Showing posts with label வீரம். Show all posts
Showing posts with label வீரம். Show all posts

Thursday, October 26, 2023

ஒரு நேர்மையான அரசன்

_*ஒரு நேர்மையான அரசன்*_
ஒரு உயர்ந்த மலை. அந்த உயரத்தில் இருந்து ஆர்ப்பாட்டமா கொட்டுகிற ஒரு நீர்வீழ்ச்சி. ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு வந்ததுக்கு அப்புறம் அந்த அருவி இரண்டு ஆறுகளா பிரியும். ஒன்னு மலைக்கு இந்த பக்கமாவும் இன்னொன்னு மலைக்கு அந்த பக்கமாவும் பாயும். மலையின் இரு புறமும் இரண்டு வெவ்வேறு நாடுகள் இருந்தன. ஒன்றின் பெயர் வல நாடு மற்றொன்றின் பெயர் இட நாடு என்று வைத்துக்கொள்வோம். 

இரண்டு நாடுகளுக்கும் எப்போதும் சண்டை நடந்து கொண்டே இருக்கும். அந்த மலையின் வளங்கள் யாருக்கு சொந்தம் என்பது குறித்து தொடர்ந்து பிரச்சினையாகவே இருந்து வந்தது.

பலமுறை முயற்சித்தும் வலநாட்டு மன்னனால் ஒருமுறை கூட இட நாட்டு மன்னனை போரில் தோற்கடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் ஒற்றர்கள் மூலம் ஒரு வாலிபன் மன்னரை தனியாக சந்திக்க விரும்புவதாக ஒரு செய்தி வந்தது.அரசனும் அவனைத் தனிமையில் சந்தித்தார்.

அப்போது அந்த வாலிபன் நான் பக்கத்தில் உள்ள இடநாட்டு மன்னனின் மெய்க் காப்பாளர்களில் ஒருவன். எங்கள் நாட்டின் போர்ப்படைத் தளபதி ஒருவர் சமீபத்தில் இறந்த பிறகு, தகுதி அடிப்படையில் எனக்குத் தான் அந்தத் தளபதி பதவி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எங்கள் மன்னர் தன்னுடைய மருமகனுக்கு அந்தப் பதவியைக் கொடுத்து விட்டார்.

இதனால் அவரை சும்மா விடக்கூடாது என்ற ஆத்திரத்தில் இருக்கிறேன். நீங்கள் இதுவரை அவரை வெல்ல எவ்வளவோ முறை முயற்சித்தும் முடியாமல் போயிற்று. 

 நாளை எங்கள் மன்னர் மாறுவேடத்தில் உங்கள் நாட்டின் பக்கமுள்ள காட்டின் நடுவே இருக்கும் ஆலயத்திற்கு பூஜை செய்ய வருகிறார். 

நீங்களும் மாறுவேடமிட்டு சில வீரர்களோடு வந்தால் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவரைக் கொல்லவோ கைது செய்யவோ முடியும். 
என்று கூறினான்.

மன்னரும் சரி என்று கூறி அவனை அனுப்பி விட்டார். அவன் சொன்னது போலவே இடநாட்டு மன்னன் வருவதற்கு முன்பே அவனுக்காகப் பக்கத்தில் இருந்த ஒரு குகையில் சில வீரர்களோடு காத்திருந்தார்.

பூஜையின் போது இடநாட்டு மன்னனோடு, துரோகியாக மாறி செய்தி சொன்ன மெய்க் காப்பாளனும் உடனிருந்தான். தன்னுடைய திட்டம் பலிக்கப் போகிறது என்ற கற்பனையுடன் குள்ளநரியைப் போலக் காந்திருந்தான். 

இடநாட்டு மன்னன் பூஜையை முடிக்கும் வரை காத்திருந்து அவர் முன்னே போய் நின்றான் வலநாட்டு மன்னர். ஆனால் அந்த மெய்க்காப்பாளன் கூறியது போல மாறுவேடம் எதுவும் போடாமல் போய் நின்றார். 

