Showing posts with label பெண் என்றும் தேவதை என்றும். Show all posts
Showing posts with label பெண் என்றும் தேவதை என்றும். Show all posts

Sunday, January 22, 2012

பெண் என்றும் தேவதை என்றும்...

உன்
புறக்கணிப்பு
எனக்கு
புரியவில்லை..!
என்
எதிர் பார்ப்பு
உனக்கு
தெரியவில்லை..♥


உன்னிடம்
தவிர வேறு யாரிடம்
என்னை பழக விட்டு
இருக்கிறாய்..?
உன்னை
தான் படிக்க வேண்டும்
என்று கட்டளை இடுகிறாய்....
உன்
கவிதையை கூட
படிக்க தடை கொடுகிறாய்..!



ஒருவேளை
இவன்
உண்மையாக
உன்னை காதலித்து இருக்க மாட்டானோ...
என்று
நினைத்து விடாதே...!
நான்
இருக்கேனோ இல்லையோ
காதல் தற்கொலை செய்து
கொள்ள கூடாது ..!


பூப்பதும்,
புன்னகைப்பதும்
பூ என்றால்...
உன்னை
ஏன்
பெண் என்றும் தேவதை
என்றும்
சொல்ல வேண்டும்..♥


இதுவரை
நான் கண்ட தோல்விகள்
எல்லாம்
தோல்விகள் அல்ல
நீ
எனக்கு கிடைத்து விட்டால்..!
இனி
நான்
பெறப்போகும் வெற்றிகள்
எல்லாம்
வெற்றிகள் அல்ல
நீ என்னை பிரிந்தால்..!



தாயை போல
அன்பு கொடுக்க
துணையே
உன்னைவிட வேறு
எந்த
உறவாவது
இனி பிறக்குமா..?