Showing posts with label oviyar. Show all posts
Showing posts with label oviyar. Show all posts

Sunday, October 27, 2013

இரண்டும் சேர்ந்த கலைஞன் பொன்ராஜ்.


எத்தனையோ தனித்திறமை வாய்ந்தவர்களை நாம் பார்த்திருப்போம். சிலருக்கு அபூர்வமான திறமைகளும் இருக்கும், ஆனால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட திறமைகளை வெளிப்படுத்தும் அதிசய திறமைசாலிகளை காண்பது அரிது அப்படிப்பட்ட திறமைசாலிகளை காணும்போது நம் மனதில் ஆச்சரியப் பூ பூப்பதில் ஆச்சர்யம் இல்லை. 

நாம் ஒரு செயலை செய்யும்போது கூட சில நேரங்களில் நம் கவனம் திசைமாறும் அல்லது சோம்பல் ஏற்ப்படும் ஆனால் கவனத்தை மாறாமல் ஒன்றுக்கும் மேற்பட்ட செயல்களை மிக நுணுக்கமாக ஒரே நேரத்தில் செய்து நம்மை வியப்பில் ஆல்துபவர்களை திறமைசாலி என்று பாராட்டாமல் இருப்போமா.

அப்படி ஒரு தனித்திறமை வாய்ந்தவர்தான் கோவை காந்திபுரத்தை சேர்ந்த சுப்பரமணி , சுந்தரி தம்பதியருக்கு பிறந்த திரு. பொன்ராஜ் 40 அவர்கள். அவரிடம் அந்த அற்புதமான திறமையை காணும்போது நிச்சயம் உங்களது விழிகளும் விரியும். அப்படி அவரிடம் அப்படிப்பட்ட திறமை என்ன என்று கேட்க்கதொன்றுகிறதா ?

இந்த LINK கை

https://www.youtube.com/watch?v=MMcBUp_5rP8&feature=youtube_gdata_player 





தவறாமல் பாருங்கள் ஆச்சர்யத்தில் மூழ்கி போவீர்கள்.

திரு.பொன்ராஜ் நல்ல பாடகர் இதில் சிறப்பு என்னவென்றால், பாடிக்கொண்டிருக்கும் போதே தன் கண்களால் தான் காணும் ஒன்றை தத்ரூபமாக வரையவும் செய்வார். தன் பாடலிலும் கவனத்தை செலுத்திக் கொண்டே அதே கவனம் மாறாமல் ஓவியமும் வரையும் அற்புதம் நிறைந்த கலைஞர் அவர். திரு. பொன்ராஜ் அவர்கள் தனது திறமைகளில் எந்த ஒன்றையும் அவர் முறையாக கற்று கொள்ளவில்லை என்றும் தனது அனுபவம் மற்றும் பயிற்சியின் மூலமாகவே சிறந்த கலைஞராக உருவாக வைத்தது . 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு மேல் படிப்புக்கு பெற்றோர்கள் கட்டாயப்படுத்த படிப்பில் விருப்பம் இசையின் மீதும் ஓவியத்தின் மீதும் ஆர்வம் கொண்ட்டிருந்ததாலும் தன் நண்பர்களின் ஊக்கம் மற்றும் தனது விடாமுயற்சி மற்றும் விடா பயிற்சியின் மூலமாக தான் இந்த திறனை வளர்த்துக் கொண்டதாக கூறுகிறார். தற்போது கோவையில் நூர்ப்பாலை எந்திரங்களை பழுதுபார்க்கும் பணியை செய்து கொண்டு பல இசை கச்சேரிகளில் இணைந்து இந்த திறமையை மக்கள் முன் காட்டி மக்களை வியப்பில் ஆள்திவருகிறார் . இப்படிப்பட்ட திறமைசாலிகள் காணும் போது நாமும் ஏதேனும் திறமைகளை வளர்த்துக்கொண்டால் என்ன என்று எண்ணம் ஒவ்வொருவருக்கும் உதிக்காலம் இருக்காது. அது மட்டும் அல்லாமல் முயற்சியும் பயிற்சியும் இருந்தால் எந்த ஒன்றையும் சாதிக்க முடியும் என்பதற்கு திரு. பொன்ராஜ் அவர்கள் சிறந்த உதாரணமாக இருக்கிறார். அவரது திறமையை என்னுடைய கானொளியில் (YouTube) கண்டு அவரது அந்த திறமையை பற்று உங்களது கருத்துக்களை கூறுங்கள். ~மகேந்திரன்