திடீரென்று அவரை அங்கே பார்த்தவுடன் இட நாட்டு மன்னனுக்கு பலத்த அதிர்ச்சி.
குறைந்த வீரர்கள் மட்டுமே இருக்கிறார்களே? முன்னெச்சரிக்கை இல்லாமல் வந்து விட்டோமோ என்று யோசிக்கும் போது,

வல நாட்டு மன்னன் பயப்பட வேண்டாம். நாங்கள் உங்களை எதுவும் செய்ய மாட்டோம்.

இன்று நீங்கள் எங்கள் பகுதிக்கு வந்திருக்கிறீர்கள். எங்களுடைய விருந்தாளி. நீங்கள் இங்கே வரப்போவதாக உங்களுடைய நாட்டைச் சேர்ந்த துரோகி ஒருவனால் முன்கூட்டியே தகவல் கிடைத்தது.

உங்களுடன் நேருக்கு நேர் நின்று போரிட்டு வெல்வது தான் எனக்கு பெருமையேத் தவிர சூழ்ச்சி செய்து சிறைப் பிடிப்பது மன்னனுக்கு அழகல்ல. 

மேலும் நீங்கள் என்னைப் போன்ற எதிரிகளிடம் கவனமாக இருப்பதை விட உங்கள் கூடவே இருக்கும் துரோகிகளிடம் தான் அதிகக் கவனமாக இருக்க வேண்டும், என்று கூறினார்.

இதைக் கேட்டதும் அந்த மெய்க் காப்பாளனுக்கு நடுக்கம் எடுத்து விட்டது. போச்சு இன்று நாம் செத்தோம் என்று மனதுக்குள் நினைத்தான்.

விஷயத்தை கேட்டதும் யார் அந்த துரோகி என்று தன் வாளை எடுத்தார் இட நாட்டு மன்னர். 
ஒருவரைக் காட்டிக் கொடுப்பதைப் போன்ற படுபாதகம் எதுவும் இல்லை. அந்தத் தவறை நான் செய்ய மாட்டேன் என்று மறுத்துவிட்டார் வல நாட்டு மன்னர்.

வல நாட்டு மன்னரின் பெருந்தன்மையான செயலைக் கண்டு நெகிழ்ந்து போனார் இட நாட்டு மன்னர். முந்தைய போர்களில் தான் செய்த தவறுகளுக்காகவும் மன்னிப்பு கேட்டார். அதன் பிறகு இரண்டு நாடுகளும் நட்பு நாடுகளாகவே தொடர்ந்தன. மலையின் வளங்களை சரிசமமாக பங்கிட்டுக் கொள்வதோடு மலையையும் இரு நாடுகளும் சேர்ந்து பாதுகாப்பதாக உறுதி எடுத்துக் கொண்டன.

