Showing posts with label பொன்னம்மாள். Show all posts
Showing posts with label பொன்னம்மாள். Show all posts

Monday, April 02, 2012

யாரும் அநாதை இல்லை~மகேந்திரன்

கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில்  சாலையோரமாக பரிதாப நிலையில்  புற்று நோயால்  பலகாலம் அவதிப்பட்டு வந்த பொன்னம்மாள் வயது 92  கடந்த 4/11/11 அன்று பொது மக்கள் உதவியுடன் அன்னை தெரேசா  காப்பகத்திற்கு நான்  அழைத்து செல்லப்பட்டு அங்கு அவர்களின் பராமரிப்பில் கவனித்து வரப்பட்டது அனைவருக்கும் தெரிந்தது...
கடந்த சில நாட்களாக பொன்னம்மாள் பாட்டிக்கு உடல் நிலை மோசமானது மருத்துவரிடம் அழைத்து செல்லப்பட்டு அங்கு அவருக்கு  சிகிச்சை பலன் அளிக்காமல் 30/03/12 மாலை அவரது உயிர் பிரிந்தது,  31/03/12 அன்று காலை 11:15 அவரது உடலை  நான்  எனது நண்பர்கள் தபசுராஜ் ,அருள் ராஜ், மகேஷ் குமார், ஸ்ரீ வசந்தா மற்றும் அன்னை தெரேசா  காப்பகம் உதவியுடன் கோவை புலியகுளம் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.