞ்சம் அமைப்பினர் இன்று 12.04.2014 அவரை மீட்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் அனுமதி கேட்டுக்கொண்டு அவரை காப்பகத்தில் சேர்த்தனர் . அங்கு அவரை விசாரித்ததில் அவர் பெயர் ராஜா என்றும் சேலத்தில் கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார் . அவருக்கு இரண்டு மகன்கள் உண்டு என்றும் , கார்த்திக் என்றொரு மகன் கோவையில் வெள்ளக்கிணறு என்ற இடத்திலும் மற்றொரு மகன் வசந்த ராஜா ஓமலூரில் உள்ள பாதல் பட்டி என்ற இடத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார் .
இவரைப் பற்றிய தகவல் உங்களுக்குத் தெரிந்திருந்தால் உடனடியாக ஈரநெஞ்சம் அமைப்பிற்குத் தகவல் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு ஈரநெஞ்சம் 9080131500.
நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam
An elderly man age around 66, blind and unable to walk was seen adjacent to the Trichy road, Chouripalaiyam in Coimbatore for the past 10 days. 108 ambulance services was notified by the general public and they went to see him three days ago. Since he was blind and there was no one to watch him, so they couldn't take the elderly man with them. The concerned citizens reported his situation to the Eera Nenjam Trust.
Today 12.04.2014 the members of the Eera Nenjam Trust rescued the elderly man and admitted him at the Coimbatore City Corporation Home after receiving the admission. When the members of Eera Nenjam Trust questioned the elderly man, they came to know that his name was Rajah and he worked at construction site in Selam. He also mentioned that he has two sons, one is Karthick who lives in Vella kinaru in Coimbatore and the other one Vasantha Raja lives in Pathal Patti in Oomalur.
If anyone of you recognize this elderly man, please immediately contact the Eera Nenjam Trust at 9080131500. You can also share this post for more people to see and share or come forward with any information they may have.
~thank you
Eera Nenjam

Monday, April 07, 2014

மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவு ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ******
[For English version, please scroll down]
(288/05-04-2014)

கோவை சிங்கநல்லூர் உப்பிளிபாலயம் பகுதியில் கடந்த சிலமாதங்களாகச் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் பார்ப்பதற்குப் பரிதாபமாக அப்பகுதியில் இருக்கும் குப்பைகளில் இருக்கும் கண்ட பொருட்களைத் தின்று கொண்டு இருப்பதாகவும் இதனால் அவருக்குப் பாதுகாப்பான இடம் தேடிதரும்படி அப்பகுதி மக்கள் இன்று 05/04/2014 ஈரநெஞ்சம் அமைப்பிற்குத் தகவல் கொடுக்க உடனடியாக ஈரநெஞ்சம் அமைப்பினர் அந்த நபரை மீட்டு அவருக்குத் தேவையான முதலுதவிகள் செய்து கோவை மாநகராட்சி காப்பகத்தில் அனுமதி கேட்டுக் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

அந்த நபருக்கு மனநலம் பாதித்து இருப்பதால் அவருடைய பெயர் உட்படச் சரிவர விபரம் திரட்ட முடியவில்லை. இந்த நபரை உங்களுக்குத் தெரிந்திருந்தால் உடனடியாக ஈரநெஞ்சம் அமைபிற்குத் தகவல் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு ஈரநெஞ்சம் 9080131500.

நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

A mentally disordered man was found by public in Coimbatore, Singanallur, Upplipaalayam area. He was living there for past few months and he eat sweepings in street. So people contacted Eeranenjam trust and requested them to rescue that man and admit in a safe place today 05-04-2014. At once Eeranenjam rescue and gave some first aid for him. Then he was admitted in Coimbatore corporation home today.

As he is mentally disordered, he unable to say even his name and other details about him. If anybody know about him kindly contact Eeranenjam immediately in the nummber 9080131500.

