Showing posts with label சுதர்சனன். Show all posts
Showing posts with label சுதர்சனன். Show all posts

Tuesday, April 17, 2012

மனநிலை பாதித்த கோவிந்தராஜு குடும்பத்துடன் இணைந்தார்

கடந்த 18 / 12 / 11 அன்று  ஆம்பூர் (வேலூர்) ரயில்நிலையம் எதிரே  இவரை அரைகுறை ஆடையுடன்மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றிதிரிந்ததை  நேரில் கண்டு அவரை ஏதாவது ஒரு காப்பகத்தில் பாதுகாப்புடன் பராமரிக்க வேண்டும் என  நானும் (மகேந்திரன்) நண்பர் சுதர்சனனும் முடிவு செய்தோம்  . திருபதூர் பகுதியில் உள்ள "உதவும்  உள்ளங்கள்" என்னும் மனநிலை பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு இல்லைத்தை தொடர்புகொண்டு இவரை பற்றி தகவல் கொடுத்து அந்த இல்லைத்தை சேர்ந்தவர்கள் நேரில் அவரை அணுகி  பரிவுடன் அழைத்து சென்று அவர்களுடைய இல்லைதில் பராமரித்து வந்தார்கள் ,

அங்கு அவருக்கு மருத்துவ உதவி கொடுக்கப்பட்டு வந்தது அதனை தொடர்ந்து  கடந்த சில நாட்களாக அவரிடம் பெரும் மாற்றம் காணப்பட்டது அவர் பேச துவங்கினார் , அவருடைய பெயர் கோவிந்த ராஜு என்றும்  பெற்றோர் சீனி கவுண்டர், கோவிந்த அம்மாள் என்றும்  முகவரி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் என்றும் கூறினார் , அதனை கொண்டு காப்பகத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜுவின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு வரவழைத்து கோவிந்தராஜு அவர்களை வேலூர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பெற்றோருடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளார்கள்.



மகிழ்ச்சியான விஷயம்ங்க இதில் குறிப்பிடத்தக்க ஒன்று என்ன என்றால் கோவிந்தராஜு அவர்களது பெற்றோரை  பிரிந்து ஆறு வருடங்கள் ஆகியுள்ளது.

கோவிந்தராஜ் அவரகளது உறவினருடன் சேர்க்க உதவிய  "உதவும்  உள்ளங்கள்" என்னும் மனநிலை பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு இல்லத்தை எப்படி பாராட்டுவது வார்த்தைகளே இல்லை சாலையோரமாக கோவிந்தராஜுவை கண்டு எனக்கு தகவல் கொடுத்த  சுதர்சனனுக்கு  மனமார்ந்த வாழ்த்துக்கள்...
~மகேந்திரன்