Showing posts with label சன்மானம். Show all posts
Showing posts with label சன்மானம். Show all posts

Friday, March 01, 2013

கடவுளை காணவில்லை

****கடந்த சில நூற்றாண்டுகளாக கடவுளை காணவில்லை****


ஆகையால் கடவுள் காணாமல் போனதனால் மனிதன் பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளான்.
கடவுள் காணாமல் போனதனால் மனிதன் பல பாவங்களுக்கு உள்ளாகி இருக்கிறான். கடவள் காணாமல் போனதனால் மனிதன் பல பாவ செயலுக்கு துணை போகிறான்,
கடவுள் காணமல் போனதனால் மனிதன், நானே கடவுள் என்று தலை கனத்துடன் இருக்கிறான் ,
கடவுள் காணாமல் போனதனால் மனிதன் மனிதனாக காட்சி அளிக்காமல் ஒரு ஜந்துவை விட கேவலமாக காட்சியளிக்கிறான் ,
கடவுள் காணாமல் போனதனால் சட்டங்களையே சாட்சியாக கொண்டு கொலைகளை கூட புனிதமாக்குகிறான்,
கடவுள் காணாமல் போனதனால் மனிதனுக்கு கல்லுக்கும் கடவுளுக்கும் வித்யாசம் தெரியாமல் இருக்கிறான்,
கடவுள் காணாமல் போனதனால் மனிதன் மலர்களை கூட நிம்மிதியாக மரணிக்க விடாமல் மலர்களை தூக்கில் இடுகிறான்,
கடவுள் இருக்கும் இடம் தெரியாமல் கடல், மலை, காடு ,கடுகு, தூண், துரும்பு , கண்டம், அண்டம் என தேடாத இடம் இல்லை கடவுள் கண்டு பிடிக்க முடியவில்லை.

கடவுளின் உட்பொருள் தெரியாமல் தேடுகிறான் மனிதன் .
கடவுள் இதன் உட் பொருள் கட+உள் அதாவது உன்னுள் ஊடுருவி பார் கடவுளை காணலாம் .

நீயே கடவுள் நீ உன்னை கண்டால், ஒவ்வொருவரிடமும் கடவுள் உட்கொண்டு இருக்கிறான் ,  கடவுளை காணும் அவசியம் அது  உன்னைத்தேட வேண்டி இருக்கட்டும் .

~மகேந்திரன்