Showing posts with label ஆறுதல் தரும் அவஸ்த்தை. Show all posts
Showing posts with label ஆறுதல் தரும் அவஸ்த்தை. Show all posts

Sunday, February 05, 2012

ஆறுதல் தரும் அவஸ்த்தை

ஒரு
முற்றுப்புள்ளிக்கூட
அழகான கவிதையாய்
இருக்கிறது...
உன்
நெற்றிப்பொட்டை
படித்ததில்
அதில்
அர்த்தம் புரிந்தது..♥


ஏதாவது
இருந்தால்தான்
திருடப்பட வேண்டும் ...
என்
இதையத்தை எதற்கு
திருடினாய்..♥


தலைமுறை தலைமுறைக்கா
சேர்த்துவைக்க போகிறாய்
கொஞ்சம்
சிந்திவிட்டு
போ...
உன்
புன்னகை பூக்களை..♥



என்
கண்ணே
எனக்கு பட்டுவிடும்
போலிருக்கிறது..!
என்
கண்ணில் உன் பின்பம்..♥


நீ
வரும் செய்தி
அறிந்ததும்
இதயம் விழிவரை
வந்து பார்க்கிறது..♥


எல்லா
நிழலிலும்
இருள் தான் இருக்கும்...
உன்
நிழலில் மட்டும்
ஒருவித
வெளிச்சம் இருக்கிறது..♥


நீ
செல்லும் இடமெல்லாம்
கம கம என
மல்லிகை வாசம் வீசுகிறது..!
உன்
பாத சுவடுகளில் எல்லாம்
வேலி போட்டு
பூங்கா அமைத்தால்
என்ன ..?


உன்னை
அலைட்சியப்படுத்த
முடியாது..!
நீ
ஆறுதல்
தரும்
அவஸ்த்தை..!


என்
தாய் மொழிக்கு
சந்தோசம்
நீ என்னோடு
தமிழில் பேசியதால்...
உன்
தாய் மொழிக்கு
கொடுப்பினை இல்லை
எனக்கு உன் மொழி தெரியாது..!