Thank You
~Eeranenjam

திருவேங்கடம் அய்யாவிற்கு உறவினர்கள் இருப்பார்கள்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ******
[For English version, please scroll down]
(287/05-04-2014)

கோவை நேரு விளையாட்டு அரங்கம் வளாகத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட 80 வயது மதிக்கத்தக்க திருவேங்கடம் என்ற முதியவர் 02-04-2014 அன்றுபொதுமக்கள் மற்றும் 108- ஆம்புலன்ஸ் ஈரநெஞ்சம் அமைப்பினருக்கு அளித்த தகவலின் பேரில் அம்முதியவரை மீட்டு கோவை மாநகராட்சிக் காப்பகத்தில் சேர்த்தனர். அதனை தொடர்ந்து திருவேங்கடம் அவர்களின் உறவினரை தேடும் முயற்சியிலும் ஈரநெஞ்சம் அமைப்பினர் உள்பட பல அமைப்புகளும் நண்பர்களும் முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
https://www.facebook.com/photo.php?fbid=316045705187058&set=a.143756775749286.13398.100003448945950&type=1&theater
இதற்கிடையில் எதிர்பாராத விதமாக இன்று 04-04-2014மாரடைப்பால் அவர் இயற்கை எய்தினார். அவரது இறுதி காரியங்களை செய்து தருமாறு மாநகராட்சி காப்பக நிர்வாகத்தினர் ஈரநெஞ்சம் அமைப்பை கேட்டுக் கொண்டதற்க்கு இணங்க ஈரநெஞ்சம் அமைப்பினர் இன்று சொக்கம்புதூர் மயானத்தில் அவரது உடலை நல்லடக்கம் செய்தனர். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam



Thursday, February 27, 2014

ஆதி லட்சுமி பாட்டியின் உறவினர் கண்டுபிடிப்பு

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ****** 
[For English version, please scroll down] 
(273/26-02-2014)

ஆதரவற்றவர்கள் என்று யாருமே இருக்க கூடாது என்ற நிலையை உருவாக்க ஈரநெஞ்சம் அமைப்பு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை உளுந்தூர்பேட்டையை சேர்ந்த ஆதிலட்சுமி, வயது 80, இவர் நேற்று காலை கோவைக்கு தனது மகளை பார்க்க வந்துள்ளார். உளுந்தூர்பேட்டை, கொட்டையூர், சீமங்கலம் பகுதியில் தனியே வசித்து வருகிறார்.இவர் 4 வருடங்களுக்கு பிறகு தன் மகளை பார்க்க வருகிறார். இங்கு வந்த பிறகுதான் தன தனது மகளின் தொலைபேசி எண்ணை தொலைத்து விட்டதை அறிந்தார். மிகவும் பயமாகவும் பதட்டத்துடனும் தவித்து கொண்டிருந்த அவரை கோவை B8 காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் கோவை மாகராட்சி காப்பகத்தில் சேர்த்து விட்டனர். நேற்று முழுவதும் தன் நிலையை நினைத்து அழுது கொண்டிருந்த அவரை பற்றி மாநகராட்சி காப்பகத்தினர் ஈரநெஞ்சம் அமைப்புக்கு தகவல் கொடுத்து அவரது மகளை கண்டுபிடித்து தருமாறு வேண்டினர். ஈரநெஞ்சம் அமைப்பினர் அவருடன் பேசி கவுன்சலிங் செய்த போது அவரது மகள் பெயர் வெள்ளையம்மாள் என்றும், ரெயின்போ தியேட்டர், குளம் பக்கத்தில் இருக்கும் மேலும் தனது மருமகன் செல்வராஜ், ஆட்டோ டிரைவராக இருக்கிறார் போன்ற தகவல்களை தெரிவித்தார். அவர் கூறிய தகவல்களை வைத்து இன்று முழுவதும் தேடி அவரது மகளை ஈரநெஞ்சம் அமைப்பினர் கண்டுபிடித்தனர். அவரது மகள் கூறும்போது தனது தாய் நேற்று காலையே ஊரிலிருந்து வருவதாக கூறியதாகவும் ஆனால் அவர் வந்தது தெரியாததால் அவரை காணாமல் மிகவும் தவித்து போய் நேற்று முழுவதும் தேடியதாகவும் கூறினார். தற்போது ஈரநெஞ்சம் அமைப்பினர் தன் தாயை தேடி கண்டுபிடித்து தந்துவிட்டது மனது நிம்மதியும் மகிழ்ச்சியும் தருவதாக கூறி, ஈரநெஞ்சம் அமைப்பிற்கும், காவல்துறையினருக்கும் கோவை மாநகராட்சி காப்பகத்தினருக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து கொண்டு தனது தாயை தன்னுடன் அழைத்து சென்றார்.

