Showing posts with label உடல்தானம். Show all posts
Showing posts with label உடல்தானம். Show all posts

Thursday, June 05, 2014

நீங்களும் உடல்தானம் செய்யலாம் செய்யணும்.

கோவை ஜூன் 03 : இறந்த உடல் மண்ணுக்கு மட்டும் உரமாக பயனாகி வந்தது போதும். மனிதர்களுக்கும் பயனாகட்டும் என்ற உன்னதத்தின் வெளிப்பாடே உடல் தானம். இறந்த உடல் மருத்துவ கல்லூரி மாணவர்களின் பயிற்சிக்கு தரப்படும் போது அவர்களின் ஆராய்ச்சிக்கும், பயிற்சிக்கும் பயன்படும் போது புதிய கண்டுபிடுப்புகளுக்கும் வழி வகுக்கும், நல் மருத்துவம் மேம்படவும் வழி வகுக்கும்.

அந்த வகையில் உடல் தான விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஈரநெஞ்சம் அமைப்பு அவ்வப்போது நடத்தி வருகிறது. இதன் வழியாக பலர் தங்களது உடலை தானம் செய்ய அருகில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் பதிவு செய்து வருகின்றனர் .

கடந்த ஜனவரி 21 தேதியில் டெக்கான் கிரானிக்கிள் ( Deccan Chronicle )
ஆங்கில நாளிதழில் வெளிவந்த உடல்தானம் பற்றிய தகவலில் ஈரநெஞ்சம் அமைப்பு உடல்தானம் பற்றிய விளக்கம் கொடுத்திருந்தது.

அதன் வழியாக கோவை பார்க் கல்லூரி ( park college of engineering and
technology ) Dean திரு. H. சந்திர குப்தா 68 மற்றும் அவரது மனைவி
திருமதி H.விஜய லக்ஷ்மி 67. இருவரும் தங்களது உடலை இறப்புக்கு பிறகு கோவை அரசு மருத்துவ கல்லூரிக்கு தானம் செய்ய முன் வந்து ஈரநெஞ்சம் அமைப்பை தொடர்புகொண்டனர் . அதனை அடுத்து ஈரநெஞ்சம் அமைப்பின் உதவியுடன் திரு. H. சந்திர குப்தா மற்றும் அவரது மனைவி திருமதி H.விஜய லக்ஷ்மி இருவரும் 20 ரூபாய் பத்திரத்தில் தங்களது உடல் தானம் பற்றிய உயிலை நோட்டரி வக்கீல் முன்னிலையில் பதிவு செய்து கோவை அரசு மருத்துவ கல்லூரி HOD . திருமதி . M . ரோகிணி தேவி அவர்களிடம் வழங்கினார்.



நாம் மட்டுமல்ல நமக்கு பின் நம்முடைய உடலும் மற்றவர்களுக்கு பயனாக இருக்கட்டுமே !

நண்பர்களே !!!
நீங்களும் உடல்தானம் செய்ய விரும்பினால் தொடர்பு கொள்ளவும்...

ஈரநெஞ்சம் - 9080131500

Wednesday, May 22, 2013

"திண்டுக்கல்லின் முதல் பெண்மணி பரிமளாதேவி" ~ மகேந்திரன்



திண்டுக்கல் மாவட்டத்தில் படிப்பறிவு அதிகம் இல்லாத சின்னாளப்பட்டியில் உள்ள மேலகோம்பை என்னும்  குக் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் திருமதி. பரிமளா தேவி.வயது 43  மற்ற சராசரி பெண்களை போல் குடும்பத்தையும் , குழந்தைகளையும் மட்டும்உலகம் என இருக்காமல் , தன்னால் இயன்ற அளவு சமுதயாத்திற்கு உதவ வேண்டும் என உள்ளம் கொண்ட பெண்மணி . படித்தது பத்தாவது என்றாலும் இவரிடம்இருக்கும் திறமைகள் ஏராளம் .

