Showing posts with label உழைப்பு. Show all posts
Showing posts with label உழைப்பு. Show all posts

Sunday, February 16, 2014

மனவலிமை இருந்தால் ஊனம் வெல்லலாம் ~மகேந்திரன்


" மனவலிமை இருந்தால் ஊனம் வெல்லலாம் " 
ரமேஷ் அதற்கு ஒரு உதாரணம் :

"ஊனம் ஊனம் ஊனம் இங்க ஊனம் யாருங்கோ
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறை இல்லே
உள்ளம் ஊனப்பட்டா உடம்பிருந்தும் பயனில்லே
ரெண்டு காலு உள்ளவனோ கெடுக்குறான்
சிலர் ஒத்த காலில் நல்ல வழி நடக்குறான்"

மனவலிமை இருந்தால் எந்த ஊனமாக இருந்தாலும் அதை வென்று விடலாம்

கோவையில் திரு. ரமேஷ், 33 வயது வெங்கடாசலம், பழனியம்மாள் தம்பதியினரின் இரண்டு மகளுக்கு அடுத்து மூன்றாவதாக பிறந்த செல்ல மகன் இந்த ரமேஷ் பிறக்கும்போதே இவரது காலில் குறைபாடு இருந்தது ஆனால் ரமேஷின் பெற்றோர்கள் அதனை பொருட்படுத்தாமல் ரமேஷை மிக செல்லமாக வளர்த்தார்கள் . ரமேஷ் காலில் நான்கு முழங்கால்கள் இருக்கும். இதனால் அவரால் நடக்கவோ மற்றவர்களை போல இயங்கவோ முடியாது. இந்த வேதனை அவருக்கு இருக்க கூடாது என்பதற்காகவே அவரை செல்லமாக வளர்த்தார்கள்.

பள்ளி செல்லும் பருவம் அடைத்தார் , ஆனால் இவரது குறைபாடு காரணமாக பள்ளி நிர்வாகம் இவரை பள்ளியில் சகமாணவர்களுடன் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டது. அப்படியே செர்க்கவேண்டுமனால் ரமேஷ் ஒரு ஆதரவற்றவர் என்று சொன்னால் சேர்த்துக்கொள்கிறோம் என்றார்களாம் , அதற்கு ரமேஷின் பெற்றோர் என் மகன் அனாதை இல்லை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்று ரமேஷின் அக்கா இருவரும் கணிதம் மற்றும் பொது பாடங்கள் கற்று கொடுத்திருக்கிறார்கள்.

மகிழ்ச்சியான குடும்பம் சொந்த வீடும் வசதியோடும் அன்போடும் வளர்ந்தவர் வாழ்க்கையில் முதல் சோதனையை தந்தது. திடீரென அப்பாவும் அம்மாவும் இறக்க .தந்தை விட்டு வைத்த கடனை வீட்டை விற்று அந்த கடனை அடைத்து மீதி இருக்கும் பணத்தில் தன் சகோதரிகளுக்கு திருமணம் நடத்தினார் . அதுபோக தன் எதிர்காலத்திற்கு கையில் சொற்ப பணமும் வைத்திருந்தார் .

அதன் பிறகோ இவரது சகோதரிகள் வீட்டில் சிலநாள் தங்கி இருக்கவே சகோதரிகளின் உறவினர்கள் இவரது ஊனத்தை பார்த்து அருவருப்பு பட்டு ரமேஷை வீட்டை விட்டு வெளியே போக சொல்லிவிட்டனர். ரமேஷ் வைத்திருந்த சொற்ப பணத்தை நிரந்தர வைப்பு நிதியாக வங்கியில் போட்டிருப்பதை அறிந்து அந்த பணத்தை உறவினர்கள் கேட்டு வற்புறுத்தியும் உள்ளார்கள் . அனால் அதை தர மறுத்துவிட்டு வீட்டில் இருந்து வெளியேறி கடந்த சில வருடத்திற்கு முன் ஈரநெஞ்சம் கொண்டவர்களின் துணையோடு இவர் ஒரு காப்பகத்தில் சேர்ந்து வாழ்கையை கழித்துவருகிறார். .