 _*Magi Channel*_

Saturday, April 06, 2013

மயானத்தில் ஒரு மனுஷி ~நன்றி தினமலர்


  • http://www.dinamalar.com/news_detail.asp?id=683910
    பெண்ணாகப்பட்டவர்கள், இன்றைக்கும் சுடுகாட்டின் சூழலை தாங்கக்கூடிய பக்குவம் இல்லாதவர்கள், அங்கு எரியூட்டப்படும் அல்லது புதைக்கப்படும் பிணத்தை பார்க்கும் சக்தி கொண்டவர்கள் கிடையாது.
    இப்படி சொல்லப்படும் காரணங்களினால்... எவ்வளவுதான் தனக்கு பிரியப்பட்ட கணவர், தந்தை, தனயன் என்ற உறவாக இருந்தாலும், மரணம் என்ற பிரிவு வரும்போது, வீட்டு வாசலோடு நின்று, இறந்த உறவுகளை வழியனுப்பி வைக்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறார்கள்.
    இந்த சூழ்நிலையில், இரவு நேரங்களில் வரும் பிணத்தைக்கூட எரிக்கும், புதைக்கும் பக்குவத்துடன் ஒரு பெண் இருக்கிறார் என்றால் ஆச்சரியம்தானே.
    ஆச்சரியமூட்டும் அந்த பெண்ணின் பெயர் வைரமணி, கோவை சொக்கம்புதூர் சுடுகாட்டில் வெட்டியான்(ள்) வேலை பார்த்து வருகிறார்.
    இரவு பத்து மணியளவில் சுடுகாட்டில் எரிந்து கொண்டு இருக்கும் ஒரு பிணத்தை சரிவர எரிகிறதா என்று அருகே இருந்த பார்த்தபடியும், அவ்வப்போது நெருப்பை தூண்டிவிட்டபடியும் தன்னந்தனியாக நிற்கிறார்.
    பிணத்தை எரித்து முடித்த பிறகே பேசத்துவங்குகிறார்.
    என் அப்பா கருப்பசாமிதான் இந்த வெட்டியான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார், எனக்கு எழுதப் படிக்க தெரியாது, ரொம்ப சின்ன வயசிலேயே எனக்கு கல்யாணமாகிருச்சு, மூணு குழந்தைகள் இருக்காங்க, வீட்டுக்காரருக்கு போதுமான வருமானம் இல்லை, இந்த நிலையில் திடீர்னு அப்பா இறந்துட்டாரு, அவர் பார்த்த வெட்டியான் வேலையை எடுத்துப் பார்க்க யாரும் முன்வரலை, குடும்ப சுமையை குறைச்சுக்கலாம், பிள்ளைகள நல்லா படிக்க வைக்கலாம் அப்படிங்ற எண்ணத்துல இந்த வெட்டியான் வேலையை நான் எடுத்துக்கிட்டேன்.
    அப்பா பக்கத்துலயே இருந்து இந்த வேலைய பல நாள் பார்த்ததுனால, எனக்கு எந்த பயமோ, தயக்கமும் இல்லை, இந்த பேய், பிசாசு மேலே துளியும் நம்பிக்கை இல்லை, உண்மைய சொல்லப் போனா இந்த சுடுகாட்டை சிவன் வாசம் செய்யும் கோயிலாத்தான் நான் பார்க்கிறேன்., இந்த தொழிலுக்கு வந்து இப்ப பதினைந்து வருஷமாகப் போகுது.,
    பிணத்தை புதைக்கணும்னாலும் சரி, எரிக்கணும்னாலும் சரி இரண்டாயிரம் ரூபாய் கூலி வாங்குகிறேன். இதுல விறகு மற்றும் உதவியாள் கூலி போக எனக்கு ஐநூறு ரூபாய் மிஞ்சுனா அதிகம்.
    ஒரு பிணத்தை எரிக்கணும்னாலும் சரி, புதைக்கணும்னாலும் சரி ஆறு மணி நேரம் எங்களுக்கு வேலை எடுக்கும். சாயந்திரம் பிணத்தை கொண்டுவர்ரோம், எரிக்கணும், எல்லா ஏற்பாடும் செஞ்சு வையுங்க என்று சொல்லி முன்பணம் கொடுத்து செல்பவர்கள், திடீர்னு நள்ளிரவு நேரத்திற்கு பிணத்தை கொண்டு வந்து கொள்ளிவச்சுட்டு போயிடுவாங்க, நான் தனியாள நின்னு எரிச்சு முடிப்பேன்.