கவிஞர் , எழுத்தாளர் , கைவினை கலைஞர் , சமுக சேவகி என இவரை பற்றிசொல்லி கொண்டே போகலாம் . சமீபத்தில் "மிதக்கும் சிற்பங்கள்" என்ற ஒரு அழகானகவிதை தொகுப்பினை  எழுதி வெளியிட்டுள்ளார் .  அதுமட்டுமில்லாமல் வீட்டில் தேவை இல்லாத பொருட்களை கூட அழகான உபயோகமான கைவினைபொருட்களாக மாற்றுவதில் வல்லமை படைத்தவர் . இவர் மட்டும் இதை செய்யாமல் வீட்டில் இருக்கும்பெண்களுக்கும், மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கும் , கல்லூரி  கல்லூரிகளிலும் சென்று  கைவினைபொருட்கள் செய்யும் பயிற்சியை  கற்று தருகிறார் . இதன் மூலமாகபயனடைந்தோர் ஏராளம். இவருடைய  சேவைகளுக்காக   இவரின் கணவர் ராஜாராம் , மகன் கார்த்திக் (இன்ஜினியரிங்இரண்டாமாண்டு)  இவருக்குமிகுந்த உறுதுணையாக உள்ளனர். 


அதுமட்டும் இல்லாமல்
மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு மருத்துவம் பயில இறந்தவர்களின் உடல்கள்தான் மிகிந்த அவசியம் தேவை என்பதை திருமதி. பரிமளா தேவி புரிந்து கொண்டு பிறந்தோம் இறந்தோம் என இல்லாமல் தன்னுடைய உடலை மருத்துவ கல்லூரிக்கு பெற்றவர்களின் எதிர்ப்பையும் மீறி தன்   கணவரின்  ஆதரவுடன் உடல் தானம் செய்ய   பதிவு  செய்துள்ளார் .இது  திண்டுக்கல் மாவட்டத்தில்முதல் உடல் தானம் செய்தவரும் இவரே என்னும் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் பெண்மணியாக  திகழ்கிறார்  திருமதி. பரிமளா தேவி. இதன் மூலமாக  இவர் உடல் தானத்தின் முக்கியத்துவத்தை விளக்கி தனது குடும்பத்தில் உள்ள  ஏழு பெறாது உடல்களையும் தானத்திற்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குரிப்புடதக்கது. மேலும் உடல்தானத்தை பற்றி  பல்வேறுவிழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி பலபேர்  உடல்தானம்  செய்ய முன்வந்து பதிவு செய்துவருகின்றனர்   .


அதுமட்டுமில்லாமல்தன்னுடைய 12ஆம் வயதிலேயே தன்னுடைய உறவினர் ஒருவருக்கு விபத்தினால் அடிபட்டு இரத்தம் தேவை பட்ட பொழுது மற்ற உறவினர்கள் கூடபயத்தினால் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இரத்த தானம் பற்றி  அறிந்து கொண்டு அது   விலைக்கு  வாங்கும் திரவம் அல்ல என்று உணர்ந்து ,    அன்று முதல் இன்று வரை இரத்த தானம் பற்றிய  விழிப்புணர்வு பிரசாரம் மற்றும்  தேவைபடுபவர்களுக்கு இரதம் சேகரித்து கொடுப்பதும்  திருமதி. பரிமளா தேவி தனது கடமையாக செய்து வருகிறார். . இவருடைய இத்தகையசேவை மனப்பான்மையை பாராட்டி திண்டுக்கல் ரோட்டரி கிளப் சார்பில்சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி அவர்கள் பரிமளா  தேவிக்கு சாதனைபெண் என்ற பாராட்டு  கிடைத்தது இவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை ஏற்ப்படுத்தி  இருப்பதாக கூறினார்.


பாராட்டுக்களும் ஊக்கங்களும் மட்டுமே இவர் போன்றோருக்கு ஒரு உந்துதல் சக்தி...
எனவே இப்படி சமுகத்திற்கு தன்னால் இயன்ற உதவிகளைசெய்து வரும் அவருக்கும் , அவருடைய குடும்பத்திற்க்கும் நம்
வாழ்த்துக்களைதெரிவிப்போம்  !!!


~மகேந்திரன்