Showing posts with label தங்கை. Show all posts
Showing posts with label தங்கை. Show all posts

Thursday, July 17, 2014

அன்பு தங்கைக்கு

அன்பு தங்கை
அதென்ன அன்பு தங்கை ?

 


அன்பு என்றாலே தங்கைதான்.. அவசர பட்டு எழுதி விட்டேன்

அழகு என்னும் திமிர் பிடித்த பெண்கள் மத்தியில் , திமிரி வழிந்தோடும் அன்பு எடுத்தவள் நீ

திமிரி திரிந்த காளையாய் நான் இருக்க
கடிவாளம் உன் பாசமம்மா

நான் பிறந்த பயன் நீ என்னை அண்ணா என்று அழைத்தபோதே அடைந்துவிட்டேன் மா...

வேறென்ன வேணும் ஏழு ஜென்மத்திற்கு எனக்கு இந்த ஆசிர்வாதம் போதுமம்மா...

பாதி வயதிலே பல மடங்கு அனுபவம் வாய்ந்தவள் நீ...

நாடாளும் அரசன் நான் ஆனாலும் உந்தன் அறிவுரை வேணுமம்மா...

நீ சிரித்து மட்டும் பேச தெரிந்தவள் அல்ல அதில் சிந்தனை கலந்த சொல் கொண்ட சரஸ்வதி நீ யம்மா.

ஒருநாளும் உன் பேச்சை தட்டிப் போவேனா, என் எண்ணம் எல்லாம் தடம்புரள ஆவேனா !

நீ குழந்தை என்றாலும் எனக்கு உன் வாக்கு தெய்வவாக்கு தானம்மா
உனக்கு மூத்தவன் என்றாலும்

உனக்கு முதல் குழந்தை நான்தானம்மா
வாழ்வின் அர்த்தங்களில் முதலிடமாய் நீ..

சந்தேகம் வேண்டாம்.. அண்ணிக்கு ஆறு குழந்தை பெற்றாலும் அவளே சொல்லிடுவாள் அவளுக்கு மூத்த குழந்தை நீதான் என்று...

எத்தனை வெயில் காலம் , பனிக்காலம் மாறி மாறி வந்தாலும் நம் பாசக்காலம் மாறாது...

உன் பாசம் தொட்டுதான் என் பணியும் தொடங்கும்...

கோபத்தையும் கொள்ளும், அந்த கோபத்தையும் கொல்லும் சிரித்த பார்வை சக்தி உனக்கு.

உன் விருப்பம் அதுவென்று உனக்கென வாழாமல்
என் விருப்பம் உனதாக்கி உருகி வாழும் தேவமகள்...

வசந்த காலம் எனக்கு எது என்றால் உன் புன்னகை உதிரும் காலம்தான் .
எனக்கு இலையுதிர்காலம் எதுவென்றால் உன் கண்ணில் கண்ணீர் உதிரும் காலமம்மா...

உன் பாசம் கண்ட இந்த ஜென்மம் இது போதுமம்மா எனக்கு இன்னும் இரண்டு ஜென்மம் வேண்டும் அதில் ஒன்று
ஒரு தாய் வயிற்றில் நாம் பிறக்க பிறந்திட வேண்டும்...

அடுத்த ஜென்மம் உன் வயிற்றில் நான் பிறந்திட வேண்டும்...

உனக்காக நீ கவிதை கேட்டாயா அதற்கு இன்னும் எழுதலாம் ஆனால்
அதற்கு வான் கொண்ட காகிதம் போதாது.!!!

~மகி அண்ணா

Tuesday, October 04, 2011

உன்னால் ...

உன்னால்
நின்னைதவிர
மற்ற
எல்லா பெண்களும்
தங்கையாகி
போனார்கள்..♥