Showing posts with label மகியின் கவிதைகள். Show all posts
Showing posts with label மகியின் கவிதைகள். Show all posts

Wednesday, May 16, 2012

உணர்ந்தால் போதும்...

என் கவிதைகளை
எல்லாம்
நீ
படிக்கும் போது
நான்
இங்கு இருப்பேனா.?
எனத் தெரியாது..!
ஆனால்
இதை படிக்கும் போது
இதெல்லாம்
உனக்காகத் தான் எழுதினேன்
என
நீ
உணர்ந்தால் போதும்...


Tuesday, December 13, 2011

கிளிகள் ஏமாற்றம் அடையாது..♥

நீ
வந்து நீரூற்று
இலவம் காயும்
பழுக்கும்..!
கிளிகள் ஏமாற்றம்
அடையாது..♥



குளத்தில் குளிக்கவரும்
நிலவை
ரசிக்க
கரையோரம் காத்திருக்கும்
ஆறறிவு மரம்
நான்..♥


என்றோ வரும்
கனவல்ல
நீ
என்றும் தொடரும்
இரவும் , பகலும்
நீ
எனக்கு?

நேற்று
மழைக்கு
நீ ஒதுங்கிய மரம்
என நினைக்கிறேன் ...
இன்று
இலைகளிலும்
பூக்கள் முளைத்துள்ளது..♥

பூக்களின் புன்னகையை
பின்தொடர்ந்தாள்
உன்
முகவரியை
கண்டுகொள்ளலாம்..♥

உன்
நினைவுகளில் இருந்து
என்னால்
தப்பிக்க முடியாது..!
உன்
நினைவுகளுக்குள்ளேயே
ஒளிவது தவிர
வேறு வழியும்
இல்லை..♥



ஜன்னல் வழி
விழும் அழகு நிலவொளி
உன்னை நினைவு
படுத்துகிறது..!
அதை
எடுத்து மடித்து
வைக்க வேண்டும்..!
நீ
இல்லாத பொழுதில்
உன்னை ரசிக்க..!



என்
கவிதை எல்லாமே
அழகு ஆனால்
பொய்..!
நீ
மட்டும் அழகு
ஆனால் பொய் அல்ல..♥

"காதல்"
செய்யாத தவருக்குதான்
நினைவுகளால்
தண்டனை
குடுக்கும்..♥


 
என்
மௌனம்
உன் செவியடைதிருக்கிறது...
எனக்குள்ளே
கதறுவது
உனக்கு எப்படி கேட்க்கும்..?


 
வெயிலுக்கு
குடைபிடிக்க மழை
வந்தது போல...
தீபதிர்க்காக
காத்திருக்கும் கார்த்திகையில்
நீ வருகிறாய்..♥

தேவதை
எல்லாம் வெள்ளை நிறம்
என
யார் சொன்னது..!
நீ
கருப்பு நிற தேவதை..♥





நீ
மலையா.?
மழையா.?
என்னை
நசுக்கவும் செய்கிறாய்.?
நனைக்கவும் செய்கிறாய்.?



நான்
இருக்கும் வரை
என்
சரிபாதி ..நீ
இறந்தபின்
என்
சமாதி ..நீ



எனக்கு இன்னொரு முகவரியும் உண்டு தெரியுமா...?
உன் பார்வை,
உன் நிழல்,
உன் நியாபகம்,
நீ..♥



உன்
புன்னகை
பூக்களின்
ஜாதிப்பெயர்...♥