    செத்தது கோடீசுவரான இருக்கும், ஆன எனக்கு கொடுக்கவேண்டிய கூலியை கொடுக்க ரொம்பவே பேரம் பேசுவாங்க, "கொடுக்கிறத கொடுங்கப்பான்னு கேட்டு வாங்கிப்பேன்'. குழந்தைகள் பிணத்தை பார்க்கும் போது மட்டும் மனசு வேதனையா இருக்கும், மற்றபடி பிணங்களை பார்த்து, பார்த்து பழகிப்போச்சு.
    பிணத்தை எரிக்கும் போது நூல் கயிறு கூட இருக்காது, ஆனாலும் அந்த பிணத்தின் கையில இருந்து கழட்டின கால் பவுன் மோதிரத்தை யாரு எடுத்துக்கிறதுன்னு சுடுகாட்டிலேயே சண்டைபோட்டு மண்டைய ஒடைச்சுக்குவாங்க, போகும் போது எதையும் கொண்டு போகமுடியாதுங்கிறத கண் எதிரே பார்த்துக்கிட்டே, இந்த ஜனங்க கால் பவுனுக்கு சண்டை போடுறத பார்க்கும் போது வேடிக்கையாத்தான் இருக்கும்.
    உலகம் ரொம்ப அவசரமாயிடுச்சு இப்ப யாருக்கும் ஆற அமர சுடுகாட்டில் நின்று பிணத்தை எரிக்கவோ, புதைக்கவோ பொறுமையில்லை, அதுனால மின் மயானத்திற்கு போய் பத்து நிமிடத்துல வேலையை முடிக்கத்தான் விரும்புறாங்க, இதன் காரணமா இப்ப எனக்கு கொஞ்சம் தொழில் "டல்' தாங்க...மாதத்திற்கு நாலோ, ஐந்தோ பிணங்கள் வர்றதே அதிகம் என்று கூறிய வைரமணியை மூன்று விஷயத்திற்காக பாராட்டியே ஆக வேண்டும்.
    முதல் விஷயம் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள எந்த வெட்டியானை எடுத்துப் பார்த்தாலும் குடிப்பழக்கம் இருக்கும், கேட்டால் பிணத்தோடு கிடக்கிறோம் அதுனால குடியை விடமுடியாதுங்க என்பார்கள்"அதற்கும்' தனியாக பணம் கேட்டு வாங்கிக் கொள்வார்கள்,ஆனால் வைரமணிக்கு அப்படி பழக்கம் எதுவும் கிடையாது,எல்லாம் மனசு தாங்க காரணம் என்கிறார் எளிமையாக., ஒன்று, ஆதரவில்லாமல் அனாதையாக இறந்து போனவர்களின் பிணங்களை, கூலி கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, பணத்திற்கு முக்கியத்துவம் தராமல், இறந்து போன பிணத்திற்கு முக்கியத்துவம் தந்து, உறவினர்கள் செய்வது போல காரியம் எல்லாம் செய்து உரிய மரியாதையுடன் பிணத்தை புதைக்கிறார்.
    இரண்டாவதாக, குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தொழிலை செய்து வருகிறார், இருந்தாலும் இதற்கென நிர்ணயம் செய்த தொகையைத் தவிர கூடுதலாக வாங்குவதில்லை, உழைக்காமல் மற்றவர்கள் பணத்தை உதவியாக பெறுவதிலும் விருப்பமில்லை, ஆகவே என்னைப் பற்றி எழுதுங்க, ஆனா நான் ரொம்ப கஷ்டப்படுறேன் யாராவது உதவுங்களேன் என்றெல்லாம் அர்த்தம் வரும்படியா எழுதிராதீங்க என்றவர் இதனாலேயே தனது தொடர்பு எண் வேண்டாம் என்று தவிர்த்துவிட்டார்.
    எவ்வளவு இருந்தாலும் இன்னும் யாராவது,ஏதாவது கொடுப்பார்களா என்று ஏங்கித் தவிக்கும் இந்த உலகத்தில் தனக்கு சிரமம் என்ற போதிலும், தனது உழைப்பில் கிடைக்கும் பணம் மட்டுமே போதும் என்ற வைராக்கியத்துடன் வாழும் வைரமணி சந்தேகமே இல்லாமல் ஒரு வித்தியாசமான நம்பிக்கை மனுஷிதான்.