ஆனால் அங்கு தான் ஒரு அனாதைபோலவும் ஊனமுற்றவர் போலவும் பாவிப்பது அவருக்கு பிடிக்கவில்லை தனக்கு கால் குறைபாடாக இருக்கும் போதும் தன் வாழ்வை தன் சொந்தக் காலில் நின்று தான் வாழவேண்டும் என்ற வைராக்கியத்தோடு நண்பர்களின் சிறு உதவியோடு ஒரு காலணி விற்பனை கடையை துவக்கி நல்லமுறையில் நடத்திவருகிறார் .
கடந்த ஒருவருடமாக கடைக்கு வாடகை , உணவு, கவுண்டம்பாளையத்தில் இருக்கும் காப்பகத்தில் இருந்து சாய்பாபா காலனி யில் உள்ள அவரது கடைக்கு சென்று வருவதற்கு என மாதம் 8000 வரை அவரது கடையில் இருந்து வரும் லாபத்தில் சரிகட்டி வருகிறார் மீதம் சேமிப்பு என்று எதுவும் இல்லாத நிலை உள்ளது.

ஊனம் ஒரு பெரியதென்று வாழ்க்கையை இழந்தவர்கள் பலர் உண்டு. ஆனால் அதை துச்சமென தூக்கியெறிந்து ஓட ஆரம்பித்து இருக்கும் ரமேஷ் வாழ்வில் பல வெற்றிகள் காணவேண்டும் .

தற்போது மிகுந்த உற்சாகத்தில் காணப்படும் ரமேஷ் கண்களில் தனது காலணி கடையில் முதலீடு பற்றாக்குறை இருப்பது தெளிவாக தெரிகிறது.

யார் யாரையோ வங்கிகளும் பல முதலீட்டாளர்களும் ஓடி ஓடி கடன் கொடுத்தது ஊக்கப்படுத்துகிறார்கள்.
அனால் இவர்களை போன்ற பலரை மட்டும் தாமாகவே முன்னுக்கு வரட்டும் என ஏன் விட்டு விடுகிறார்கள்..?

#மகேந்திரன்

Tuesday, November 19, 2013

"உலகமே உன்னைக் கண்டு வியக்குதம்மா வைரமணி"

"உலகமே உன்னைக் கண்டு வியக்குதம்மா வைரமணி"