மீண்டும் ஒரு உறவை குடும்பத்தினருடன் இணைத்து வைத்த மகிழ்ச்சியில் ஈரநெஞ்சம் அமைப்பினர்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

The Eera Nenjam Trust has been striving to create a situation where there should be no helpless person on the streets.

Yesterday morning Aathiluxmy age 80 from Ulunthurpettai, Kottaiur, Seemangalam came to Coimbatore to see her daughter. She came to see her daughter after 4years. She only realized that she lost her daughter's phone number after reaching Coimbatore. Police from Coimbatore B8 Police station noticed the tensed and anxious Aathiluxmy amma and admitted her at Coimbatore City Corporation Charity Home. Workers from the Charity home contacted the Eera Nenjam Trust and informed about the elderly mother who was crying the whole day yesterday thinking about her situation. They also requested the members of the Eera Nenjam Trust to search for the elderly mother's daughter. When the members of the Eera Nenjam Trust spoke and counseled to the elderly mother, She told them that her daughter's name is Vellaiammal who lives at Rainbow Theater, Kullam side and her son in law Selvaraj is an auto driver. With all the information gathered from the elderly mother, the members of the Eera Nenjam Trust searched the whole day today and found her daughter. When the daughter spoke, she mentioned that her mother said she was going to come to visit her yesterday, but without knowing that she arrived the daughter was searching for her all day yesterday with upset. She also mentioned that she has peace of mind and very happy that the members of the Eera Nenjam Trust found her mother. She thanked the members of the Eera Nenjam Trust, The police service, and the Coimbatore City Corporation Charity Home with tears and took her mother home.

The Eera Nenjam Trust is pleased about the fact that they made a difference by reuniting a helpless lost person back with their family.

~thank you
Eera Nenjam

Sunday, February 16, 2014

மனவலிமை இருந்தால் ஊனம் வெல்லலாம் ~மகேந்திரன்


" மனவலிமை இருந்தால் ஊனம் வெல்லலாம் " 
ரமேஷ் அதற்கு ஒரு உதாரணம் :

"ஊனம் ஊனம் ஊனம் இங்க ஊனம் யாருங்கோ
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறை இல்லே
உள்ளம் ஊனப்பட்டா உடம்பிருந்தும் பயனில்லே
ரெண்டு காலு உள்ளவனோ கெடுக்குறான்
சிலர் ஒத்த காலில் நல்ல வழி நடக்குறான்"

மனவலிமை இருந்தால் எந்த ஊனமாக இருந்தாலும் அதை வென்று விடலாம்

கோவையில் திரு. ரமேஷ், 33 வயது வெங்கடாசலம், பழனியம்மாள் தம்பதியினரின் இரண்டு மகளுக்கு அடுத்து மூன்றாவதாக பிறந்த செல்ல மகன் இந்த ரமேஷ் பிறக்கும்போதே இவரது காலில் குறைபாடு இருந்தது ஆனால் ரமேஷின் பெற்றோர்கள் அதனை பொருட்படுத்தாமல் ரமேஷை மிக செல்லமாக வளர்த்தார்கள் . ரமேஷ் காலில் நான்கு முழங்கால்கள் இருக்கும். இதனால் அவரால் நடக்கவோ மற்றவர்களை போல இயங்கவோ முடியாது. இந்த வேதனை அவருக்கு இருக்க கூடாது என்பதற்காகவே அவரை செல்லமாக வளர்த்தார்கள்.

பள்ளி செல்லும் பருவம் அடைத்தார் , ஆனால் இவரது குறைபாடு காரணமாக பள்ளி நிர்வாகம் இவரை பள்ளியில் சகமாணவர்களுடன் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டது. அப்படியே செர்க்கவேண்டுமனால் ரமேஷ் ஒரு ஆதரவற்றவர் என்று சொன்னால் சேர்த்துக்கொள்கிறோம் என்றார்களாம் , அதற்கு ரமேஷின் பெற்றோர் என் மகன் அனாதை இல்லை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்று ரமேஷின் அக்கா இருவரும் கணிதம் மற்றும் பொது பாடங்கள் கற்று கொடுத்திருக்கிறார்கள்.