    - எல்.முருகராஜ்

Sunday, March 17, 2013

வைரமணி அவள் வீரமணி ~ மகேந்திரன்






பெண்கள் நாட்டின் கண்கள்!, மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!,
முற்காலத்தில் “பெண்” எனும் சொல் எழும் முன் கல்லிக்காய் அழித்ததாம் பெண்ணை!
இன்றோ பெண் எனும் சொல் கேட்கும் முன் மனதில் தோன்றுவது சாதனைகளும் சாகசங்களும் தான்.
ஆம்!
நம் நாட்டை ஆள்வதும் பெண்தான்!
நம்மை பெற்றவளும் பெண்தான்!
நம்மை தாங்குவதும் பெண்தான்!
பெண் இல்லையேல் உலகத்தில் மனித இனம் ஏது?

பெண்கள் சாதிக்காத துறை எதுவும் இல்லை. எல்லாத்துறையிலும் ஆண்களுக்கு ஈடாக பெண்களும் சாதித்து வருகிறார்கள். ஆண்களுக்கு எந்த விதத்திலும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை பல சமயங்களில் பெண்கள் நிருபித்துக்காட்டிக்கொண்டு இருக்கிறார்கள் . பெண்ணின் துணிச்சலும் அந்த அளவிற்கு உயர்ந்துவருகிறது .
பிணம் என்றாலே பெண்களை அருகில் விடுவது இல்லை, இறந்தவர்களை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு போவதென்றால் கூட ஆண்கள் மட்டும் தான் செல்வார்கள். இந்த காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது.

கோவையில் ஒரு மயானத்தில் வெட்டியானாக வைரமணி 30வயது என்னும் பெண்மணி தனது பத்துவயது முதலாக தனது தந்தை கருப்புசாமி பணி புரிந்த வெட்டியான் வேலையை அவரைத்தொடர்ந்து இருவது வருடமாக செய்துக்கொண்டு இருக்கிறார் .
இவருக்கு ரஜி என்னும் கணவரும் கட்டிடத் தொழிலாளி, இரண்டு மகள்களும் , ஒருமகனும் இருக்கிறார்கள். குழந்தைகள் படிப்பதற்கும் வாழ்கையை நடத்துவதற்கும் கணவனின் சம்பாத்தியம் போக வைரமணியின் இந்த வெட்டியான் வேலையும் தான் கைகொடுக்கிறதாம்.

இதுவரை ஆயிரக்கணக்கான பிணங்களை அடக்கம் செய்துள்ளதாகவும் , அதற்கு குழிகளை வெட்டுவது பிணங்களை குழிக்குள் இறக்குவது மட்டும் இல்லாமல் அடக்கம் செய்வதற்கு இறந்தவர்களின் சமுதாயப்படி வெட்டியானின் சடங்குகள் என இந்த வைரமணியே பார்த்துக்கொள்கிறார். நேரம் காலம் பார்ப்பது இல்லை இரவு 10, 11 மணி ஆனாலும் தனியொருவராகவே சுடுகாட்டில் குழிகளை வெட்டி பிணங்கள் வந்தால் அதை அடக்கம் செய்வாராம் .

வைரமணி மேலும் கூறும்போது வெட்டியான் பணி நியமனம் ஆனாலும் அரசாங்கத்திடம் இருந்து எந்த சம்பளமும் இதுவரை வந்தது இல்லை. இப்போது மின் மயானம் வந்துவிட்டதால் பிணங்களை அதில் எரித்துவிடுகிறார்கள். ஆகையால் மாதத்திற்கு ஒருசில பிணங்கள் மட்டுமே புதைப்பதற்கு கொண்டுவருகிறார்கள், இப்படி வரும் ஒருசில பிணங்களை அடக்கம் செய்தவுடன் அடக்கம் செய்ததற்கு இறந்தவர்களின் உறவினர்கள் தரும் சிறுதொகை மட்டுமே சம்பளமாக உள்ளதாம். அதை வைத்துக்கொண்டு எங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்கிறது .

எப்பேர் பட்ட விஷயம்ங்க வாழ்க்கை'யின் அர்த்தங்களை முழுமையாக தினந்தோரும் உணர்பவர் இந்த வெட்டியான் தான்.
இப்படிப்பட்ட பெண்களை பார்க்கும் போது பெண்கள் தெய்வமாக நினைப்பதுடன் .

~மேலும்  வைரமணி பற்றி தினமலரில் வெளியான காணொளி செய்தி இங்க http://www.dinamalar.com/video_inner.asp?news_id=19120&cat=32#.UVMSnr2HlMs.facebook
பெண்களை ஒரு போதை பொருளாக, நினைக்கும், அடிமையாக நடத்தும் சிலர் இந்த நாட்டிற்கு அவமான சின்னமாக இருக்கிறார்கள் .


~மகேந்திரன்.