இங்கு யாருக்கும் “இதைக் செய்”, “அங்கே போகாதே” என்று சொல்ல உரிமை இல்லை.
ஆனால், “எச்சரிக்கையாக இரு” என்று அறிவுரை சொல்லும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.
தமிழ்நாடு காவல் துறை பெண்களின் பாதுகாப்புக்காக பல வருடங்களுக்கு முன்பே “காவலன்” என்ற செயலியை அறிமுகப்படுத்தியது.
இந்த ஆப்பை ஒருமுறை மொபைலில் நிறுவி வைத்தாலே போதும்.
ஏதாவது ஆபத்தான சூழ்நிலையில் அந்த ஆப்பை அழுத்தினால்,
அது நேரடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும்.
மொபைலின் ஜிபிஎஸ் மூலம் இடம் தெரிந்து காவலர்கள் உடனே தொடர்பு கொள்வார்கள்.
அவ்வளவு அருமையான ஆப்பாக இருந்தும், இன்னும் பெண்கள் மத்தியில் போதிய அளவில் பயன்படுத்தப்படுவதில்லை.
அதற்குக் காரணம் சில எளிய விஷயங்கள்தான் —
மக்களுக்கு இதன் பயன்பாடு சரியாக தெரியாமல் இருப்பது,
சிலர் “இது வேலை செய்யுமா?” என்ற சந்தேகம் கொண்டிருப்பது,
மற்றும் சிலர் “நமக்கு இதை செய்ய நேரம் இல்லையே” என்று நினைப்பது.
ஆனால் நம்மால் இதை மாற்ற முடியும்.
ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்திலுள்ள பெண்களிடம், நண்பர்கள், மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் ஆகியோரிடம்
இந்த ஆப்பை நிறுவி பயன்படுத்தச் சொல்லினால் அது ஒரு உயிரைக் காப்பாற்றும் அளவுக்கு உதவியாகும்.
“காவலன் ஆப்” விழிப்புணர்வை பொதுமக்களிடம் எப்படிக் கொண்டு சேர்க்கலாம்?
குறும்பட டெமோ:
ஒரு நிமிட வீடியோவில், “ஒரு பெண் இரவில் பயந்து காவலன் ஆப்பை அழுத்துகிறாள் – உடனே காவல் அழைப்பு வருகிறது” என்ற காட்சியை காண்பிக்கலாம்.
இதை Facebook, Instagram, WhatsApp போன்ற இடங்களில் பரப்பலாம்.
விழிப்புணர்வு:
பெண்கள் கல்லூரிகளில் நேரில் டெமோ நடத்தலாம்.
ஆப்பை திறந்து SOS அழைப்பை எப்படிச் செய்கிறோம் என்பதை மாணவிகளுக்குக் காட்டலாம்.
பஸ்நிலையம், மால்கள், ரயில் நிலையங்களில் சிறிய ஸ்டால்கள் அமைத்து
“பெண்களின் பாதுகாப்பு – காவலன் உங்கள் நண்பன்” என விளம்பர பலகைகள் வைக்கலாம்.
QR கோடு மூலம் ஆப்பை நேரடியாகப் பதிவிறக்கம் செய்ய வசதி ஏற்படுத்தலாம்.
“#InstallKavalanChallenge” என்கிற ஹேஷ்டேக்குடன்
“நான் காவலன் ஆப்பை நிறுவி வைத்துள்ளேன் — நீங்களா?” என்று மக்கள் பகிர ஊக்குவிக்கலாம்.
சமூகப்பணியாளர்கள் இதனை ஒரு பிரச்சாரமாக நடத்தியால்
பெண்கள் பாதுகாப்பு குறித்து மக்கள் அதிக விழிப்புணர்வுடன் நடந்து கொள்வார்கள்.
பெண்கள் பாதுகாப்பு என்பது சட்டம் அல்லது காவல்துறை மட்டும் அல்ல —
அது நம்முடைய விழிப்புணர்விலும், ஒத்துழைப்பிலும் தான் இருக்கிறது.
ஒரு “அழுத்து” மூலம் உயிர் காப்பாற்றும் காவலன் ஆப்பை
ஒவ்வொரு பெண்களும் நிறுவி வைத்திருப்பது நம் சமூகப் பொறுப்பு. 🙏
~ மகேந்திரன்












![Photo: ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(212/2013)
இன்று 06-10-2013, காலை கோவை காந்திபுரம் பகுதியில் சுமார் 90 வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் கிட்டத்தட்ட மயக்க நிலையில் மிகுந்த பசியுடன் காணப்பட்டார். அவர் போவோர் வருவோரிடன் உணவு கேட்டுக் கொண்டிருந்தார். ஈரநெஞ்சம் அமைப்பினர் அவரை மீட்டு உணவும் முதலுதவியும் வழங்கினர். பின்னர் அவர் கூறும்போது அவர் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள சுண்டாம்பாளையத்தை சேர்ந்தவர் என்று தெரிவித்தார். அவருக்கு உறவிர்களும், மகனும் உள்ளனர். அவரது மகன் கோவை PSG கல்லூரியில் பணி புரிவதாக சொன்னார். ஆனால் அவர் தன் மகன் பெயரை சொல்ல மறுத்து விட்டார். இவரை ஈரநெஞ்சம் அமைப்பினர் கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு 9080131500, 9843344991. என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.
~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam
Today morning 06-10-2013, an old man, aged about 90 years was founed in almost unconscious stage with heavy hungry in Coimbatore Gandhipuram area. He was asking food with pedestrians. Eeranenjam people found him and gave food and first aid treament. He told that he is from Sundambalayam near Thondamuthur area. He has relations and son. His son is working in PSG college and he refused to tell his son's name. Then eeranenjam people admitted him in Coimbatore corporation orphanage home.
If anyone know about him kindly contact us in the numbers 9080131500, , 9843344991.
~Thanks
Eeraneanjam
மேலும் தன்னை பற்றி முத்துக் குமார் ஐயா சில தகவல்கள் கூறினார்.
தான் கோவை வரதராஜ மில்லில் பணியாற்றியதாகவும் . தன் மகன் PSG டெக் கில் வேலை பார்ப்பதாகவும் கூறி உள்ளார்.](https://m.ak.fbcdn.net/sphotos-g.ak/hphotos-ak-prn1/p480x480/1013598_471191706311584_864549329_n.jpg)