Showing posts with label காதலி. Show all posts
Showing posts with label காதலி. Show all posts

Monday, February 17, 2025

இமைகளின் காதல்

*இமைகளின் காதல்* 

என் காதலியின் புகைப்படத்தை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருக்கும் வேளையில், 'நீ உன் காதலியைப் பார்க்க வேண்டும் என்பதற்காக எங்களைக் கட்டித் தழுவ விடாமல் தடுப்பது நியாயமா' என்று என்னைப் பார்த்துக் கேட்டன என் இமைகள்.

இது என்னடா புதுத் தடங்கல் என்று பதைத்தபடி, என் இமைகளிடம் கேட்டேன்  ‘ஏன்... நீங்களும் காதலிக்கிறீர்களா' என.

'ஆம்... பிறந்ததில் இருந்தே நாங்கள் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம். அதனாலேயே நீ விழித்திருக்கும்போது நொடிக்கு ஒரு முறையும், நீ தூங்க ஆரம்பித்தால், கண் விழிக்கும் வரையும் கட்டித் தழுவி முத்தமிட்டபடியே இருப்போம்' என்றன இமைகள்.

ஊரார் காதலை ஊட்டி வளர்த்தால், தன் காதல் தானே வளரும் என்கிற ஆசையில் என் கண்களை கொஞ்சம் மூடி, இமைகள் இரண்டையும் கட்டித் தழுவ விட்டேன்.

மூடிய கண்களுக்குள் 
உள்ளே ஓங்கி வளர்ந்து காட்சி தந்தாள் என் காதலி.

அதற்குள் அறைக்குள் வந்த என் காதலி நான் வரும்வரை காத்திருக்காமல் எப்படி நீ உறங்கலாம் என்று என்னிடம் சண்டை போடுகிறாள் 😒

~மகி ~

Sunday, March 24, 2013

கொள்ள வந்தாயா..? கொல்ல வந்தாயா..? ~மகியின் கவிதைகள்

நீ
காதல் கொள்வதற்கு வந்தாயா
காதலால் கொல்வதற்கு வந்தாயா

என புரியவில்லை...

அருகில் இருப்பாய்
பார்வைகளால் கொல்வாய்...

தூரத்தில் இருப்பாய்
ஞாபகத்தால் கொல்வாய்...

யாரடி நீ மோகினி..?

 

 

நட்பின்
இலக்கணம் அனைத்தும்
நிறைந்த காதலியடி
நீ...

உனக்கும் எனக்கும் போட்டி வரும்...
சண்டை வரும்...

எல்லாவற்றிக்கும்
உன்னை விட்டுக்கொடுத்து
என்னையே
ஜெய்க்க வைக்கிறாயடி
நீ..!

 

உன்னைவிட
நான்
ஒன்றும்
அவளவு அழகு இல்லை...

ஆனாலும்

உன்னோடு
நான்
இருக்கும்
ஒவ்வொரு கணமும்
இந்த
உலகிலேயே
நான் தான் பேரழகனாய்
தெரிகிறேன்..! 

 

உன்
துன்பங்களுக்கு
என்
தோள்களுக்கு மட்டுமே
பாரமாக இருக்க வேண்டும்
என்று
நீ
விண்ணப்பிக்கும் போது

இருந்த
துன்பங்கள் எல்லாம்
எங்குப்போய் தொலைந்ததோ..!?

 

 

 

உன்னுடைய
கோவங்கள் எல்லாவற்றையும்
எவனோ
ஒருவனுக்காக
சமாதானம் ஆகிறது...

அந்த
எவனோ ஒருவன்
நான் என இருக்கும் போது
உன்னை
நேசிக்காமல்
எப்படி அடி இருக்க
முடியும்..! 

 

உனக்கு
எதெல்லாம் பிடிக்காது
என்று
எனக்கு கற்றுத்தரும்
உன்
கோவம்
எனக்கு ரொம்ப பிடிக்கும்..!

 

சிலநேரம்
உன்னை நினைப்பதை கூட
நிறுத்திவிட்டு
துடிக்க பார்க்கிறது
என் இதயம்...

வெட்டியாக
எதற்கு துடிக்கனும்
என்று தெரியவில்லை...

உன்னை நினைத்தாலே
நூறுவருடம் வாழ்வேனே..! 

Saturday, October 22, 2011

மனைவியாகும் பாக்கியம்..♥

காதல்
கவிதை எழுதும்
யாருக்கும்
அதிர்ஷ்டம் இருந்ததாக
அறிந்தது இல்லை..!
காதலியே
மனைவியாகும்
பாக்கியம்..♥