பெண்கள் எல்லோருமே அவரவர் தகுதிக்கேற்ப உழைக்கின்றார்கள். ஆண்களை காட்டிலும் பெண்களது சாதனை தற்போது விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து உள்ளது . பெண்ணின் துணிச்சலும் அந்த அளவிற்கு உயர்ந்துவருகிறது . அந்த வரிசையில் ஆச்சரியமூட்டும் ஒரு துறையிலும் ஒரு பெண் சாதித்து வருகிறார்.
பிணம் என்றாலே பெண்களை அருகில் விடுவது இல்லை, இறந்தவர்களை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு போவதென்றால் கூட ஆண்கள் மட்டும் தான் செல்வார்கள். இந்த காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. புலியை முறத்தால் விரட்டிய பெண்ணின் வம்சம் கொண்டவளோ... இவள் நடு சாமத்தில் தனி ஒருத்தியாக சிதையை எரியூட்டுகிறாள். கோவையில் சொக்கம் புதூர் மயானத்தில் வெட்டியானாக (வெட்டியாள்) 30வயது வைரமணி என்னும் பெண்மணி.
நான் இவரை சந்தித்த சூழ்நிலை என்னால் மறக்க முடியாத ஒன்று. மிக இக்காட்டான ஒரு சூழ்நிலையில் எனக்கு பெரும் உதவி புரிந்தவர் இந்த வைரமணி. சுட்டாலும் இவரை மறக்காது அப்படி ஒரு உதவி , ஒரு ஆதரவற்ற சடலத்தை அடக்கம் செய்ய வழக்கமாக நல்லடக்கம் செய்துவரும் அமைப்பில் கூட அந்த தினத்தில் எனக்கு உதவ கைவிரித்து விட்டனர் , உதவிக்கு அழைத்த உடன் இருந்த நண்பர்கள் கூட உதவ முன்வரவில்லை, சடலத்தை நடு வீதியில் வைத்துக்கொண்டு அல்லல் பட்ட நிலையில் வைரமணியை அழைக்க "அண்ணா நான் இருக்கேன்... நீங்க கொண்டுவாங்க... நான் செய்து தரேன் பார்த்து கொள்ளலாம்" என்ற வார்த்தை .
அப்போது அவர் கூறிய இந்த வார்த்தைக்கு நான் என்ன கைம்மாறு செய்தாலும் மிகையாகாது. அந்த உதவிக்கு எந்த அளவுக்கு பணம் கொடுப்பது... அப்படி கொடுத்தால் மட்டும் அதற்கு நிகராகிடுமா ? . எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் கடவுள் நேரில் வந்து உதவுவது இல்லை , ஆனால் அவர் சொன்ன "அண்ணா நான் இருக்கேன்" என்ற வார்த்தை கடவுளின் குரல் ஒலித்தது போல இருந்தது .
இந்த பெருந்தன்மையான வார்த்தைக்கு தகுந்த பலனை அவர் பெற வேண்டும் . என்று அன்றே என் மனதில் தோன்றியது. என்னுடைய நம்பிக்கையும் அவரது புனிதமான பணியும் உன்னதமானதாக இருந்தால் அவர் சொன்ன வார்த்தைக்கும் உதவிக்கும் இறைவனால் மட்டுமே தகுந்த ஊதியம் கொடுக்க முடியும் .
இவரது துணிச்சல் , இவரது பணியைப்பற்றி என்னுடைய பத்திரிக்கை நண்பர்களிடம் கூறியதில் , இவரைப்பற்றி கோவை முழுவதும் பல நாளேடுகளிலும் தொலைக்காட்சிகளிலும் இந்த பெண்ணின் சிறப்பை அறிமுகப்படுத்தினார்கள் . அதன் மூலம் வைரமணிக்கு அவரது பணியை ஊக்குவிக்கும் அளவில் "நேசம்" என்ற அமைப்பு ஆயிரம் பேர் மத்தியில் கவுரவித்து விருதும் வழங்கியது.
எதுவும் இறைவனது அருள் இல்லாமல் நடந்திடாது , இறைக்கு இணையான பணியை மேற்கொள்ளும்போது இறைவனே இறங்கிவரமாட்டானா என்ன , எல்லாம் அவன் செயல் .
அமெரிக்க பத்திரிகையில் வைரமணி
"அண்ணா நான் இருக்கேன்" என்ற வார்த்தைக்கு அவ்வளவு சக்தி இருக்கிறதா என்ன இவரது உன்னதத்தை இன்னும் உலக மக்களுக்கும் அறிந்தாகவேண்டும் என்று அமெரிக்காவில் மிகவும் பிரபலமான "தென்றல்" தமிழ் மாத இதழில் இவருடைய பேட்டிக்கு இடம் கிடைத்தது அதுவும் வைரமணியை நான் நேர்க்காணல் செய்து.
நானாக ஒருவரை நேர்க்காணல் செய்து பத்திரிக்கையில் எழுதுவது அதுவும் அமெரிக்க " தென்றல் " மாத இதழில் வெளிவந்தது எனக்கு அந்த பத்திரிக்கை கொடுத்த மரியாதையாகவே எண்ணுகிறேன் . அந்த வாய்ப்பை எனக்களித்த அரவின் சுவாமிநாதன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்
"தென்றல்" மாத இதழில் முகப்பு அட்டையில் வைரமணியின் புகைப்படத்துடன் , அமெரிக்காவில் தென்றல் மாத இதழில் இடம் பிடிப்பது என்பது மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. அதிலும் முகப்பு அட்டையில் புகைப்படம் கிடைப்பது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட இடமும் அறிய கவுரவம் ஆகும். அதில் வைரமணி செய்தி நவம்பர் 1 ஆம் தேதி பிரசுரத்தில் வெளிவந்துள்ளது.



இந்த சூழ்நிலையில் எனக்கு உதவ அவர் கூறிய "அண்ணா நான் இருக்கேன்" என்ற வார்த்தைகளுக்கான வெகுமதி இறைவன் அவருக்கு கொடுத்து விட்டதாகவே நான் எண்ணுகிறேன். எங்கோ ஒரு மூலையில் சொக்கம்புதூரில் மயானத்தில் இருக்கும் வைரமணி இன்று அமெரிக்க மக்கள் முதல் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் நிச்சயம் இடம் பிடித்திருப்பார் என்று திருப்தியும் எனக்கு ஏற்படுகிறது. இவரை போன்றவர்களை தாழ்த்தப்பட்டவர்களாக எல்லோரும் எண்ணும் நிலையில் வைரமணி மிக உயரிய இடத்தை அடைந்து விட்டார். இவரை பற்றி படிக்கும் எல்லோருக்கும் நிச்சயம் பெண்கள் மீதான மதிப்பு மேலும் கூடும், இதை எல்லோரும் படிக்க வேண்டும் என்று நான் கட்டாயப் படுத்தவில்லை
ஆனால் படித்து பாருங்கள். இவரை போன்றவர்களை பற்றி தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

நன்றி
~மகேந்திரன்