மகிழ்ச்சியான குடும்பம் சொந்த வீடும் வசதியோடும் அன்போடும் வளர்ந்தவர் வாழ்க்கையில் முதல் சோதனையை தந்தது. திடீரென அப்பாவும் அம்மாவும் இறக்க .தந்தை விட்டு வைத்த கடனை வீட்டை விற்று அந்த கடனை அடைத்து மீதி இருக்கும் பணத்தில் தன் சகோதரிகளுக்கு திருமணம் நடத்தினார் . அதுபோக தன் எதிர்காலத்திற்கு கையில் சொற்ப பணமும் வைத்திருந்தார் .

அதன் பிறகோ இவரது சகோதரிகள் வீட்டில் சிலநாள் தங்கி இருக்கவே சகோதரிகளின் உறவினர்கள் இவரது ஊனத்தை பார்த்து அருவருப்பு பட்டு ரமேஷை வீட்டை விட்டு வெளியே போக சொல்லிவிட்டனர். ரமேஷ் வைத்திருந்த சொற்ப பணத்தை நிரந்தர வைப்பு நிதியாக வங்கியில் போட்டிருப்பதை அறிந்து அந்த பணத்தை உறவினர்கள் கேட்டு வற்புறுத்தியும் உள்ளார்கள் . அனால் அதை தர மறுத்துவிட்டு வீட்டில் இருந்து வெளியேறி கடந்த சில வருடத்திற்கு முன் ஈரநெஞ்சம் கொண்டவர்களின் துணையோடு இவர் ஒரு காப்பகத்தில் சேர்ந்து வாழ்கையை கழித்துவருகிறார். .

ஆனால் அங்கு தான் ஒரு அனாதைபோலவும் ஊனமுற்றவர் போலவும் பாவிப்பது அவருக்கு பிடிக்கவில்லை தனக்கு கால் குறைபாடாக இருக்கும் போதும் தன் வாழ்வை தன் சொந்தக் காலில் நின்று தான் வாழவேண்டும் என்ற வைராக்கியத்தோடு நண்பர்களின் சிறு உதவியோடு ஒரு காலணி விற்பனை கடையை துவக்கி நல்லமுறையில் நடத்திவருகிறார் .
கடந்த ஒருவருடமாக கடைக்கு வாடகை , உணவு, கவுண்டம்பாளையத்தில் இருக்கும் காப்பகத்தில் இருந்து சாய்பாபா காலனி யில் உள்ள அவரது கடைக்கு சென்று வருவதற்கு என மாதம் 8000 வரை அவரது கடையில் இருந்து வரும் லாபத்தில் சரிகட்டி வருகிறார் மீதம் சேமிப்பு என்று எதுவும் இல்லாத நிலை உள்ளது.

ஊனம் ஒரு பெரியதென்று வாழ்க்கையை இழந்தவர்கள் பலர் உண்டு. ஆனால் அதை துச்சமென தூக்கியெறிந்து ஓட ஆரம்பித்து இருக்கும் ரமேஷ் வாழ்வில் பல வெற்றிகள் காணவேண்டும் .

தற்போது மிகுந்த உற்சாகத்தில் காணப்படும் ரமேஷ் கண்களில் தனது காலணி கடையில் முதலீடு பற்றாக்குறை இருப்பது தெளிவாக தெரிகிறது.

யார் யாரையோ வங்கிகளும் பல முதலீட்டாளர்களும் ஓடி ஓடி கடன் கொடுத்தது ஊக்கப்படுத்துகிறார்கள்.
அனால் இவர்களை போன்ற பலரை மட்டும் தாமாகவே முன்னுக்கு வரட்டும் என ஏன் விட்டு விடுகிறார்கள்..?

#மகேந்திரன்

Friday, February 07, 2014

ஆடை இன்றி சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services


" ****** 
[For English version, please scroll down] 
(266/07-01-2014)
இன்று 07/02/2014 காலை கோவை இரயில் நிலையம் அருகே மன நலம் பாதிக்க பட்ட 30 வயது மதிக்க தக்க உடலில் ஆடைகள் கூட சரியான முறையில் இல்லாமல் துர்நாற்றத்துடன் அப்பகுதியில் சுற்றி திரிவதை அப்பகுதி பொதுமக்கள் கண்டு அந்த பெண்ணிற்கு பாதுகாப்பான இடம் தேடி தரும் படி ஈரநெஞ்சம் அமைபிற்கு வேண்டுகோள் விடுத்தனர்.அதனை தொடர்ந்து உடனடியாக அப்பகுதிக்கு ஈரநெஞ்சம் அமைப்பினர் சென்று அந்த மனநிலை பாதிக்க பட்ட பெண்ணை மீட்டு கோவை மாநகராட்சி காப்பகத்திற்கு அழைத்து வரபட்டு அவரை குளிக்கவைத்து மாற்று உடை அணிவித்து மாநகராட்சி காப்பகத்தில் அனுமதி கேட்டு மீட்கப்பட்ட பெண்ணை காப்பகத்தில் சேர்த்தனர்.
தற்போது காப்பகத்தின் பொறுப்பில் இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண் பேசுவதை வைத்துப்பார்க்கும் பொழுது பெண்ணிற்கு தாய் மட்டும் இருக்கலாம் எனவும் கோவை சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் தெரியப்படுகிறது.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Today 07/02/14 morning, 30 years old mentally ill without proper dressing was roaming near Koavai Railway station. General public approach Eeraneanjam to protect that lady and requested to give proper shelter for her. Immediately Eeranenjam reached the spot and took her to corporation home and she was given a bath and new cloths and admitted in the home. Eeranenjam spoke to her regarding her family background, from her talk we guess she has a mother near Koavai Soakkamputhur area.

~Thank you
Eera nenjam

ஆதரவற்றவர் இறப்பு ஈரநெஞ்சம் நல்லடக்கம் ~ ஈரநெஞ்சம்


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "


******
[For English version, please scroll down] (264-06/02/2014)

28/01/2014 அன்று பாப்பநாயக்கன் பாளையம் நியூ ஸ்கீம் சாலையோரமாக சரோஜினி என்ற 80 வயது மதிக்கத்தக்க வயதான மூதாட்டி நடக்க முடியாத நிலையில் ஈரநெஞ்சம் அமைப்பினர் மீட்டு கோவை மாநகராட்சி முதியோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்
https://www.facebook.com/photo.php?fbid=521816107915810&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater தொடர்ந்து உடல்நலம் குன்றி காணப்பட்ட சரோஜினி பாட்டி நேற்று இரவு காலமானார் .
சரோஜினி பாட்டி இறுதி சடங்கினை ஈரநெஞ்சம் பொறுப்பேற்றுக்கொண்டு இன்று 06/02/2014 சரோஜினி பாட்டியின் உடலை கோவை சொக்கம்புதூர் மாநகராட்சி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சரோஜினி பாட்டியின் ஆத்மா சாந்தியடைய ஈரநெஞ்சம் உங்களோடு சேர்ந்து பிரார்த்தனை செய்கிறது .
ஆதரவற்று யாரும் இருக்க கூடாது சாலையில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு நிழல் தேடிக்கொடுப்பது மட்டும் இல்லாமல் அவர்களை உறவினர்களாகவே பாவித்து அவர்களது இறுதி காலத்தையும் ஈரநெஞ்சம் பொறுப்பேற்று கொள்வது அமைப்பின் கடமையாகிறது , அமைபிற்கு ஆதரவுதரும் அனைவருக்கும் மனமார்ந்த வணக்கங்கள் .

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

28/01/14, Sarojini aged 80 was seen at New scheme road, Papanayakkan palayam by Eeraneanjam, she was sick and cannot able to walk, was admitted at Kovai corporation home by Eeraneanjam.Due to her illness and age, she passed away yesterday night. Eeraneanjam took incharge of her last rituals and today 06/02/14 she was buried at Koavai Sokkamputhur graveyard. Eeraneanjam prays for her and let her soul rest in peace.
Eeraneanjam wishes there should not be any orphan and eeraneanjam will treat as relative for orphans, until their last rituals. Eeraneanjam extends its heartfelt thanks to all supporters.

thank you 

eeranenjam

Wednesday, January 08, 2014

தொண்ணூறு வயது மூதாட்டி மீட்பு

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(250/07-01-2014)

கோவை அவினாசிசாலை அண்ணா சிலை அருகில் சுமார் 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இன்று 07/01/2014 காலை முதல் சரிவர நடக்க முடியாமல் சாலையோரமாக சுருண்டு கிடந்துள்ளார். அப்பகுதி மக்கள் அந்த மூதாட்டியின் நிலையை அறிந்து உணவு கொடுத்து வந்தனர். யார் அவர் எங்கிருந்து வந்தார் என்ற விபரம் தெரியவில்லை. மூதாட்டிக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்ற நிலையில் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு தகவல் கொடுக்கப்பட்டு அந்த மூதாட்டியை ஒரு காப்பகத்தில் சேர்க்கும் படி கேட்டுக்கொண்டனர். ஈரநெஞ்சம் உறுப்பினர்கள் உடனடியாக அந்த பாட்டியை அப்பகுதியில் இருந்து மீட்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்துள்ளனர். மேலும் பாட்டியிடம் விசாரிக்கும் பொது அவர் பெயர் பச்சை அம்மாள் என்ற விபரம் மட்டும் கிடைக்கப்பட்டது. மேலதிக விபரங்கள் கிடைக்கப்படவில்லை. பாட்டியின் நிலையை கவனித்து உணவு கொடுத்து அவரது பாதுகாப்புக்காக உதவிய பொது மக்களுக்கு நன்றியை ஈர நெஞ்சம் அமைப்பு தெரிவித்துக் கொள்கிறது.
இந்த பாட்டியை உங்களில் யாருக்காவது அடையாளம் காண முடிந்தால் தயவு செய்து ஈர நெஞ்சம் அமைப்பைத் தொடர்பு கொள்ளவும். 9080131500

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Today 07.01.2014 an elderly lady about 90 years old was found curling down in hunger on the street near Anna Statue close to Avinashi Road in Coimbatore. Local citizens noticed her situation and provided food for her. Upon considering her safety, they contacted Eera Nenjam Trust and passed on the information of her situation. Members of Eera Nenjam Trust rushed to that location and rescued her. Later she was admitted at the Coimbatore City Corporation Charity Home. When the members of Eera Nenjam Trust questioned her about her background she could only tell them that her name is Pachchai Ammal. More information about her background cound't be collected from her. Eera Nenjam Trust is thanking the local citizens who helped the elderly lady with food and assisted her to find shelter.
If anyone of you can recognize this elderly lady and know any information about her, 
please contact Eera Nenjam trust. 9080131500

~Thank you
Eera Nenjam Trust

Sunday, December 22, 2013

ஆதரவற்ற மூதாட்டி மீட்பு

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(244/21-12-2013)

21/12/2013 கோவை, சுந்தராபுரம் பகுதியில் 90வயது மதிக்கத்தக்க தங்கம்மாள் என்பவர் பல வருடமாக சாலையில் வசித்துவந்தார் , பொதுமக்கள் மூதாட்டிக்கு உணவும் மற்றும் உதவியும் செய்துவந்தனர் , தற்சமையம் குளிர்காலமாக இருப்பதனால் மிகவும் அவதிப்பட்டு வந்தார், இதனை அறிந்த அப்பகுதிவாழ் மக்கள் ஈரநெஞ்சம் அமைபிற்கு தொடர்புகொண்டு தங்கம்மாள் பாட்டிக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தனர் , அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பினர் அந்த தங்கம்மாள் பாட்டியை தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துவந்து கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்கள்.

மேலும் தங்கம்மாள் பாட்டி கூறும்போது தனக்கு யாரும் இல்லை என்றும் பலவருடமாக இந்த பகுதியில் தான் குப்பைகளை பொருக்கி  விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்துவந்ததாகவும். இப்போது வயதாகிவிட்டதால் இந்த பகுதி மக்களிடம் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்ததாகவும் கூறினார்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Thangammal age about 90yrs has been living on the streets of Coimbatore Suntharapuram area for many years. The public used to provide food and help her. She struggled a lot because now it is a cold season. After noticing her struggle the public contacted Eera Nenjam and requested them to assist Thangammal Paati. Following that today 21.12.2013 Eera Nenjam rescued Thamgammal Paati and brought her to Coimbatore City Corporation home by ambulance and admited her at the home. When Thangammal Paati spoke about her background, she mentioned that she has no one to go to and survived these years by selling stuff from the waste. Now that she got old she survived by begging.

Once again Eera Nenjam is pleased about the fact that it rescued another homeless needy person and made a little difference. Eera Nenjam also want to share this information with you.

~Thank You
Eera Nenjam
Photo: ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(244/21-12-2013)

 21/12/2013 கோவை, சுந்தராபுரம் பகுதியில் 90வயது மதிக்கத்தக்க தங்கம்மாள் என்பவர் பல வருடமாக சாலையில் வசித்துவந்தார் , பொதுமக்கள் மூதாட்டிக்கு உணவும் மற்றும் உதவியும் செய்துவந்தனர் , தற்சமையம் குளிர்காலமாக இருப்பதனால் மிகவும் அவதிப்பட்டு வந்தார், இதனை அறிந்த அப்பகுதிவாழ் மக்கள் ஈரநெஞ்சம் அமைபிற்கு தொடர்புகொண்டு தங்கம்மாள் பாட்டிக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தனர் , அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பினர் அந்த தங்கம்மாள் பாட்டியை தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துவந்து கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்கள்.

மேலும் தங்கம்மாள் பாட்டி கூறும்போது தனக்கு யாரும் இல்லை என்றும் பலவருடமாக இந்த பகுதியில் தான் குப்பைகளை போருக்கு விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்துவந்ததாகவும். இப்போது வயதாகிவிட்டதால் இந்த பகுதி மக்களிடம் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்ததாகவும் கூறினார்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Thangammal age about 90yrs has been living on the streets of Coimbatore Suntharapuram area for many years. The public used to provide food and help her. She struggled a lot because now it is a cold season. After noticing her struggle the public contacted Eera Nenjam and requested them to assist Thangammal Paati. Following that today 21.12.2013  Eera Nenjam rescued Thamgammal Paati and brought her to Coimbatore City Corporation home by ambulance and admited her at the home. When Thangammal Paati spoke about her background, she mentioned that she has no one to go to and survived these years by selling stuff from the waste. Now that she got old she survived by begging. 

Once again Eera Nenjam is pleased about the fact that it rescued another homeless needy person and made a little difference. Eera Nenjam also want to share this information with you. 

~Thank You
Eera Nenjam

Friday, November 29, 2013

நலம் வாழ என் வாழ்த்துக்கள் ~ ஈரநெஞ்சம்



Eera Nenjam Charity/

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
****** 
[For English version, please scroll down]
(238/29-11-2013)

கோவை, பாப்பநாயக்கன்பாளையம், லக்ஷ்மி மில் அருகில் பல வருடங்களாக சுமார் 40 வயது மதிக்கத்தக்க, மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் சாலையோரமாக இருந்து வந்தார். உடலில் மிக அழுக்கு, எண்ணை பிசுக்கு, கோரமாக, கிழிந்த உடையுடன் வெய்யிலிலும் மழையிலும் சாலையிலேயே இருந்து வந்தார். ஒரு சில முறை சிறு விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்பதற்கு பலமுறை ஈரநெஞ்சம் அமைப்பினர் அங்கு சென்றபோதெல்லாம் அங்கே கிடைப்பதில்லை. இன்று 28/11/13 அவர் தனியார் அவசர சிகிச்சை ஊர்தி மூலம் ஈரநெஞ்சம் அமைப்பினர் அவரை மீட்டு கோவை மாகராட்சி காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு தேவையான அனைத்து முதலுதவியும் செய்து அவரை குளிக்க வைத்து சுத்தம் செய்து நல்ல உடை அணிவித்து உணவும் வழங்கப்பட்டது.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

There was a mentally disabled person in his 40s lived on the streets of Coimbatore Pappanayakkan Palayam. He continued to live on the streets in the sun and rain with dirty, and oily body. He had torn clothes and looked horrible. He also had little accidents few times. Whenever Eera Nenjam went there to rescue him, he was missing in the area. Today 28.11.2013 Eera Nenjam rescued him and brought to admit at Coimbatore City Corporation Home by the private emergency vehicle. There he was given necessary first aid, bath, food and clean good clothes. Eera Nenjam is very pleased about the fact that one more homeless mentally disabled person is rescued from the streets to make a difference. We would like to share that with you all.

~Thank you
Eera Nenjam